news-details
சிறப்புக்கட்டுரை
12 தந்திரங்கள் (கண்டனையோ... கேட்டனையோ... 33)

சிறு வயதில்அந்திக் கிறிஸ்துஎன்று சொல்லிக் கேட்டது, நான் அப்பொழுது ஒருவேளை சூரியன் சாய்ந்த பின்னால்அந்தியில்வருவானாக்கும் என்று நினைத்தேன். பின்னர்தான்அந்திஎன்பதுantiஎன்ற இலத்தீன் முன்னொட்டின் ஒலி பெயர்ப்பு என்று தெரிந்தது. பொது மொழிபெயர்ப்புத் திருவிவிலியம் அறிமுகப்படுத்தியஎதிர்க் கிறிஸ்துஎன்ற சொல்லாடல் இப்போது ஓரளவு எல்லாராலும் பயன்படுத்தப்பட்டு நிலைத் தன்மை பெற்றுவிட்டது. இன்னமும்அந்திக் கிறிஸ்துஎன்று சொல்பவர்களை அவனிடமே பிடித்துக்கொடுக்க வேண்டியதுதான்.

யார் இந்த எதிர்க் கிறிஸ்து?

திருவிவிலியத்தில் பல நூல்களில் இக்கருத்து வெளிப்பட்டாலும், ‘எதிர்க் கிறிஸ்துஎன்ற சொல்லாடல் யோவானின் மடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு இடங்களில் வருகிறது. அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்தால், எதிர்க் கிறிஸ்து குறித்துப் பின்வரும் சித்திரம் கிடைக்கிறது.

எதிர்க் கிறிஸ்து ஒரு பொய்யன். இயேசு கிறிஸ்து மெசியா இல்லை என்று பரப்புவதே அவனுடைய முழுநேர வேலை (1யோவா 2:22).

எதிர்க் கிறிஸ்து எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஓர் ஆள் அல்ல; அது எல்லாக் காலகட்டத்திலும் செயல்பாட்டில் இருக்கும் கடவுளுக்கு எதிரான ஒரு கொள்கை, சிந்தனைப்போக்கு (1யோவா 4: 3).

எதிர்க் கிறிஸ்து ஒரு தனித்த ஆள் கிடையாது. இயேசு கிறிஸ்து மனிதராக வந்தார் என்ற உண்மையை (Incarnation - மனுவுரு) மறுதலிக்கும் எல்லாருமே எதிர்க் கிறிஸ்துகள்தாம் (1யோவா 2:18; 2யோவா 1:7).

பவுலின் கடிதங்களில் எதிர்க் கிறிஸ்து என்ற பிரயோகம் இல்லை. ஆனால், 2தெசலோனிக்கர் 2:3-12 பகுதியில் அவர் பேசும்நெறிகெட்ட மனிதன்எதிர்க் கிறிஸ்து பிம்பத்திற்கு மிக அருகில் வருகிறான். அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். கோவிலில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடவுள் என்று காட்டிக்கொள்வான் (2தெச 2:4) என்று பவுல் கூறுகிறார். எதிர்க் கிறிஸ்து செய்வதும் இதுதான். அவன் வலிமை இந்தப் பொய்த் தோற்றமே. அவன் நல்லவன்போல நடிக்கிறான்; கிறிஸ்து போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். அவன் பெயரிலேயேகிறிஸ்துஇருக்கிறது. அதனால் பலர் ஏமாந்து போகிறார்கள். இரண்டு கொம்புகள் வைத்துக்கொண்டு, பெயின்ட் அடித்த இரப்பர் நாக்கு வெளியே தொங்க, நம் நாடகங்களில் வருவதுபோல தலை விரிக்கோலமாகத் தோன்றினால்அய்யோ பேய்என்று நாம் பதறி விலகிவிடலாம். ஆனால், பேய் ஷூ, பேண்ட் சட்டை எல்லாம் போட்டு, நம் பக்கத்து வீட்டுப் பையன் போல அல்லவா வருகிறது!

எதிர்க் கிறிஸ்துவை அடையாளம் காண்பது கடினம். நெறிகெட்ட மனிதன் ஓர் ஏமாற்றுக்காரன்அவன் போலி அருஞ்செயல்கள் கொண்டும், பொய் கொண்டும்  மக்களை வீழ்த்துகிறான் என்று 2தெச 2:9-12 கூறுகிறது. ‘எதிர்க் கிறிஸ்து, ‘நெறிகெட்ட மனிதன்என்ற இரு வேறு சொல்லாடல்களில், யோவானும் பவுலும் ஒன்றையே குறிப்பிடுகிறார்கள். கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்கச் செயல்படும் ஒரு நுட்பமான தீய ஆற்றல். திருவெளிப்பாடு 13-ஆம் பிரிவில் யோவான் குறிப்பிடும் விலங்கு பல நேரங்களில் எதிர்க் கிறிஸ்துவோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த விலங்கு குறித்துத் திருவெளிப்பாடு ஆசிரியர் கொடுக்கும் தரவுகளைச் சற்று ஆராயலாம்.

அது கடலிலிருந்து எழும்பி வருகிறது (திவெ 13:1). இதுதான் விலங்கு குறித்து யோவான் தரும் முதல் முக்கியத் தகவல். திருவிவிலியத்தில் கடல் என்பது கடவுளுக்கு எதிரான பிற இன அரசுகளை, சக்திகளைக் குறிக்கும் படிமம். லிவியத்தான் கடலில் வாழ்ந்த ஒரு பெருமிருகம். “நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்துவிட்டீர். லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரேஎன்று திபா 74:13-14 கூறுகிறது. எதிர்க் கிறிஸ்து கடவுளுக்கு எதிரான ஆற்றல்களிலிருந்து கிளம்பி வருவான். அவர்களின் பதிலாளாகச் செயல்படுவான்.

அது ஒரு கலவை விலங்கு. ‘Mongrelஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சிறுத்தையின் தோற்றம் - கரடியின் கால்கள் - சிங்கத்தின் வாய் (திவெ 13:2). புராணங்களில்தான் இதுபோன்ற விலங்குகள் உலாவும். அர்த்தம் - எதிர்க் கிறிஸ்து, உலகில் உள்ள பேராபத்துக் கொண்ட அனைத்துத் தீய ஆற்றல்களின் தொகுப்பாக இருப்பான்.     

அந்த விலங்கு ஒரு புதுமையை நிகழ்த்துகிறது. அதன் ஏழு தலைகளில் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்தது. எல்லாரும் விலங்கு செத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்தக் காயம் அவர்கள் பார்க்கப் பார்க்க அதிசயிக்கத்தக்க வகையில் குணமாகிறதுA medical miracle! இதனால் வியப்புற்று மக்கள் அவ்விலங்கைப் பின்தொடர்கிறார்கள். அதை வணங்கத் தொடங்குகிறார்கள் (திவெ 13:3-4). எதிர்க் கிறிஸ்து ஒரு பெரிய வித்தைக்காரன். இது போன்ற போலி அருஞ்செயல்களைக் கொண்டு மக்களை வீழ்த்துவதில் அவன் கில்லாடி!

விலங்கின் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் காணப்பட்டன  என்று திவெ 13:1 பகுதியும், அது வாய் திறந்து கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது என்று திவெ 13:6 பகுதியும் சொல்கின்றனஎதிர்க் கிறிஸ்துவின் முக்கியப் பணி, கடவுளுக்கு எதிராகப் புறணிகளைப் பரப்புவது. To give God a bad press. சொல், செயல் இரண்டிலும் அவன் அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதை இங்குக் காணலாம். கடவுளுக்கு எதிரான பழிப்புரைகளின் நடமாடும் அடையாளம் அவன்.

அந்த விலங்கு உலகின்மீது 42 மாதங்கள் அதிகாரம் செலுத்த விடப்பட்டது என்று திவெ 13:5 கூறுகிறது. இது ஒரு முக்கியமான காலத்தொகுப்பு. இதன் மூன்று வடிவங்களைத் திருவிவிலியத்தில் காணலாம். சில இடங்களில் 42 மாதங்கள் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, திவெ 11:5 மற்றும் திவெ 13: 5. சில இடங்களில் மூன்றரை வருடங்கள். உதாரணத்திற்கு, திவெ 12:14 மற்றும் தானியேல் 7:25. சில இடங்களில் 1260 நாள்கள். உதாரணத்திற்கு, திவெ 11:3 மற்றும் 12:6. மூன்று வடிவங்களும் ஒரே அளவு காலத்தையே குறிக்கின்றன. அதாவதுமூன்றரை வருடங்கள். 3.5 என்பது 7-இல் பாதி. 7 என்பது திருவிவிலியத்தில் முழுமையைக் குறிக்கும் ஓர் எண். அதில் பாதியான 3.5 ஒரு முழுமையற்ற எண். இது சொல்லும் அர்த்தம் என்ன? எதிர்க் கிறிஸ்துவின் அதிகாரம் முழுமையானது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அவன் ஆட்சி நீடிக்கும். பவுலடியார் கூறுவதுபோல, “ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார். அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும் (2தெச 2:8). God is the ultimate conqueror.

இறை ஊழியர் ஃபுல் டன் ஷீன் 1947-ஆம் ஆண்டுஎதிர்க் கிறிஸ்துவின் 12 தந்திரங்கள்என்ற தலைப்பில் கொடுத்த ஒரு மறையுரையின் ஒலி வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. ஷீன் ஓர் அமெரிக்க ஆயர். பிரபல மீடியா மறைப்பணியாளர். ரேடியோ, டி.வி. என்று அக்காலத்துத் தகவல்பரப்புச் சாதனங்களை நற்செய்தி அறிவிப்புக்காகப் பெரிய அளவில் பயன்படுத்தியவர். 80 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு மறையுரையை ஆயர் ஷீனின் சொந்தக் குரலில் இன்றும்  துல்லியமாகக் கேட்க முடிவதைவிட ஆச்சர்யம் தருவது, அவர் குறிப்பிட்ட எதிர்க் கிறிஸ்துவின் தந்திரங்கள் இப்போதும் வழக்கில் இருப்பதும், தீவிரமாகச் செயல்படுவதும்.

எதிர்க் கிறிஸ்து தன்னை ஒரு மாபெரும் மானுட வாதியாகக் காட்டிக்கொள்வான். அமைதி, பொருளாதார வளம், தன்னிறைவு பற்றி வாய் கிழியப் பேசுவான். அவற்றைக் கடவுளைச் சென்றடையும் வழிகளாக அல்லாமல், வாழ்வின் இலக்குகளாக நிலைநாட்டுவான்.

மக்கள் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றதுபோல, கடவுளைப் பற்றிப் புதிய புதிய கருத்துகள் கொண்ட புத்தகங்களை எழுதுவான். ‘எதுவும் பாவம் இல்லைஎன்பதே அவன் கொள்கை.

சோதிடத்தில் நம்பிக்கை கொள்ள மக்களைத் தூண்டுவான். ‘மனிதன் செய்யும் பாவங்களுக்குப் பொறுப்பாளி மனிதன் அல்லன், நட்சத்திரங்கள்என்று எல்லாரையும் நம்ப வைக்க முயல்வான்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு பெரிய விசயம் அல்ல; அது வெறும் அடக்கப்பட்ட பாலுணர்வு என்று கற்பிப்பான்.

சரி, தவறு என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே உண்மையான சகிப்புத் தன்மை (tolernace) என்று சொல்வான்.

திருமண முறிவுகள் அதிகமாகும். ஓர் ஆணுக்கும்-ஒரு பெண்ணுக்கும் இடையில் இருப்பதுதான் திருமணம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. இன்பமான வாழ்விற்கு இதரத் தொடர்புகளும் தேவை என்ற சிந்தனையைப் பரப்புவான்.

அன்புஎன்கிற கருத்தின்மீது  பெரிய கிளர்ச்சியை (love for love) உண்டு பண்ணி, பிற மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய உண்மையான அன்பு குறையும்படி பார்த்துக்கொள்வான்.                

ஒரு மதத்தின் பெயரைக் கூறி மற்றொரு மதத்தை அழிப்பான்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூட பேசுவான். ‘இவ்வுலகில் வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர் இயேசுஎன்று சொல்வான். ‘அவர் கடவுள் அல்லவா?’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், ஓடிவிடுவான்.

மூடநம்பிக்கை, சர்வாதிகாரம் போன்றவற்றின் பிடிகளிலிருந்து மனிதர்களை விடுவிப்பதே தன் பணி என்று சொல்வான். ஆனால், எது மூட நம்பிக்கை, எது சர்வாதிகாரம் என்று விளக்கமாட்டான்.

அன்பு, விடுதலை, சமத்துவம் என்று கலர் கலர் வார்த்தைகள் கொண்டு பேசினாலும், தன்னுடைய ஒரு முக்கிய இரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதர்களின் சகோதரத்துவத்தைப் பற்றி (Men’s Brotherhood) பெரிய உரைகள் நிகழ்த்துவான். கடவுளின்தந்தைமை (God’s Fatherhood) குறித்து வாய் திறக்கமாட்டான்.

ஓர் எதிர் திரு அவையை உருவாக்குவான். அதில் உறுபினர்களாகும் ஆசையை நம்பிக்கையாளர்களிடம் விதைப்பான். பாவத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, மனமாற்றம் அவசியமில்லை, இந்தக் கூட்டத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே போதும், வாழ்க்கை அர்த்தம் பெற்றுவிடும் என்று சொல்லி ஏமாற்றுவான்.

மேலே கூறப்பட்ட எல்லாமே நல்லவை போன்ற தோற்றம் கொண்ட ஆபத்துச் சிந்தனைகள். அதுதான் எதிர்க் கிறிஸ்துவின்  உத்தி. அவன் வெற்றியின்  இரகசியமும் இதுவே.

யோசிக்கும்போது இன்றைய உலகில் ஓர் எதிர்க் கிறிஸ்து அல்ல; ஓராயிரம் எதிர்க் கிறிஸ்துகள் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

அப்படித்தானே?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)