news-details
ஆன்மிகம்
மரியா பற்றிய திரு அவையின் படிப்பினை வளமையானது மற்றும் நேர்மறையானது! (Council\'s teaching on Mary is rich and positive) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 09

1. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான திரு அவை நிகழ்வாக இருந்த 1962, அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் திருத்தந்தை 23-வது யோவானால் தொடங்கப்பட்டு, 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் திருத்தந்தை 6-வது பவுலால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில், திரு அவையின் தாயான மரியாவிற்குக் கொடுக்கப்பட்ட சிறப்பானதோர் இடம் பற்றி இங்கு உங்களோடு சிந்திக்க விரும்புகின்றேன்.

உண்மையிலேயே ஒரு மாபெரும் மரியாவின் தனித்துவமானது (Marian tone) அதன் அறிவிப்பிலிருந்து இந்தத் திருச்சங்கத்தினால் குறிக்கப்பட்டது. கிறித்தவ மதம் சார்ந்த   திருச்சங்கங்களைக் கொண்டாடுவது (Celebrandi Concilii Oecumenici) பற்றிய திருத்தந்தையின் கடிதத்தில், 23-வது யோவான் அவர்கள்அருளின் தாயும், திருச்சங்கத்தின் வானுலகப் பாதுகாவலியுமாகியமரியாவின் சக்தி வாய்ந்த மன்றாட்டின் துணையை ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தார் (11 ஏப்ரல் 1961, AAS 53 [1961] 242).

திரு அவை பற்றிய சங்க ஏட்டில் மரியா பற்றிய படிப்பினை இடம்பெறல்

அடுத்தப்படியாக, 1962-இல் மரியாவின் சுத்திகரிப்புத் திருநாளன்று, திருத்தந்தை 23-ஆம் யோவான் அவர்கள் அக்டோபர் 11-ஆம் தேதியை, அதாவது குறிப்பாக அதே நாளில் மரியாவைTheontkos (இறைவனின் தாய்) என்று அழைத்த அந்த மிகப்பெரிய எபேசு திருச்சங்கத்தின் நினைவாக இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறேன் என்று விவரித்து, அந்த நாளைச் சங்கத்தின் தொடக்க நாளாகக் குறித்தார் (Motu proprio Concilium, AAS 54 [1962] 76-68). அதன் பிறகு, அவரின் திருச்சங்கத் தொடக்க உரையில் திருத்தந்தை அவர்கள்கிறித்தவர்களின் மற்றும் ஆயர்களின் துணையாகியமரியாவின் தாய்மை உதவியை வேண்டி திருச்சங்கச் செயல்பாடுகளின் வெற்றிமிகு பலனுக்காகத் திருச்சங்கத்தையே அவரிடம் ஒப்படைத்தார் (AAS 54 [1962] 795).

திருச்சங்கத் தந்தையர்களும், சங்க நிகழ்வுகளின் தொடக்கத்தில் உலகிற்கான அவர்களுடைய செய்தியில், “திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான நாங்கள், இயேசுவின் தாயாகிய மரியாவோடு  செபத்தில் ஒன்றாக இணைந்து, ஒரே திருத்தூது அமைப்பை உருவாக்குகின்றோம் (Acta Synodalia I, I, 254) என்று கூறினர். இவ்வாறு மரியாவோடு உள்ள உறவில் ஒன்றித்து, தூய ஆவியாரின் வருகைக்காகக் காத்திருந்த தொடக்கக் காலத் திரு அவையோடு தங்களையே இணைத்து அவர்களின் சிந்தனைகளை மரியாவை நோக்கி வெளிப்படையாகவே திருப்பினர் (ஒப்பிடுக. திப 1:14).

2. திருச்சங்கத்தின் இரண்டாவது அமர்வில், திரு அவை பற்றிய சங்க ஏட்டிற்குள் கன்னி மரியா பற்றியும் பேசப்பட வேண்டும் என்ற கருத்து முன் மொழியப்பட்டது. இந்த முயற்சியானது இறையியல் ஆணையத்தால் (Theological Commission) வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், பல மாறுபட்ட கருத்துகளைத் தூண்டியது.

திரு அவையில் இயேசுவின் தாயினுடைய மிகச் சிறப்பான பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்தப் பரிந்துரையானது போதுமானதாக இல்லை என்று கருதிய சிலர், மரியாவின் மாண்பையும் மேன்மையையும் தனித்துவமிக்க புனிதத்தையும் மற்றும்  அவருடைய மகனால் கொண்டு வரப்பட்ட மீட்பில் அவரின் சிறப்பான பங்களிப்பையும் ஒரு தனிப்பட்ட சங்க ஏட்டால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு எடுத்தனர். இன்னும் அதிகமாக, ஒருவகையில் திரு அவையை விட உயர்ந்தவராக மரியாவைக் கருதுவதற்கு, மரியா பற்றிய போதனையைத் திரு அவை பற்றிய போதனையோடு வைப்பது என்ற முடிவானது மரியாவின் சிறப்பைப் போதுமான அளவு மையப்படுத்தாது மற்றும் திரு அவையின் மற்ற உறுப்பினர்களின் அளவுக்கு அவரின் பங்கையும் குறைக்கும் என்று பயந்தனர் (Acta Synodalia II. III, 338-342). 

எவ்வாறாயினும், மரியா மற்றும் திரு அவை பற்றிய கொள்கை வரைவை ஒரே ஏட்டில் வைப்பதற்கான இறையியல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசினர். அவர்களைப் பொருத்தவரை, இறைமக்களின் அடையாளம் மற்றும் பணியை மறு கண்டுபிடிப்பு செய்வதற்கான நோக்கத்தில் இந்த உண்மைகள் திருச்சங்கத்தில் வேறுபடுத்தப்பட முடியாது. அதற்கு மாறாக, அவரின் கன்னித்தன்மை மற்றும் தாய்மையில் திரு அவையின் வகை மற்றும் முன்மாதிரியாக (type and exemplar) இருக்கின்றவரோடு அதன் நெருங்கிய தொடர்பைக் காட்ட வேண்டும். உண்மையில், திரு அவை குழுமத்தின் மாண்புமிக்க உறுப்பினர் என்ற வகையில், கன்னி மரியா திரு அவையின் கோட்பாட்டில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெறுகின்றார். இன்னும் அதிகமாக, மரியாவுக்கும் திரு அவைக்கும் இடையேயான தொடர்பை மையப்படுத்துவதனால்மறுமலர்ச்சிக் கிறித்தவர்கள் (Christians of the Reformation) திருச்சங்கத்தால் கொடுக்கப்பட்ட மரியியல் போதனையை மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும் (Acta Synodalia, II, III, 343-345).

திருச்சங்கத் தந்தையர்கள், மரியா மீதான அதே அன்பினால் உந்தப்பட்டு, வேறுபட்ட கோட்பாட்டு நிலைப்பாடு பற்றிய அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதில், அவருடைய ஆளுமையின் வேறுபட்ட அம்சங்களை ஆதரிப்பதற்கு இவ்வாறு எண்ணினர். சிலர் கிறிஸ்துவோடு கூடிய அவரின் உறவை முதன்மைப்படுத்தி மரியாவைப் பற்றிச் சிந்தித்தார்கள். மற்றவர்கள் அவரைத் திரு அவையின் ஓர் உறுப்பினராகவே கருதினார்கள்.

3. கடுமையான கோட்பாட்டு விவாதத்திற்குப் பிறகு இறைவனின் தாயின் மேன்மையையும், திரு அவையின் வரலாற்றில் அவரின் குறிப்பிடத்தக்க உடனிருப்பையும் கருத்திற்கொண்டு, திரு அவை பற்றிய திருச்சங்கத்தின் ஏட்டில் மரியா பற்றிய போதனை இடம்பெறச் செய்யலாமெனத் தீர்மானிக்கப்பட்டது (Acta Sinodalia, II, III, 627).

திரு அவை பற்றியக் கோட்பாட்டு ஏட்டில் சேர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரியா பற்றிய புதிய உருவரைத் திட்டமானது (schema), உண்மையான கோட்பாட்டு வளர்ச்சியைக் காட்டுகின்றது. மரியாவின் நம்பிக்கை பற்றிய முக்கியத்துவம் இடம்பெற்றதும் திருவிவிலியத்தை ஆதாரமாகக் கொண்டதொரு மரியா கோட்பாட்டை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முறைப்படுத்தப்பட்ட அக்கறையும் குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன. மேலும், கடவுளின் தாய்க்கான கிறித்தவர்களின் பக்தி மற்றும் மதிப்பை வளப்படுத்துவதற்கான கூறுகளாகவும்  பயன்படுகின்றன.

காலம் செல்லச் செல்ல சில சங்கத் தந்தையர்களால் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட குறைப்பு வாதமானது (Reductionism) அபாயம் இல்லாத ஒன்றாக நிரூபிக்கப்பட்டது. மரியாவின் பணியும் சிறப்புகளும் மிகப்பெரிய அளவில் மறுபடியும் உறுதி செய்யப்பட்டன. மீட்பின் இறைத்திட்டத்தில் அவரின் ஒத்துழைப்பானது தெளிவாகத் தெரியும்படியாகச் செய்யப்பட்டது; கிறிஸ்துவின் தனிப்பட்ட பங்கோடு இந்த ஒத்துழைப்பானது பொருந்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

முதன்முறையாக, திருச்சங்க ஆசிரியமானது (conciliar Magisterium) திரு அவைக்குக் கிறிஸ்துவின் மீட்புப் பணியில் மற்றும் திரு அவையின் வாழ்வில் மரியாவினுடைய  பங்கின் கோட்பாட்டு நிலைப்பாட்டை உருவாக்கியது. இவ்வாறு, பிந்தையக் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததை நிரூபிக்கக்கூடியதாக இருந்த திருச்சங்கத் தந்தையர்களின் இந்தத் தேர்வை நாம் உண்மையிலேயே நல்லதொரு முடிவாக இருந்திருக்கிறதென்று கருத வேண்டும்.

4. திருச்சங்க அமர்வின்பொழுது, மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றிய மரியியல் கோட்பாட்டை மற்றக் கூறுகளோடு மேலும் வளப்படுத்துவதற்கு அநேகத் தந்தையர்கள் விரும்பினார்கள். இரண்டாம் வத்திக்கான் சங்க மரியியல் விவாதம் இடம்பெற்ற அந்தக் குறிப்பிட்ட சூழல் வலிமையான மற்றும் பரந்துபட்ட கருத்துகளை ஏற்றுக் கொண்டாலும், அந்த விருப்பங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், சங்கத்தின் ஒட்டுமொத்த மரியா பற்றிய விவாதமானது, உயிரோட்டமான மற்றும் சமநிலை கொண்டதாக இருந்தது. மேலும், தலைப்புகள் முழுமையாக வரையறுக்கப்படாமல் இருந்தாலும், ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறையும் குறிப்பிடத்தக்கதொரு கவனத்தைப் பெற்றது

சமநிலை கொண்டதொரு மரியியல் கோட்பாட்டு  சித்தரிப்பு

இவ்வாறு, மரியாநடுநிலையாளர்என்ற பட்டத்தைப் (the title of Mediatrix) பொறுத்தவரை சில தந்தையர்களின் தயக்கம் அந்தப் பெயரைப் பயன்படுத்துவதிலிருந்தோ மற்றும் மற்றொரு கருத்து கூற்றில், அருளின் வரிசையில் அவருடைய தாய்மைக்கான வானதூதரின் செய்திக்கான அவருடைய ஒப்புதலிலிருந்தோ  தடுக்கவில்லை (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண்.62). மேலும், திருச்சங்கமானது ஆன்மாக்களுக்கான உயர்நிலை வாழ்வை மீட்டுக்கொடுக்கும் பணியில்முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த முறையில்  மரியாவின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது (ibid., v©. 61). இறுதியாக, திருச்சங்கமானதுதிரு அவையின் தாய்என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்தாலும்கூட, ‘இன்றைய உலகில் திரு அவைஎன்ற ஏடானது மிகவும் அன்புக்குரிய தாய் என்ற வகையில் திரு அவையின் மரியாவுக்கான வணக்கத்தைத் தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

திரு அவை பற்றிய சங்க ஏட்டின்  (Lumen Gentium/ இறைத்திட்டத்தில் திருச்சபை) 8-வது இயலில் உள்ள முழு விளக்கமும் மிகவும் வளமையான மற்றும் நேர்மறையான அடிப்படைக் கோட்பாட்டின் விளக்கத்தைத் தடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இது திரு அவையானது அதன் தாய் மற்றும் முன்மாதிரியாக மரியாவை அங்கீகரிக்கும் நம்பிக்கை மற்றும் அன்பின் வெளிப்பாடாகும்.

மேலும், திருச்சங்கத் தந்தையர்களின் விவாதத்தின்பொழுது அவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டாலும், அவை நம்பிக்கைக்கு உரியவைகளாக மாறின. ஏனெனில், இணக்கமான உறவின் அடிப்படையில், திருச்சங்கத் தந்தையர்கள் கிறித்தவ மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் இன்னும் முழுமையாக்கியுள்ளனர். மேலும், கிறித்தவ மக்களின் நம்பிக்கை மற்றும் பக்திக்கு இறை அன்னையின் அற்புதமான அடையாளத்தையும், மீட்புப் பணியில் அவரது தனித்துவம் மிக்க பங்கையும் விளக்கும் வகையில் இன்னும் முழுமையான மற்றும் சமநிலையான விளக்கத்தை அளித்துள்ளனர்.

மூலம்: Pope John Paul II, Council\\\'s teaching on Mary is rich and positive, in kL\\\'Osservatore Romano , Weekly Edition in English, 20/27 December 1995, p.13.