பொறுப்புடைமையையும் (accountability), வெளிப்படைத்தன்மையையும் (transparency) திறனாய்வு செய்யும் அங்கங்கள்
ஆயர்
மற்றும் மறைமாவட்ட இறைநம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கும் இடையில் தொடர் கலந்தாலோசனைகள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணியாக விளங்குகிற மறைமாவட்ட மன்றத்துக்கு உரிய அங்கீகாரம் அளிப்பது அவசியம் என்று இந்த இறுதி ஆவணம் எடுத்துக் கூறுகின்றது. மறைமாவட்ட மேய்ப்புப்பணித் திட்டங்கள், கூட்டொருங்கியக்கத் திரு அவையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் செயல்முறைகளையும் உருவாக்குதல், நிதி மேலாண்மை மற்றும் மேய்ப்புப்பணிச் செயல்பாட்டுத் திட்டங்களைப் பொறுப்புணர்வோடு இறைநம்பிக்கையாளர்களுக்குச்
சமர்ப்பிக்க ஆயருக்கு உதவுகிற ஒரு தளமாக மறைமாவட்ட மன்றம் செயல்பட வேண்டுமென்றும் இந்த இறுதி ஆவணம் கூறுகின்றது. இந்த முயற்சி பொறுப்புடைமையையும் (accountability) மற்றும் வெளிப்படைத்தன்மையையும் (transparency) ஊக்குவித்து வளர்த்தெடுக்க வழிவகை செய்யும்.
தனிப்பேரவைகளைப்
புதுப்பித்தல்
மற்றும்
அதிகாரப்
பரவலாக்கல்
(decentralization)
அதிகாரப்
பரவலாக்கலைச் சாத்தியமாக்கும் பொருட்டு, மறைமாநிலப் பேரவைகள் (provincial councils), முழு நிறைவான பேரவைகள் (plenary councils) ஆகிய நிறுவன அமைப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அவை நடத்தப்பட வேண்டும் என்ற தேவையை முன்னிறுத்துகின்றது இந்த இறுதி ஆவணம். இத்தகைய பேரவைகளை அவ்வப்போது தொடர்ந்து கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. மேலும், இது திரு அவைச் சட்டத்தாலும் தேவையான ஒன்றாக அறிவுறுத்தப்படுகின்றது (தி.அ.ச.எ. 439-446).
திரு
அவையின் ஒருமை மற்றும் அதன் படிப்பினைகளில் ஒன்றித்திருத்தல் ஆகியவற்றைப் பாதுகாக்கிற அதே வேளையில், தனிப் பிரச்சினைகள் எழும்போது அதை நிவர்த்தி செய்ய ஆயர்களுக்கு அனுமதி வழங்குகிறது ‘நற்செய்தியை அறிவியுங்கள்’ (Praedicate Evangelium)
என்று பொருள்படும் திருத்தூதுக் கொள்கை விளக்கம். இதனை அவர்கள் திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தினால் வெளியிடும் ‘Motu proprio’ எனப்படும்
சமீபத்திய சிறப்பு அறிக்கையான competentias quasdam decernere’ என்ற ஆவணம் மாற்றியமைத்த 11 திரு அவைச் சட்டங்களைப் பின்பற்றி, அதற்கான வழி வகைகளை வகுக்கவேண்டும் என்றும் இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. 2022-ஆம் ஆண்டு வரை திரு அவையில் மேல்நிலைப் பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமே பெற்றிருந்த அதிகாரத்தைக் கீழ்நிலையில் இருக்கும் பொறுப்பாளர்களும் பெறும் வகையில் இந்த மாற்றியமைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட திரு அவைச் சட்டம் வழங்குகிறது. இத்தகைய சட் டங்கள் திரு அவையின் ஒவ்வொரு தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இறுதி ஆவணம் அடிக் கோடிட்டுக் காட்டுகின்றது.
குருமடப் பயிற்சிகள்
குருப்பட்டப்
பணிக்கான குருமடப் பயிற்சியிலும் கூட்டொருங்கியக்கத் திரு அவையைப் பிரதிபலிக்கும் கூறுகள் இடம்பெறும் வகையில் அமைய வேண்டுமென ஒரு பரவலான கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அழுத்தமும் இந்த இறுதி ஆவணத்தில் விரவிக் கிடக்கின்றது. குறிப்பாக, குருமடப் பயிற்சியில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல், திரு அவையில் இருக்கிற அனைவரோடும் இணைந்து செயல்படுதலைச் சாத்தியமாக்கும் பயிற்சி மற்றும் திரு அவையின் ஒருமித்த மனநிலையை எட்டும் பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் குருத்துவப் பயிற்சிக்கான பொதுவான வரைமுறைக் கையேடான ‘Ratio fundamentalis
instituitonis sacerdotalis (தி.அ.ச.எ. 241)’ என்ற ஆவணத்தைப் புதுப்பிக்கவும் அழைப்பு விடுத்திருக்கின்றது இந்த இறுதி ஆவணம்.
கலந்தாலோசிக்கப்படுபவர்களின்
குரல்களை
ஒடுக்காமல்
இருத்தல்
திரு
அவையில் நிறையச் சூழ்நிலைகளில் அதிகாரத்தில் இருப்போர் முடிவுகளை எடுப்பதற்கு முன் பங்கேற்பு அமைப்புகளைக் கலந்தாலோசித்தல் என்பது திரு அவைச் சட்டபடி அவர்களுடைய கடமையாகும். இது பங்கேற்பு அமைப்புகளின் உரிமையும் கூட. கலந்தாலோசனையின் வழியாக விளைந்த கனிகளால் ஒருமித்த ஒரு முடிவு எட்டப்படும்போது, அதனினும் மேலோங்கிய ஒரு காரணம் இருந்தாலொழிய, அதிகாரத்தில் இருப்போர், அவர்கள் கலந்தாலோசித்து உள் வாங்கிய ஆலோசனைகளை ஏதோ கலந்தாலோசித்தலே நடைபெறாதது போல், அவைகளைப் புறந்தள்ளக்கூடாது. எனவே, அதிகாரத்தில் இருப்போர் கலந்தாலோசனையில் பங்கேற்பவர்களுக்குச் செவிமடுத்தல் அவசியம். அவர்களுடைய உணர்வுகளையும், உள்ளச் சிந்தனைகளையும் இனம் கண்டுகொள்ளாமல் பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அவர்களுடைய விருப்பங்களை மட்டும் முடிவுகளாக மாற்றிச் செயல்படுத்த நினைப்பது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் போக்கிற்கு எதிரானது (தி.அ.ச.எ. 127 ப2, 2).
திரு அவையின்
மற்ற
நிலைகளில்
பொதுநிலையினரின்
பங்கேற்பு
திரு
அவைச் சட்டம் மற்றும் இந்த இறுதி ஆவணம் குறிப்பிடுகிற பங்கேற்பு அமைப்புகளைத் தவிர்த்து, மறைமாவட்டப் பொறுப்புகள் மற்றும் திரு அவையின் நிறுவனங்களாகிய குருமடம், கல்வி நிறுவனங்கள், இறையியல் பிரிவு சார்ந்த துறைகள் ஆகியவற்றில் பொதுநிலையினர் ஈடுபடும் வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் அவசியப்படுகிறது. அர்ப்பண வாழ்வில் உள்ள துறவற நிலையிலிருக்கும் இருபால் துறவியர்கள் பெற்றுள்ள கொடைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதும், திரு அவைச் சட்ட வழக்குமன்ற நடவடிக்கைகளில் தகுதியான பொதுநிலையினரை நீதிபதிகளாகத் தகுந்த திரு அவைச் சட்டத் தயாரிப்புப் பயிற்சிக்குப்பின் ஈடுபடுத்துவதும் அவசியம் என்பதை மிக அதிகமாகவே இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. அதோடுகூட திரு அவையின் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பொதுநிலையினர்களின் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரிய மரியாதை வழங்குவதும் அவசியம். அவர்களுடைய திறமைகளையும் தனிப்பண்புகளையும் இனம் கண்டு, அவற்றை வளர்த்தெடுக்க விளைவதும் மிக அவசியம்.
ஆலோசனை வாக்கு
‘மட்டுமே’ என்பதில், ‘மட்டுமே’ என்ற வார்த்தை
நீக்கப்பட்டது
திரு
அவைச் சட்டத்தின் பல இடங்களில் முடிவுகளை
எடுப்பதற்கு ஆயருக்கும் பங்குத்தந்தைக்கும் ஆலோசனை வாக்குகள் அவசியப்படுகிற நிறைய இடங்களில் ‘மட்டுமே’
(only / merely tantum) என்ற
வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தப் போக்கு பல நேரங்களில் கலந்தாலோசித்தலை
இரண்டாந்தர ஒரு தேவையாகத் தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. கலந்தாலோசித்து ஆலோசனைகளைப் பெறுவதையும் முடிவெடுத்தலையும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் வைப்பது சரியன்று; திரு அவையில் முடிவெடுத்தல் என்பது அனைவரது உதவியோடு நிகழ்கின்றது. கலந்தாலோசனைகளின் வாயிலாகவே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆலோசனைகள் வழங்குகின்ற பங்கேற்பு அமைப்புகள் எந்த விதத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களுக்குக் கீழானவர்கள் அல்லர்; மாறாக, இந்த இரண்டு நிலையினரும் சமமானவர்கள் என்பதைப் புரிந்து திரு அவையில் பணிபுரிய வேண்டும். எனவே, தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் ஆலோசனை வாக்கு ‘மட்டுமே’ என்ற வரிகள் திரு அவைச் சட்டத்திலிருந்து அகற்றப்பட ஆவன செய்ய வேண்டும் என இந்த இறுதி
ஆவணம் அறைகூவல் விடுக்கின்றது. திரு அவைச் சட் டத்தில் ‘ஆலோசனை வாக்கு மட்டுமே’ என்று மீண்டும் மீண்டும் வரும் வாக்கியத்தால் எழும் தெளிவின்மையைப் போக்கும் வண்ணம் ‘மட்டுமே’ என்ற வார்த்தை நீக்கப்படல் வேண்டும்.
திருத்தந்தை
பிரான்சிஸ் இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்களைக் கூட்டொருங்கியக்கத் திரு அவையை மலரச் செய்வதற்கான ஒரு வழிகாட்டுதலாகக் காண்கின்றார். எனவே, இந்த ஆவணத்தின் படிப்பினைகளைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகளை ஒவ்வோர் ஆயரும் தம் தலத் திரு அவையில் மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்கள் திரு அவையில் கட்டமைப்புப் பரிணாமங்களாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். திரு அவைச் சட்டங்கள் வலியுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயமாக நிறுவப்பட வேண்டிய பங்கேற்பு அமைப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், பொதுநிலையினருக்கான பங்கேற்புத் தளங்கள், அமைப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இனம் காணப்பெற்று, அவர்களுடைய பங்கேற்பு மற்றும் பங்களிப்புத் திரு அவையில் மலர்கின்ற பொழுது, திரு அவை கூட்டொருங்கியக்கத்தின் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.