news-details
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 08

பெண்களின் பங்களிப்பை வெளிச்சமிட்டுக் காட்டும் அன்னை மரியா (Mary sheds light on role of women)

1. மீட்பின் இறைத்திட்டத்தில் மரியாவுக்கு வழங்கப்பட்ட பங்கானது சமூக மற்றும் திரு அவையின் வாழ்வில் பெண்களுடைய அழைத்தலை, ஆணுடனான வேறுபாட்டை வரையறுப்பதன் வழியாக வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றது என்று ஏற்கெனவே இதற்கு முந்தைய மறைக்கல்வியில் நான் விளக்கியிருந்தேன். மரியாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்த முன்மாதிரியானது (model) பெண்ணிய ஆளுமைக்கான குறிப்பிடத்தக்கதொரு தன்மையைக் காட்டுகின்றது.

பெண் விடுதலையின் முன்னேற்றத்திற்கான பெண்கள் இயக்கத்தின் சில போக்குகள் (trends) கடந்த சில ஆண்டுகளில் மரியாவை எல்லா வகையிலும் ஓர் ஆணாகவே சித்தரிப்பதற்குத் தேடின. இருப்பினும், படைப்பில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் எண்ணமானது, மாண்பிலும் தகுதியிலும் ஆணுக்கு இணையாக இருப்பதற்கு பெண் விரும்பும் அதே நேரத்தில், மரியாவின்  வேற்றுமைகள் மற்றும் சிறப்பு இயல்புகளைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. மரியா என்றும் பேணிக்காக்கப்பட வேண்டிய மற்றும் ஊக்கமூட்டப்பட வேண்டிய ஒரு தனிச்சிறப்பைக் கொடுக்கின்ற, அவருக்கே உரிய குணங்களோடும் சிறப்பு அம்சங்களோடும் நிரப்பப்பட்டிருப்பதால், பெண்ணின் அடையாளமானது ஆணின் ஒரு பிரதியாக (copy of man) இருப்பதில் அடங்கியிருக்கவில்லை. இந்தச் சிறப்புரிமைகள் மற்றும் பெண் ஆளுமையின் குறிப்பிட்ட அம்சங்கள் மரியாவில் அவற்றின் முழு வளர்ச்சியை அடைந்தன. தெய்வீக அருளின் முழுமை உண்மையில் பெண்ணின் அனைத்து இயல்பான திறன்களையும் அவளில் வளர்த்தது.

உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்!

மீட்புப் பணியில் மரியாவின் பங்கானது முழுமையாகக் கிறிஸ்துவையே சார்ந்திருந்தது. இது கிறிஸ்து பிறப்பின் மறை பொருளை நிறைவேற்றுவதற்காகத் தேவைப்பட்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும். மரியாவின்  தாய்மையானது உலகிற்கு உண்மையிலேயே இறைமகனாகிய, ஆனால் முழு மனிதராகிய மீட்பரைத் தருவதற்குத் தேவையானதொன்றாக இருந்தது.

கிறிஸ்துவின் வருகையில் பெண்ணின் ஒத்துழைப்பின் முக்கியத்துவமானது, முழு அறிவோடும் சுதந்திரத்தோடும் அவருடைய தாராள விருப்பத்தைத் தருவதனால், வானதூதர் வழியாக நாசரேத்தூர் கன்னிக்கு மீட்பின் திட்டத்தைத் தெரிவித்த கடவுளின் முயற்சியில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

இங்கு மனிதனின், அதாவது, ஒவ்வொரு மனிதனின் மீட்பிலும் பெண்ணின் ஒத்துழைப்பின் உயர்ந்த மாதிரியானது நிறைவு பெறுகின்றது. இந்த மாதிரியானது வரலாற்றில் பெண்ணின் பங்கு மற்றும் செயல்பாட்டின் ஒவ்வோர் உறுதிப்பாட்டிற்கும் அற்புதமானதொரு குறிப்பை உணர்த்துகின்றது.

2. இந்த உன்னதமான ஒத்துழைப்பை நிறைவேற்றுவதில் பெண்ணானவள் அவளுடைய பணியை எந்தவகையில் தீர்க்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை மரியா பெண்களுக்குக் காண்பிக்கின்றார்.

வானதூதருக்கான செய்தியைப் பொறுத்தவரை, மரியா அவருக்கென்று எந்தவொரு பெரிய கோரிக்கையையும் வைக்கவில்லை. மேலும், அவர் தனது சொந்த இலட்சியத்தைத் திருப்திப்படுத்தவும் வழி தேடவில்லை. இறைவனின் மீட்பின் திட்டத்தை முழுமையாக மற்றும் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வதில், அவருடைய தாழ்ச்சிமிக்க பணியைச் செய்வதற்குத் அவர் தயாராக இருந்ததாகவே லூக்கா நற்செய்தியாளர் நமக்குச் சித்தரிக்கின்றார்: “இதோ ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் (லூக் 1:38). இதுவே மரியாவின்  பதிலின் அர்த்தமாக இருக்கின்றது.

மரியாவின்  பதிலானது ஒரு கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவருடைய எண்ணத்திலிருந்து எழுவதாலும், தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே கொடுக்கப்பட்டதாலும், ‘இது ஏதோ ஒரு முழுமையான ஈடுபாடு இல்லாத ஓர் ஏற்றுக்கொள்ளுதலினுடைய பதிலோ?’ என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. ஏனென்றால், இது இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பதற்கான அவருடைய எண்ணத்திலிருந்து தூண்டப்பட்டதொன்றாகும்.

வானதூதரின் பதிலைப் பெற்றபின் தாழ்ச்சிமிக்கதொரு பணியைச் செய்வதற்கான மனநிலையில், மரியா தனது தற்கையளிப்பை உறுதியோடு உடனே வெளிப்படுத்துகின்றார்.

இதைத்தான் மரியாவின்  எடுத்துக்காட்டைப் பின்பற்றி, தாழ்ச்சிமிக்க மற்றும் மதிப்புமிக்க பணியைச் செய்கின்ற அநேக பெண்கள் கிறிஸ்துவின் அரசு வளர்ச்சியடையத் தங்களையே திரு அவைக்கு அளித்தார்கள் மற்றும் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

3. மரியாவின் உருவமானது இன்றைய பெண்களுக்குத் தாய்மையின் மதிப்பை நினைவுறுத்துகின்றது. நாம் வாழ்கின்ற இன்றைய உலகில் சரியான மற்றும் நிறைவான முக்கியத்துவமானது இந்த மதிப்பீட்டிற்கு எப்பொழுதும் கொடுக்கப்படுவதில்லைசில நிகழ்வுகளில், பெண்கள் அவர்களின் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை மற்றும் சுதந்திரம் பற்றிய தவறான எண்ணம், அதாவது, குழந்தை பராமரிப்பைப் பெண்ணின் சுய உரிமைக்கான மற்றும் சந்தர்ப்பங்களுக்கான தடையாகப் பார்ப்பது, இவை பெண்மையின் ஆளுமையின் வளர்ச்சிக்கான தாய்மையின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கின்றது. மாறாக, மற்ற நிகழ்வுகளில், உடலியல் சம்பந்தமான குழந்தை பிறப்பின் அம்சமானது, தாயாக இருப்பதற்கான அவளின் இயல்பிலேயே கொடுக்கப்பட்ட அழைத்தலை வெளிப்படுத்தக்கூடிய மற்ற குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களை மங்கச் செய்கின்ற அளவுக்கு மிக முக்கியமானதொன்றாக ஆகிவிடுகின்றன.

மரியாவில்  நாம், மீட்பிற்கான இறைத்திட்டத்தில் அதனுடைய உயர்ந்த பரிமாணத்தை அடைகின்ற தாய்மையினுடைய உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். தாயாக இருப்பதென்பது மரியாவுக்கு  அதனுடைய முழு வளர்ச்சியோடு வாழ்வெனும் கொடையை நோக்கி இட்டுச்செல்கின்ற பெண்மையினுடைய ஆளுமைக்கான கொடையைக் கொடுக்கின்றது. மேலும், கடவுளின் உடன்படிக்கையின் ஒளியில் மட்டுமே அதனுடைய உண்மையான மதிப்பை ஏற்கக்கூடிய பெண்ணின் சொந்த அழைத்தலுக்கு நம்பிக்கையின் ஒரு பதிலாகவும் இருக்கின்றது  (ஒப்பிடுக. பெண்ணின் மாண்பு, எண். 19).

4. கவனமாக மரியாவை உற்றுநோக்குவதனால், இறையரசுக்காக வாழ்ந்த அவரில், கன்னித்தன்மைக்கான மாதிரியை நாம் கண்டுபிடிக்கின்றோம்.

இந்தச் சிறப்புமிக்க கன்னி (the Virgin par excellence), அவருடைய உள்ளத்தளவில் கடவுளோடு மிக ஆழமான மற்றும் நெருங்கிய உறவை அடைவதற்கென்று கன்னி நிலையிலேயே வாழ்வதற்கான அவருடைய விருப்பத்தில் வளர்ந்தார்.

மரியா கன்னியாக கற்பு நிலையில் வாழ அழைக்கப்பட்ட பெண்களுக்கு, உயர்ந்த அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதோர் உன்னதமான அழைத்தலை வெளிப்படுத்துகின்றார்.

இவ்வாறு இறைவனின் திட்டத்தில் அது விளைவிக்கக்கூடிய ஆன்மிகப் பலனைக் கவனத்தில் கொள்கிறார். அதாவது, கன்னி வாழ்வு என்பது தாய்மையின் ஓர் உயர்ந்த நிலை, ஆவிக்கு ஏற்ற ஒரு தாய்மை நிலை (ஒப்பிடுக. பெண்ணின் மாண்பு, எண். 21).

அன்பு என்கிற நாகரிகத்தின் விதைகளைப் பெண்கள் விதைக்கிறார்கள்

மரியாவின் தாய்மை இதயம், எல்லா மனித இழிவுகளுக்கும் திறந்தே உள்ளது. மேலும், பெண்ணின் ஆளுமை வளர்ச்சியானது பெண்களைக் கருணைக்கான அர்ப்பணிப்பிற்கு அழைத்துச் செல்கின்றது என்பதையும் நினைவுபடுத்துகின்றது. இவ்வாறு இதயத்தின் மதிப்பீட்டினால் மிகவும் தூண்டப்பட்டு, பெண்ணானவள் தன்னையே கொடுப்பதற்கான ஓர் உயர்ந்த பண்பைக் காட்டுகின்றாள்.

பெண்மையின் ஆளுமையை உறுதிப்படுத்தும் சுயநல முன்மாதிரிகளை வழங்கும் நம் காலகட்டத்தில் வாழ்கின்ற அனைவருக்கும், ஒளியூட்டக்கூடிய மற்றும் புனிதம் மிக்க ஆண்டவருடைய தாயினுடைய உருவமானது, மற்றவர்களுக்காகத் தன்னையே கொடுப்பதனால் மற்றும் தன்னையே மறப்பதனால் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கைக்கான இறைத்திட்டத்தின் உறுதியான முழுமையை அடைவது சாத்தியமாகும் என்பதைக் காட்டுகின்றது.

ஆகவே, மனிதத் துன்பத்தின் சூழ்நிலைகளுக்கு ஆறுதலையும் இரக்கத்திற்கான உணர்வுகளையும் மரியாவின்  உடனிருப்பானது தூண்டுகின்றது. மேலும், ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருக்கின்ற துன்பப்படும் அனைவருடைய வலியையும் போக்குவதற்கான ஆர்வத்தையும் பெண்களில் அது எழுப்புகின்றது.

மரியாவுடனான தனது சிறப்பு உறவின் காரணமாக, பெண் வரலாற்றின் போக்கில், வன்முறைக்குப் பதிலளிக்கக்கூடிய ஒரு நாகரிகத்தின் விதைகளை உலகில் விதைப்பதன் மூலம், வெறுப்பு மற்றும் பாவத்தால் காயமடைந்த மனிதகுலத்தின் நன்மை மற்றும் மென்மையின் எதிர்பார்ப்புகளுக்கு கடவுளின் நெருக்கத்தை அடிக்கடி பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

மூலம்: Pope John Paul II, Mary sheds light on role of women, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 December 1995, p.11.