news-details
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை தன் குரலிலேயே வழங்கிய நன்றி செய்தி!

பிப்ரவரி 24 முதல் திருத்தந்தை உடல்நலன் பெறுவதற்காக வத்திக்கான் அதிகாரிகள், கர்தினால்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இரவு 9 மணிக்குச் செபமாலை செபித்து வருகின்றனர். தனக்காகச் செபித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது குரலில் இஸ்பானிய மொழியில் நன்றி செய்தி வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தி புனித பேதுரு வளாகத்தில் ஒலிபரப்பப்பட்டது.