அருள்பணி மற்றும் நிர்வாகப் பணிகளில் மேதகு ஆயர் அவர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர். இவரிடம் அளிக்கப்பட்ட பணிகளை அனைவரும் பாராட்டும் வண்ணம் நிறைவு செய்துள்ளார். ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ (MERCY AND HOPE) என்ற விருதுவாக்கைத் தன் இறைப்பணி இலக்காக எடுத்துள்ளார். இவர் மக்கள் நலத்திட்டங்களை இரக்கத்துடன் மட்டுமல்ல; அன்புடனும், அக்கறையுடனும் செயல்படுத்தி உள்ளார். இறைவன் மீது தளரா நம்பிக்கை கொண்டவர். இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இவரை உலகில் பெரும் தலைவராக உயர்த்தியுள்ளது.
மேதகு
ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களை ஆயராகப் பெற்றதற்கு வேலூர் மறைமாவட்டம் பேறுபெற்றது. இறைவனுக்கு நன்றி கூறுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் திரு அவைச் சட்டங்கள் ஆயரின் மக்கள் பணிகளைத் தெளிவாக வரிசைப்படுத்தியுள்ளது. ‘திரு அவையில் ஆயரின் அருள்பணி’
என்ற ஏட்டிலும், திரு அவைச் சட்டத் தொகுப்பிலும் ஆயரின் பல்வேறு மக்கள் பணிகளைப் பற்றி விளக்கப்படுகிறது.
சங்கப் பார்வையில்
ஆயரின்
மக்கள்
பணிகள்
திரு
அவையின் மையமான பொதுநிலையினர் உரிமைகளை ஏற்றுக் கொண்டு திரு அவையிலும் சமூகத்திலும் அவர்களைத் தலைமையேற்கச் செய்வது ஆயரின் கடமையாகும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் ‘திரு அவையில் ஆயரின் அருள்பணி’
என்ற ஏட்டில் சிறப்பாக அவருடைய அருள்பணிகள் அளிக்கப்பட்டுள்ளன. மறைமாவட்ட ஆயர்கள் திருத்தந்தையின் பிரதிநிதிகள் அல்லர்; கிறிஸ்துவின் பிரதிநிதிகள். எனவே, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மக்களைக் கிறிஸ்துவின் பெயரால் தங்களுக்கே உரித்தான ஆட்சியுரிமையுடன் வழிநடத்துகின்றனர் என்று அதன் முன்னுரையில் அளிக்கப்பட்டுள்ளது.
“கிறித்தவக் கோட்பாட்டை, ஆயர்கள் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் எடுத்துக் கூறவேண்டும். அதாவது, மக்கள் மனத்தை அச்சுறுத்தி அலைக்கழிக்கும் பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் தகுந்த பதில் அளிக்கும் வகையில் அது அமைதல் வேண்டும். மனிதர் யாவரின் மீதும் திரு அவை கொண்டுள்ள அன்னைக்குரிய அக்கறையை அவர்கள் எண்பிக்க வேண்டும். குறிப்பாக, ஏழைகளிடத்திலும், தாழ்த்தப்பட்டோரிடத்திலும் அவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு
நற்செய்தி அறிவிக்கவே ஆண்டவர் அவர்களை அனுப்பினார்” (ஆயரின்
அருள் பணிகள் 13).
“நிறை வாழ்வுக்கு மக்களை இட்டுச் செல்லும் பொறுப்புடைய ஆயர்கள் ஒவ்வொருவருடைய தனி அழைப்பிற்கேற்றார்போல் திருப்பணிநிலையினர்,
துறவறத்தார், பொதுநிலையினருடைய தூய்மையை வளர்க்க முயலவேண்டும். அன்பிலும் மனத்தாழ்மையிலும் எளிய வாழ்விலும் தூய்மை நிலையின் எடுத்துக்காட்டாகத் தாம் திகழ வேண்டும் என்பதை அவர்கள் மனத்திற்கொள்ள வேண்டும்”
(ஆயரின் அருள்பணிகள் 15).
“நம்பிக்கை கொண்டோரின் நலனை நல்ல முறையில் அவரவர் நிலைமைக்கேற்ப பேணுவதற்கு ஆயர்கள் தங்கள் மக்கள் வாழும் சமூகச் சூழ்நிலைகளில் அவர்களின் தேவைகள் யாவை என்பதைச் சரியாக அறிய முயல வேண்டும். அதற்காகத் தகுந்த வழிகளைக் குறிப்பாக, சமூக ஆய்வுகளைக் கையாள வேண்டும். அனைவர்பாலும் ஆயர்கள் அக்கறை காட்ட வேண்டும். இவ்வருள்பணி பொறுப்பை ஆற்றும்போது கிறிஸ்துவின் மறையுடலை வளர்ப்பதில் செயல்முறையில் ஒத்துழைக்க நம்பிக்கை கொண்டோருக்கு உள்ள
உரிமையையும் கடமையையும் மதித்து, திரு அவைச் செயல்களில் அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்கே விட்டுவிட வேண்டும்”
(ஆயரின் அருள்பணிகள் 16).
திரு அவைச்
சட்டம்
காட்டும்
ஆயரின்
மக்கள்
பணிகள்
“அன்பு, தாழ்ச்சி, வாழ்வில் எளிமை ஆகியவற்றில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க, தாம் கடமைப்பட்டவர் என்பதை மறைமாவட்ட ஆயர் மனத்தில் கொண்டு, ஒவ்வொருவருக்கும் உரிய அழைத்தலுக்கு ஏற்ப கிறித்தவ விசுவாசிகளின் புனிதத்தை எல்லா விதங்களிலும் மேம்படுத்த அவர் முயற்சி செய்ய வேண்டும். இறைவனின் மறைபொருள்களின் முதன்மையான பகிர்ந்தளிப்பவராக அவர் இருப்பதால், அவருடைய கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள கிறித்தவ நம்பிக்கையாளர்கள் அருளடையாளங்களின் கொண்டாட்டம் வழியாக அருளில் வளரவும் மற்றும் பாஸ்கா மறைபொருளை உணர்ந்து வாழவும் அவர் இடைவிடாமல் முயற்சிசெய்ய வேண்டும்”
(தி.ச. 387).
“ஆயர் தமது மறைமாவட்டத்தில் பல்வேறு வகையான திருத்தூதுப் பணிகளைப் பேணிவளர்க்க வேண்டும். தமது மறைமாவட்டம் முழுவதிலும் அல்லது தனிப்பட்ட மறைவட்டங்களிலும் அனைத்துத் திருத்தூதுப் பணிகளும், அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட இயல்பைக் கருத்தில் கொண்டு, அவரது வழிநடத்துதலின்கீழ் ஒருங்கிணைக்கப்படுவதை அவர் கவனித்துக்கொள்ள வேண்டும்”
(தி.ச. 394).
இயேசு
கிறிஸ்து குருவாக இருந்து மக்களைப் புனிதப்படுத்துகிறார். ஆசிரியராக இருந்து மக்களுக்குப் போதிக்கிறார். அரசராக இருந்து மக்களை ஆள்கின்றார். இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரும் தங்களுக்கு உரித்தான வகையில் பங்கு பெறுகின்றனர். இதனைத்தான் திருச்சங்கமும் ‘கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு உரைக்கும் அரச அலுவல்’ எனக் கூறுகின்றது. 1983-ஆம் ஆண்டின் புதிய சட்டத்
தொகுப்பில் இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரின் புனிதப்படுத்தும் பணி, போதிக்கும் பணி மற்றும் ஆளுகைப் பணி என்று மூன்று பணிகளையும் ஆற்றுவதற்கு உரிமை அளித்துள்ளது. இவ்வுரிமைகளைத் திரு அவையில் பொதுநிலையினர் செயல்படுத்த ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் வேண்டும்.
“திருமுழுக்கால் பெற்ற புதுவாழ்வினால் கிறித்தவ விசுவாசிகள் இப்புனிதப்படுத்தப்படும் பணியில் தங்கள் பங்கைப் பெறுகின்றனர். கிறித்தவ வாழ்வில், மணவாழ்வில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவும், தங்கள் பிள்ளைகளின் ஞானக்கல்விக்கு ஏற்பாடு செய்வதன் மூலமாகவும், எங்கும் தூய்மையாகச் செயல்பட்டு பொதுநிலையினர் உலகையே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர்” (திரு
அவை 34).
“கிறிஸ்து இறைவாக்கு உரைக்கும் அலுவலைத் தொடர்ந்து ஆற்றுகிறார். அவர் தம்முடைய பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கும் திரு
அவை ஆட்சியாளர் மூலம் மட்டுமல்ல, பொதுநிலையினர் வழியாகவும் இவ்வலுவலை
ஆற்றி வருகிறார். வாழ்வென்னும் சான்றாலும் போதனையாலும் கிறிஸ்துவைப் பிறருக்கு எடுத்துரைக்கும் போது நற்செய்தி அறிவிப்புப்பணி தனிச்சிறப்பு பெறும்”
(திரு அவை 35).
“கிறிஸ்து இறையாட்சியைப் பறைசாற்றினார். அவர் தம்முடைய ஆட்சியை மட்டுமல்ல, பொதுநிலையினர் வழியாகவும் பரப்ப விரும்புகிறார். இவ்வாட்சி உண்மையின் ஆட்சி, வாழ்வின் ஆட்சி, தூய்மையின் ஆட்சி, அருளின் ஆட்சி, நீதியின் ஆட்சி, அன்பின் ஆட்சி, அமைதியின் ஆட்சி ஆகும்”
(திரு அவை 36).
மேதகு
ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் மக்கள் நலப்பணிகளைத் திறம்பட ஆற்றியவர். வேலூர் மறைமாவட்ட ஆயராகத் திருச்சங்கம் மற்றும் திரு அவைச் சட்டம் காட்டும் பணிகளைவிட மேலாகவே மக்கள் வளர்ச்சிப் பணிகளை நிச்சயம் செய்வார். ஆயரின் பணி சிறக்க இறைவனை இறைஞ்சுகிறோம்.