அருங்குறிகளும், புதுமையான நிகழ்ச்சிகளும் என்னைச் சுற்றிலும் நடந்துகொண்டே இருக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கையில் உறுதிப்பாட்டோடு நிற்கும்போது நான் பல புதுமைகளை, அருங்குறிகளைச் சந்திக்க முடிந்தது. நான் உயிரோடு இன்னும் இருப்பதே இதற்குச் சான்று. மேலும், எனது வலது தோள், முழங்கை, முன்னங்கை, விரல்கள் ஆகியவற்றை இட வலமாகச் சுற்ற முடிந்ததும் தொடர்ந்து புதிப்பித்தல் உடலில் தானாக நடப்பதற்கு அத்தாட்சிகள்.
இடக்கையைப்
போலவே வலக்கையும் செயல்பட முடியும்போதுதான் நான் முழுமையடைவதாக உணர்வேனோ? நான் அப்படி நினைக்கவில்லை. புத்துயிர்
பெற்ற கைக்குச் சில குறைபாடுகள் இருக்கும். ஆனால், இந்தக் குறைபாடுகள் என் திறன்களைக் குறைப்பதில்லை. எழுதுதல், கணிப்பொறியைப் பயன்படுத்துதல், கருவிகளைக் கையாளுதல், கூடைப்பந்து விளையாடுதல், நீந்துதல், காரோட்டுதல் ஆகியவற்றிற்கு நான் இடது கையையே பயன்படுத்துகிறேன். அதுவே போதுமானதாக இருக்கிறது.
என்மேல்
இரக்கமுள்ளவர்கள் ஒருவேளை எனது முகக்குறிகளைக் கண்டு எனக்காக வருந்தலாம். நான் என் வலக்கையையும் இடக்கையைப் போலவே பயன்படுத்தினால்தான் நான் முழுமைபெற்றிருப்பதாக அவர்கள் நினைக்கலாம்.
எப்படியிருப்பினும்
உண்மையான அருங்குறி ‘ஆம்’ என்று சொல்லி, மெய் நிலையை அதன் அத்தனை உள்பொருள்களுடனும் ஏற்றுக் கொள்ளும் துணிவும் வலிமையும் நான் கொண்டிருப்பதுதான் என்று நம்புகிறேன். உடைந்து போன ‘தான்’ என்ற என்னை ஒன்றுசேர்க்கும் திறன் அது என ஆன்மாவுக்குள் ஏற்படும்
முரண்படும் மெய்நிலைகளை அறிவதன் மூலம் அனைத்துத் திறன்களையும் திரட்டும் ஆற்றலும், உலகப் பார்வைகளை ஒதுக்கித்தள்ளும், ஆன்மாவுக்கு ஊறுவிளைவிக்கும் கூறுகளை இல்லாமல் செய்து, வாழ்வுக் கொள்கைகளையும், ஆழமான நம்பிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்றவும், தேவையான உள் ஆற்றல் பெற்றிருப்பதும், என் வாழ்க்கைப் பயணத்தின் தொடுவானத்தில் காணப்படும் தெய்வீகத் தடங்களில் கண்பதிக்கும் திறனும் என் வாழ்க்கையில் நடந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள்.
என்
வாழ்க்கைக்குள் வந்தவர்கள் என்னைச் சுற்றி நடப்பனவற்றை எப்படிப் பாராட்டுவது என்று எனக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறார்கள். என்னுடைய கையில் முன்னேற்றம் மிக மெதுவாகவே நடக்கும் என்பதை நான் அறிகிறேன். என்றாலும் எந்த வழியிலும் நான் நசுக்கப்பட அனுமதிப்பதில்லை. இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். வாழ்நாள் முழுவதும் கூட ஆகலாம். எனினும், ‘இரவு எவ்வளவுதான் நீண்டதாக இருந்தாலும், விடிந்தே தீரும்’ என்று எனக்குத் தெரியும்.
முடிவுரை
இந்தப்
பக்கங்களைப் புரட்டியபோது உங்களுக்கு, உங்கள் அனுபவங்களும் நினைவுக்கு வந்திருக்கும். அவற்றில் சில உங்களுள் ஓர் உயிர் நரம்பினை மீட்டியிருக்கும். அது உலகத்தையே வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் தூண்டியிருக்கும். இறையருளால் உருவாக்கப்படும் அந்த நிகழ்வுகள், அனுபவங்கள், மனத்தில் அடைபட்டுக்கிடக்கும் அந்தக் கணங்கள் உங்களுக்கும் எனக்கும் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தந்திருக்கும். மேலும், அவை நமக்காக வாழ்க்கை தரவிருக்கும் அனைத்தையும் விரும்பி ஏற்கும் ஆன்மிக ஆற்றலால் நம்மை நிரப்பும். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து புனித பவுலோடு சேர்ந்து, “நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக” என்று
உறுதி கொள்வோம்.
பந்தயத்தில்
ஓடுவது என்றால் என்ன? பந்தயத்திலோ, மாரத்தானிலோ ஓடுவதற்கு முன்கூட்டிய திட்டமிடல் வேண்டும். ஓடும்போது இடர்ப்பாடுகள் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமென்பது பற்றி மனத்தை ஆயத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஐயத்தையும் அச்சத்தையும் வெற்றிகொள்ள ஓட்டக்காரருக்குத் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வேண்டும். மேலும் அதேசமயம் வெளியிலிருந்து வருகிற வெறுப்புணர்வுகளையும், மனத்தளர்ச்சி ஏற்படுத்தும் பேச்சுகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஓடுகின்றவர் தான் கண்ணால் காணமுடியாத ஆன்ம சக்தியாகிய கடவுள், அவருக்கு அவர் முயற்சிகளில் துணை நிற்பார் என்ற உறுதியான நம்பிக்கையும் வேண்டும். அதோடு கூட பாப் காஃப் சொல்வது போல, “உறுதியற்றதை அணைத்துக் கொள். நம்முடைய வாழ்க்கையின் மிக அழகான இயல்களின் சிலவற்றிற்குத் தலைப்புகள் பின்னரே தரப்படும்.”
இவ்வாறு
ஓட்டக்காரர் அறிவு, உடல் ஆகியவற்றின் கூட்டுச் சக்தியால் ஆர்வத்தோடு தொடு கோட்டை நோக்கி ஓடுவார். நமது வாழ்க்கைச் சூழல்களிலும் இந்த மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது உறுதியாக, நல்ல பயனை விளைவிக்கும்.
மனித
இனம் தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய உலகில், உடனடியான வெகுமதிக்காகவும், விளைவுக்காகவும் ஏங்கும் உலகில், வெற்றிக்காகப் பொறுமை இழந்து நிற்கும் உலகில், என் வாழ்க்கையின் தொடுவானத்தில் தெய்வீகக் குறுக்கீடுகளின் வழியாகச் சமனமடைந்து, கடவுளின் நேரம் விடிவதற்காக நான் காத்திருக்கப் பழகிவிட்டேன். அவருடைய அந்த நேரத்தில் எல்லாமே அழகாக இருக்கும்.
“பாதை அழகாக இருந்தால்
அது எங்கே இட்டுச் செல்கிறது என்று கேட்காதே. ஆனால், இலக்குகள் அழகாக இருந்தால், பாதையைப் பற்றிக் கவலைப் படாதே; நடந்து கொண்டே இரு” என்று சொல்வார்கள். இறுதி முடிவு சிறப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த இலக்கிற் காக நான் பொறுமையோடு தாங்கிக் கொள்வேன். ஏனென்றால், விபத்துகளின் வழியாகக் கூட அருங்குறிகளை நிகழ்த்துகின்ற இறைவனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்.
நம்பிக்கையோடு
தடங்களில் நடை போடுதல்,
மாதங்களாய்
ஆண்டுகளாய்
பரந்த
தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களில் நடத்தல், அடி எடுத்து வைத்தல்!
ஆம்!
அடி எடுத்து வைப்பது,
அந்தப்
பயணம் கண்ணீர்ப் பயணம்!
ஏனென்றால்,
பத்தாம் ஆண்டில்
அடி
எடுத்து வைக்கிறேன்.
இன்னும்
எத்தனை மாதங்கள் ஆண்டுகள்
கடக்க
வேண்டும் என்று அறியேன்
ஆனால்,
ஒன்று உறுதி;
நான்
எப்போதும் ஆசிருடன் இருப்பேன்.
ஏனென்றால்,
படைத்தவர் என் உடைந்த எலும்புகளை ஒன்றுசேர்த்து
அடியெடுத்து
வைப்பதைத் தொடரத்
தம்
தெய்வீக அருளை உறுதி செய்திருக்கிறார்.
ஆம்,
தடங்களில் அடி எடுத்து வைக்கக் கடினமாக இருக்காது. ஏனென்றால், ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் புதிய நம்பிக்கை பிறக்கிறது.
உறுதி!
அனைத்து இடரையும் மன உறுதியோடு தாங்கி,
வாழ்க்கையின் பாதையில் மைல்கள் பல நடப்பேன். தடைக்கல்
கண்டு அஞ்சமாட்டேன். ஏனென்றால், படைத்தவர் உறுதியாகத் திறப்பார்.
பாரீர்,
எல்லாச் சுமையும் பரிசாய் இலகுவாகும்
அவர்
துயர் துடைக்கும் கைப்பற்றி நான் மகிழ்ச்சியாய் நடப்பேன்.
முயற்சியைத்
தொடர்வதன்றி எனக்கு வேறென்ன வேண்டும்? ஏனென்றால், அவர் அருள் எனக்கு நங்கூரமாய் இருக்கும்!