news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (17.11.2024)

புலம்பெயர்ந்தவர்கள் வரவேற்கப்பட வேண்டும்; அவர்களுடன் நாம் செல்ல வேண்டும்; அவர்கள் வாழ்வு ஊக்குவிக்கப்பட வேண்டும்; ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

- அக். 28, மறைப்பணியாளர் சந்திப்புச் செய்தி 

திருமுழுக்கு என்பது பிறப்பின் அருளடையாளம் என்றால், உறுதிப்பூசுதல் என்பது வளர்ச்சியின் அருளடையாளம்; சான்று வாழ்வின் அருளடையாளம்; முதிர்ச்சியான கிறித்தவத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள ஒன்று.”

- அக். 30, திருப்பயணிகளுக்கான மறைக்கல்வி உரை

தகவல் தொடர்பாளர் பணி என்பது ஓர் அழைப்பு, மறைப்பணி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாகக் கிடைக்கும் வழிமுறைகளை அறிவாற்றலுடன் பயன்படுத்துவது எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்துடன் தொடர்பு கொள்வது.”

- அக். 31, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் சந்திப்புச் செய்தி

இயேசுவின் மலைப்பொழிவில் வரும் நற்பேறுகள் ஒவ்வொரு கிறித்தவரின் அடையாள அட்டை, புனிதத்துவத்திற்கான பாதை

- நவ. 01, மூவேளைச் செபவுரை

இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்ளும்.” 

- நவ. 02, லௌரென்தினோ கல்லறைத் திருப்பலி மறையுரை