news-details
சிறப்புக்கட்டுரை
நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் (1975-2025)

நாங்கள் சொல்கிறோம்!’

(1981-ஆம் ஆண்டில் புத்தக வடிவில் வந்த நம் வாழ்வுக்கு வாழ்த்தொலி) – 07

பரிசு!

நம் வாழ்வைப் புத்தக வடிவில் வெளியிட்டமைக்கு நன்றி. பாதுகாக்கச் சிரமமில்லை. இதுவே வாசகர்களுக்குப் பரிசாக அமைந்துவிட்டது. கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள், சபையினர், பங்குத் தந்தையர் ஒரு கடமையாகக் கொண்டு வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குவார்கள் என்று எண்ணுகிறேன்!         

- ஜெ.பி. பெரஸ், ஆவடி

ஆசிரியருக்கு நன்றி!

புத்தக வடிவாக்கிய ஆசிரியருக்கு நன்றி! கட்டுரைகள் தேனாக இனித்தன. கதைகள் ஜோர்! ஏழையின் விழா சிந்திக்க வைத்ததுகவிதைகள் நினைவில் நிற்கும்படி இருந்தன. குறிப்பாகஅஞ்சலிகிறிஸ்துமஸ் பரிசாக அமைந்துவிட்டது.

- திரு. இமாகுலேட், பாளையங்கோட்டை

பொலிவோடு அமைகிறது!

புதிய வடிவில் சீரோடும் சிறப்போடும் எழிலோடும் பொலிவோடும் அமைந்திருக்கிறது நம் வாழ்வு. பாராட்டுகள்!

- பொ.. இராசமணி, பாளையங்கோட்டை

ராணிக்கு ராணியாக!

புத்தக வடிவில் அழகிய அட்டைப் படங்களுடன், அதிக பக்கங்களுடன் ராணிக்கும் ராணியாகநம் வாழ்வுஅமைந்திருப்பது போற்றத்தக்கது. உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், ‘நம் வாழ்வுஎன்றடெலிவிஷன்அனைத்தையும்பவர்கட்இன்றி படம்பிடித்துக் காட்டியது. அல்லி அக்காவின் தங்கைசுதாவைகொடுத்த உங்களுக்கு நன்றி

- திரு. S. அருள், சிவகங்கை

படுஜோர் - போங்கள்!

செய்திப் பத்திரிகையாக இருந்த நம் வாழ்வை வாரப் பத்திரிகையாக மாற்றினீர்கள். இப்போது கைகளுக்கு அடக்கமாக, கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண அட்டைப் படத்துடன் தந்துள்ளீர்கள். வாழ்க உங்கள் முயற்சி! தித்திக்கும் தேன் கவிதைகள், சின்ன கதைகள், அரசியல் அரங்கம், சுதாவின் பதில்கள்... படுஜோர் போங்கள்! நமக்கும் ஒரு சிறந்த வாரப் பத்திரிகை கிடைத்துவிட்டது.

- திரு. செல்வராஜ், சென்னை

டாப் மோஸ்ட்!’

எங்கள் செல்லரித்த எண்ணத்தைச் சிந்திக்க வைத்தது தாஸ் அவர்களின்புத்தாண்டே வருக!’ பயனுள்ள கட்டுரைகள்! ஷைலஜாவின் கதைகள் கண்ணீரை வரவழைக்கிறது. வந்ததே வந்தது நம் வாழ்வு புத்தக வடிவில்டாப் - மோஸ்ட்!’    

- திருமதி. ரஞ்சித மேரி, சேலம்

பூர்த்தி செய்வீர்களா?

நம் வாழ்வுபத்திரிகை கிறித்தவ இல்லங்கள் மட்டுமல்லாமல், அனைத்து இல்லங்களிலும் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆவல். பூர்த்தி செய்வீர்களா?

- dr. அருள்தாஸ், கோழிப்பாறை, பாலக்காடு

பாராட்ட வார்த்தைகள் இல்லை!

நம் வாழ்வுபுத்தகத்தின் அட்டைதான் என்னே அழகு! இதுபோல் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா? உண்மையிலேயே கிறிஸ்தவ உலகில் மறைந்து கிடக்கும் முத்துக்கள் ஏராளம். அவர்களை அறிமுகப்படுத்தும் நம் வாழ்வின் பணியை என்னவென்று சொல்ல! பாராட்ட வார்த்தைகளே இல்லை

- ரமேஷ் பெர்னாண்டோ, தூத்துக்குடி

இனிய நல்அரும்பு!

புத்தம் புதிய வழிகண்டு

புத்தக வடிவில் அமைந்தாயே

அழகிய அட்டைப் படம் கண்டு

அனைவரும் உன்னை விரும்பி விட்டார்

என்னரும் இனிய நம் வாழ்வை

இனியநல் அரும்பாய் திகழ்ந்து விட்டாய்!

- S. பிரகாசி, சிவகங்கை

வண்ண வண்ணக் கவிதைகள்!

நூல் வடிவில் மலரும்நம் வாழ்வுமலர் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். புதுப்புது கட்டுரைகளும், வண்ண வண்ணக் கவிதைகளும் வெளிவருவது குறித்து எண்ணிலா உவகையடைகிறேன். தாஸ் அவர்களின்பொங்கல் வடிப்போம்பகுதி மிக அற்புதமாக அமைந்துள்ளது. செம்பை சேவியரின்ஒரு வீடு விழித்துக் கொண்டதுபாராட்டுக்குரியது.

- M.L.E. மனோகரன், மணப்பாறை

துப்பாக்கிச் சூடு அரசியல் ஆளுமைகளின் எதிரொலி

1981-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள், மாலைப்பொழுதில் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திப்பதற்காகத் திறந்த வாகனத்தில் திருத்தந்தை சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, துருக்கி நாட்டு 23 வயதான முகமது அலி அஃகா (Mehmet Ali Agca) என்பவரால் திருத்தந்தை 2 -ஆம் ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலைக் குறித்து உலகின் பல அரசியல் ஆளுமைகள் எழுப்பிய கண்டனக் குரல்கள்...

போப் ஆண்டவரைச் சுட்டது மனிதகுலமே வெட்கித் தலை குனிய வேண்டிய மிருகத்தனமான செயல். தமிழ்நாடு மக்களின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். உடல் நலம் அடையப் பிரார்த்திக்கிறேன்.”

- தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.

போப் ஆண்டவரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவன் முறையாளர்களின் கொடுஞ்செயல் கண்டிக்கத்தக்கது.”

- தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி

போப் ஆண்டவர் விரைவில் குணமடைய தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஎன்று நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் கூறினார். சபாநாயகர் . ராஜாராம் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

மனிதாபிமான உணர்வுகளை மதிக்கும் மக்களுக்கெல்லாம் இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். கொலை முயற்சியைக் கண்டிக்கிறேன்.” 

- கேரள முதல்வர் நாயனார்

இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். போப்பாண்டவரை இவ்வாறு தாக்கியது கண்டனத்திற்குரியது. இந்திய அரசாங்கத்தின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் இறைவன் தங்களுக்குப் பூரண குணம் அருள வேண்டுகிறேன்.”

- ஜனாதிபதி சஞ்சீவரெட்டி

நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது.”                                                        

- பிரதமர் இந்திராகாந்தி

அனைத்துலகக் கிறித்தவ மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆயர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் மிருகத்தனமாகச் சுடப்பட்ட வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைகிறோம்.”

- கிறித்தவக் குடியரசுக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ஜே.எக்ஸ். மார்க்பிறிஸ்

அதிர்ச்சியடைந்தேன். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.”                              

- .நா. சபைத் தலைவர் வால்டீம்

வன்முறையைக் கண்டிக்கிறேன். எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், விரைவில் குணமடைய விரும்புகிறேன்.”                        

- பிரான்சின் புதிய அதிபர் மி தார்ராள்

யாராவது உயர்ந்த மனிதர் இருந்தால் அவரைச் சுட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. இது மானக்கேடானது.”                                                                

- பிரான்சின் பழைய அதிபர் கிஸ்கார்ட்

பீதி அடைந்தேன்.”

- இங்கிலாந்து ராணி

வேதனை அடைந்தேன்.”

- மேற்கு ஜெர்மனி அதிபர் கார்ல் கார்டன்