உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 - அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸைத் தோற்கடித்ததன் மூலமாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
1893 -ஆம் ஆண்டு
கிரோவர் கிளீவ்லேண்டின் வெற்றியில் நிகழ்ந்தது அந்த வரலாறு. அதாவது, தோல்வி அடைந்த ஓர் அதிபர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் போட்டியிட்டு மீண்டும் அதிபரானார். அந்த வரலாறு மீண்டும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறியிருக்கிறது.
இந்த
வரலாற்றுப் பதிவுடன் 2020 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது 77 வயதில் போட்டியிட்டு வெற்றி கண்ட தற்போதைய
அதிபர் ஜோ
பைடனின் வயதையும் கடந்து, தனது 78- வது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் ட்ரம்ப். இதன்
மூலம் அதிக வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்வானவர் என்ற பைடனின் சாதனையையும் இவ்வெற்றியின் மூலம் முறியடித்திருக்கிறார்.
6.71 கோடி பொதுமக்கள்
வாக்குகளையும், 224 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்ற கமலா ஹாரிஸைவிட, 7.19 கோடி பொதுமக்கள் வாக்குகளையும், 295 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்று மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக ஜனவரி 20, 2025 அன்று அரியணை ஏறுகிறார்.
அமெரிக்காவில்
அதிபர் தேர்தல் சற்றே வித்தியாசமானது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க குடிமக்கள் நேரடியாக வாக்களிப்பதுபோலத் தோன்றினாலும், அந்த வாக்குகள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சியின் சார்பாக இருக்கும் தேர்தல்-பிரதிநிதிகளுக்கே (எலக்ட்ரஸ்) கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாகாணங்கள் சார்பாக உள்ள ‘செனட்டர்’
எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தல்-பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
மக்கள்தொகை
அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் சம பங்களிப்பு இருக்க
வேண்டும்; கறுப்பின மக்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் சமமான, முறையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வாக்குமுறை அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்
அடிப்படையில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் 535 மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில், கொலம்பியா மாகாணத்திற்குக் கீழவையில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அந்த மாவட்டம் சார்பாகத் தனியாக மூன்று பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு, 50 மாகாணங்களுக்குமாக மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களான 270 பேரின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
மாகாணங்களில்
பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அந்த மாகாணங்களில் உள்ள அனைத்துத் தேர்தல்-பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறுகிறார். குறிப்பாக, டெக்ஸஸ் மாகாணத்தில் 56.3 விழுக்காடு பொதுமக்கள் வாக்குகளைப் பெற்ற ட்ரம்ப், அம்மாகாணத்தின் தேர்தல்-பிரதிநிதிகளான 40 நபர்களின் வாக்குகளையும்
பெறுகிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. இவருடைய வெற்றி மிகப்பெரிய சரிவிருந்து மீண்டு வந்த வெற்றி! 2020 -ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி
அடைந்த சில தினங்களில் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கலகம் செய்தனர். அவ்வேளையில் ‘ட்ரம்ப் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்’ என்றும்,
அவரது அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கிவிட்டது, முடிவை நோக்கி நகர்கிறது என்றும் உலக அரசியலே அன்று கணித்தது.
ஆயினும்,
குற்றவியல் வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், இரு கொலை முயற்சிகள்... எனத் தன்மேலுள்ள பல தடைகளையும் தாண்டி
இன்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் ட்ரம்ப்.
“பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது அவரது காதை உரசிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ஓர் அங்குலம் தள்ளிப் பாய்ந்திருந்தால் அமெரிக்க வரலாறே மாறியிருக்கும்” என்கிறார்கள்
அரசியல் விமர்சகர்கள்.
தொடரும்
வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும், எல்லாச்
சவால்களையும் எதிர்த்துப் போராடி அமெரிக்க வரலாற்றில் அரசியலின் அடி ஆழத்துக்கு அழுத்தப்பட்டு அதிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப்போல் மீண்டெழுந்த தலைவர் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின்
இத்தகைய வெற்றியால் அவருடைய அரசியல் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எல்லாரும் குடியேறும் பரந்த நாடாக இருக்கும் தன்மையிலிருந்து மாறி, இனி எல்லைப் பாதுகாப்பில் அதிகக் கவனம் கொண்டிருக்கும். எளிதாக இனி அமெரிக்காவில் எவரும் குடியேற முடியாது. குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனக் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதை
மெய்ப்பிக்கும் வண்ணம் தனது வெற்றிக்குப் பின் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவின் எல்லையை நாம் பாதுகாக்கப் போகிறோம்; அமெரிக்காவின் ஒவ்வொரு தன்மைகளையும் மாற்றி நாட்டைச் சரிசெய்யப் போகிறோம்; இனி நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. மக்களுக்காகத் தினமும் களம் காணப் போகிறேன். அமெரிக்காவின் பொன்னான காலமாக இனி இது இருக்கப் போகிறது. ‘Make America Great Again’ என்ற கொள்கைக்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம்”
என்று சூளுரைத்திருக்கிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியால் அமெரிக்காவின் வளர்ச்சியில் மட்டுமின்றி, உலக வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனிதவளம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல தளங்களில் உலகளாவிய
மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி
பெற்ற அதிபரை வாழ்த்தும் உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துச் செய்தியும் கூற்றும் இதை உறுதி செய்வதாகவே இருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “சுதந்திரம், சனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதோடு, வளர்ச்சி, பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என வரும் காலங்களில்
அமெரிக்கா -பிரிட்டனிடையிலான உறவு சிறப்புற செழிப்படையும்” என
நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேசியும் தங்கள் நாடுகளுக்கிடையே மிகப்பெரிய உறவுக் கூட்டணி நிகழும் எனவும், தொடர்ந்து ஒன்றாகப் பணியாற்ற வலுவான கட்டமைப்பை உருவாக்குவதாகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ஜெர்மனியின் பிரதமர் ஓலா சோர்ஸ், “இரு நாடுகளும் இணைந்து தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பணிகளைத் தொடர வேண்டும்”
என அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியப்
பிரதமரோ, பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுப்பெறும் வகையில் மீண்டும் இணைந்து பணியாற்றத் தான் காத்திருப்பதாக அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய விரிவான மற்றும் வியூகக் கூட்டாண்மை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது
வெற்றியின் மூலம் வரலாற்றுச் சாதனைகள் படைத்திருக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வாழ்த்துவோம். உலக நாடுகளுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் பேணவும், உலக அளவில் ஒட்டு மொத்த மானுட வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றவும் வேண்டுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்