news-details
வத்திக்கான் செய்திகள்
இறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்காகத் திருப்பலி

நவம்பர் 4-ஆம் நாள் அன்று திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 2023-ஆம் ஆண்டு இறந்த ஏழு கர்தினால்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலி நிறைவேற்றினார்.  இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட நல்ல திருடனின் வார்த்தைகளைத் தன் மறையுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்என்பதை அடிக்கடி கூறுபவர்களாக வாழ வேண்டும்என்று வலியுறுத்தினார். மேலும், இயேசுஇரக்கம் நிறைந்த நீதிபதிஎன்றும், ‘பாவிகளின் செபத்தை இறைவன்எப்போதும் கேட்கின்றார், இறுதிவரை கேட்கின்றார்என்றும், ‘வலியால் துளைக்கப்பட்ட கிறிஸ்துவின் இதயம் உலகைக் காப்பாற்றத் திறக்கிறதுஎன்றும் எடுத்துரைத்தார்.