news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தின் புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி நினா கிராபிக்!

வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தின் (Holy See Press Office) புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி நினா பெனடிக்டா கிராபிக் (Sr. Nina Benedikta Krapic) என்பவரைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். 2019 முதல் இப்பணியில் இருந்த கிறிஸ்டியன் முர்ரேவுக்குப் பதிலாக இவர் 2026, மார்ச் 1 அன்று பொறுப்பேற்கிறார். குரோஷியா நாட்டைச் சேர்ந்த 36 வயதான அருள்சகோதரி நினா, சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். மக்கள் தொடர்பியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர். வத்திக்கான் தகவல் தொடர்புத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான சட்ட ஆலோசகராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயர்களுக்கான வத்திக்கான் உயர்மட்டக் குழுவில் அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லா நியமனம்!

திரு அவையின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றானஆயர் நியமனத்திற்கான துறையின் (Dicastery for Bishops) உறுப்பினராக அருள்சகோதரி சிமோனா பிரம்பில்லாவை (Sr. Simona Brambilla) திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வத்திக்கான் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது. 61 வயதான இத்தாலிய நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி சிமோனா, ஏற்கெனவே துறவற வாழ்வுக்கான வத்திக்கான் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது இவர், ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் மற்றும் நியமிக்கும் பணிகளைக் கவனிக்கும் உயர்மட்டக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஆயர்களைத் தேர்வு செய்யும் வத்திக்கான் குழுவில் இடம்பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகிறார். ஏற்கெனவே அருள்சகோதரி இரஃபேலா பெட்ரினி மற்றும் மரியா லியா செர்வினோ ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
“போர் என்பது மனித வாழ்வின் மீதான மிகக் கடுமையான தாக்குதல்!” - திருத்தந்தை

உலகில் பெருகிவரும் போர்களும் மோதல்களும் மனித வாழ்விற்கும்,  பொதுச் சுகாதாரத்திற்கும் விடப்படும் மிகப்பெரிய சவால்கள் என்று திருத்தந்தை லியோ எச்சரித்துள்ளார்வத்திக்கானில் நடைபெற்றவாழ்விற்கான திருத்தந்தை அகாதமி (Pontifical Academy for Life) கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை, “போர்க்காலங்களில் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டமைப்புகள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுஎன்று தெரிவித்துள்ளார். அவ்வாறே, “ஆயுத உற்பத்திக்குக் கோடிக்கணக்கான நிதியைச் செலவிடும் இவ்வுலகில்மக்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்க நேரத்தையும் நிபுணத்துவத்தையும் ஒதுக்குவது முன் எப்போதையும் விட இன்று அவசியமாகிறதுஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதாரம் கிடைக்காத சூழலைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒருவரின் வருமானம் மற்றும் வாழும் இடத்தைப் பொறுத்து சுகாதாரம் தீர்மானிக்கப்படுவது ஒருநயவஞ்சகமான நிலைஎன்று தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கிறிஸ்துவைப் போல உருமாறி புனிதர்களாக வாழுங்கள்” - திருத்தந்தை அழைப்பு!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றுவரும் குருக்களுக்கான மாநாட்டிற்குத் திருத்தந்தை லியோ செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். “தற்கால மதச்சார்பற்ற கொள்கைகளும் சவால்களும் குருக்களைத் திகைக்க வைக்கவேண்டாம். இறைவேண்டல் மற்றும் கிறிஸ்துவின் அருகாமையே மக்களின் இதயத் தாகத்தைத் தீர்க்கும். இன்றைய திரு அவைக்குத் தேவைப்படும் குருக்களாக மாற புனித அவிலா யோவானின் ஆலோசனையைப் பின்பற்றி முற்றிலும் இறைவனுக்கே உரியவர்களாக அதாவது புனிதர்களாக வாழுங்கள்என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், “வெறும் கடமைகளைச் செய்பவர்களாக இல்லாமல், நற்கருணையால் ஊட்டம் பெற்று கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்மறு கிறிஸ்துவாக (Alter Christus) மாறவும், ஆழமான செப வீரர்களாக இருங்கள்; இறைவனை ஆராதிக்க உங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள்எனவும் திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
நைஜீரியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம்!

நைஜீரியாவில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடூரமான தாக்குதல்களுக்குத் திருத்தந்தை லியோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வன்முறையினால் உயிரிழந்த மக்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் தனது துயரத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, “பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் செபிக்கிறேன்; ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உயிரையும் உறுதி செய்ய நைஜீரிய அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 3 அன்று வோரோ கிராமத்தில் 160 பேர் கொல்லப்பட்ட துயரத்தையும், கதுனா மாநிலத்தில் அருள்பணியாளர் உள்பட 51 பேர் கடத்தப்பட்ட நிகழ்வையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியதோடு, காகு பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி ஆலயத்தின் பங்குத்தந்தை நதானியேல் அசுவாயே கடத்தப்பட்டதற்கும், மூன்று பேர் கொல்லப்பட்டதற்கும் திருத்தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
நைஜீரியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம்!

நைஜீரியாவில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடூரமான தாக்குதல்களுக்குத் திருத்தந்தை லியோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வன்முறையினால் உயிரிழந்த மக்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் தனது துயரத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, “பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் செபிக்கிறேன்; ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உயிரையும் உறுதி செய்ய நைஜீரிய அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 3 அன்று வோரோ கிராமத்தில் 160 பேர் கொல்லப்பட்ட துயரத்தையும், கதுனா மாநிலத்தில் அருள்பணியாளர் உள்பட 51 பேர் கடத்தப்பட்ட நிகழ்வையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியதோடு, காகு பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி ஆலயத்தின் பங்குத்தந்தை நதானியேல் அசுவாயே கடத்தப்பட்டதற்கும், மூன்று பேர் கொல்லப்பட்டதற்கும் திருத்தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.