news
வத்திக்கான் செய்திகள்
“செயற்கை நுண்ணறிவு காலத்திலும் மனித மாண்பைப் பாதுகாப்போம்” - திருத்தந்தை

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் புதிய பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் வெளிக்கொணரப்பட்ட ‘Rerum novarum’ (Of New Things) எனும் சமூகக் கொள்கை அறிக்கையின் 135-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் சுற்றுமடலை  வெளியிட்டுள்ளார். ‘மாண்புமிகு மானுடம்(Magnifica Humanitas) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடல், ‘செயற்கை நுண்ணறிவு (..) காலத்தில் மனித மாண்பைப் பாதுகாத்தல்குறித்துப் பேசுகிறது. ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இம்மடலில், தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு எதிரானது அல்ல; இருப்பினும், அது ஒருபோதும் நடுநிலையானதுமில்லை எனத் திருத்தந்தை குறிப்பிடுகிறார். மேலும், தொழில்நுட்பம் ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கப் பயன்படக்கூடாது என்றும், அது எண்மப் (டிஜிட்டல்) பிளவை அதிகப்படுத்தக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கு உலகளாவியஅறநெறி விதி(Ethical Code) உருவாக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். .. என்பது இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தொழிலாளர் கண்ணியம், சமூகநீதி மற்றும் உலகளாவிய பொதுநலனை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். புலம்பெயர்ந்தோரை நடத்தும் விதம் சமூக நீதியின்உரைகல்என்றும், தொழில்நுட்பம் மனித உழைப்பைப் பறிக்காமல் அதற்குத் துணையாக இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மானுடத்தின் பின்னடைவாக அமைந்துவிடக்கூடாதுஎன்பதே திருத்தந்தையின் மையச்செய்தியாக உள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“வங்கி மற்றும் நிதித்துறையின் மையப்புள்ளி மனிதர்களே” - திருத்தந்தை

வத்திக்கானில் இத்தாலிய வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்தபோது, “வங்கி மற்றும் நிதி அமைப்புகள் எப்போதுமே மனிதர்களை மையமாகக் கொண்டு செயல்படவேண்டும்என்று வலியுறுத்தியுள்ளார். 

ஒரு வங்கிக்குள் முதலில் நுழைவது மூலதனம் அல்ல; மாறாக, மனிதர்களே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எண்களுக்குப் பின்னால் உதவி தேவைப்படும் ஆண்கள்-பெண்கள் மற்றும் குடும்பங்கள் உள்ளனர்என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியும், “கணிப்பொறி படிமுறை (Algorithm) முறைகளும் பெருகிவரும் இன்றைய சூழலில், சேவைகளைப் பெறுவோர் தங்களைக் கணினி அமைப்புகளிடம் கைவிடப்பட்டதாக உணரக்கூடாது; மாறாக, அவர்களுக்குச் செவிசாய்க்கவும் நன்மை செய்யவும் மனிதர்கள் தயாராக இருக்கவேண்டும்என்று தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனங்கள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் பொதுநலனை ஊக்குவிக்கவேண்டும். சுயநலமான சேமிப்பு வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும்என்று எச்சரித்த திருத்தந்தை, அறநெறி சார்ந்த நிதி மேலாண்மையே நிலையான வளர்ச்சிக்கு உதவும் என்றார். வங்கியாளர்கள் தங்களின் உத்திகளை வகுக்கும்போதுஅன்பு மற்றும் தர்மத்தைவழிகாட்டும் கொள்கையாகக்கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.


news
வத்திக்கான் செய்திகள்
மாண்புமிகு மனிதநேயம்’ (Magnifica humanitas) - செயற்கை நுண்ணறிவு குறித்த திருத்தந்தையின் முதல் சுற்றுமடல்

செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை 14-ஆம் லியோ எழுதியுள்ளMagnifica humanitas (மாண்புமிகு மனிதநேயம்) என்ற அவரது முதல் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சுற்றுமடல் மே 25 அன்று வெளியிடப்படவுள்ளது.

தொழில்புரட்சியின்போது தொழிலாளர் நலனுக்காகத் திருத்தந்தை 13-ஆம் லியோ வெளியிட்ட Rerum Novarumசுற்றுமடலின் 135-ஆம் ஆண்டு நினைவாக இப்புதிய ஆவணத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ மே 15-ஆம் தேதியிட்டு கையெழுத்திட்டுள்ளார். மே 25 காலை 11:30 மணிக்கு வத்திக்கான் சினட் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் திருத்தந்தை நேரடியாகப் பங்கேற்பார்.

இந்நிகழ்வில் கர்தினால்கள் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் மற்றும் மைக்கேல் செர்னி ஆகியோருடன்ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவுனர் கிறிஸ்டோபர் ஓலா மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களும் உரையாற்றவுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி மனித அடையாளங்களைச் சிதைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இச்சுற்றுமடல் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்தினால் பியெட்ரோ பரோலின் நிறைவுரைக்குப்பின், திருத்தந்தை லியோ தனது சிறப்புரை மற்றும் ஆசிரை வழங்கவுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அமைதிக்கான அக்கறை என்பது வாழ்விற்கான அக்கறை” - திருத்தந்தை

புகழ் அனைத்தும் உமதே(Laudato Si) வாரத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ ஆற்றிய உரையில், அமைதியும் படைப்பினைப் பாதுகாப்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று வலியுறுத்தியுள்ளார். மே 17 முதல் 24 வரை நடைபெறும் இந்த வாராந்திர நிகழ்வு, நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கான திருத்தந்தை பிரான்சிஸின் சுற்றுமடலை நினைவுபடுத்துகிறது.

அசிசி புனித பிரான்சிஸின் 800-வது நினைவு ஆண்டைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுளோடும் சகமனிதர்களோடும் அனைத்துப் படைப்புகளோடும் அமைதியைப் பேணவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அண்மைக் காலங்களில் நடைபெறும் போர்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கான பணிகளைப் பெருமளவு பின்தங்கச் செய்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். ‘அமைதிக்கான அக்கறை என்பது வாழ்விற்கான அக்கறைஎன்று குறிப்பிட்ட திருத்தந்தை லியோ, ஒருங்கிணைந்த சூழலியலுக்காக உழைப்பவர்கள் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


news
வத்திக்கான் செய்திகள்
“மனிதநேயத்தைப் புதுப்பிக்கக் கிறித்தவரும் இசுலாமியரும் இணைந்து செயல்படவேண்டும்”

நவீன காலத்தில் மனிதநேயம் குறைந்து வரும் நிலையில், அதனை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அலட்சியத்தைப் போக்கி ஒருமைப்பாட்டை வளர்க்கவும் கிறித்தவரும் இசுலாமியரும் கைகோர்க்கவேண்டும் என்று திருத்தந்தை லியோ அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இஸ்லாமிய மரபில்ரஃபா (ra’fa) எனப்படும் இரக்கம் என்பது கடவுளால் இறைப்பற்றாளர்களின் இதயங்களில் வழங்கப்படும் ஒரு பரிசு. இறைவனின் 99 திருப்பெயர்களில் ஒன்றானஅல்-ரவூப் (al-Ra’uf) என்பது, இரக்கத்தின் ஊற்றுக்கண் கடவுளே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கிறித்தவ மரபில் இந்தத் தெய்வீக இரக்கம் இயேசுவின் வழியாக உருவம் பெற்று, மனிதத் துன்பங்களை அவரே அனுபவிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. ஏழை எளியோர் மீதான அன்பு என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; மாறாக, அது நமது கடமை என்று வலியுறுத்திய திருத்தந்தை, அகதிகளை வரவேற்கும் ஜோர்டான் நாட்டின் தாராளமான முயற்சிகளையும் பாராட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அறிவியல் ஆய்வுகள் வழியாக இறைவனைக் காண்போம்” - திருத்தந்தை

கத்தோலிக்கத் திரு அவை அறிவியலுக்கு எதிரானது அல்ல; மாறாக, உண்மையான அறிவியலைத் தழுவி, அதன் வழியாக இறைவனின் படைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறதுஎன்று திருத்தந்தை  லியோ தெரிவித்துள்ளார். அண்மையில் வத்திக்கான் வானாய்வு மைய அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை, 1891-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ இந்த மையத்தை மறுசீரமைத்ததை நினைவுகூர்ந்தார். “திரு அவை உண்மையான அறிவியலை எதிர்க்கவில்லை; மாறாக, அதனை முழு பக்தியுடன் ஊக்குவிக்கிறது என்பதை உலகிற்குக் காட்டவே இது நிறுவப்பட்டதுஎன்றார். மேலும், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளிகள், கடவுள் படைத்த வான்சுடர்களைக் காண்பதிலிருந்து நம்மைத் தடுப்பதாக வருந்திய திருத்தந்தை, “படைப்பைப் புரிந்துகொள்ளும் தாகமே இறைவனைத் தேடும் மனித ஆன்மாவின் ஏக்கம்என்றும் சுட்டிக்காட்டினார்.