news
தமிழக செய்திகள்
நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும், நம் வாழ்வுவார இதழ் பற்றிக் கூறி சந்தாதாரர்களை உருவாக்கவும், மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பான நன்றிக்குரியோர்!

தம் பங்கு மக்களைநம் வாழ்வுவார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம், வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வுஇதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்என விழிப்புணர்வு கொடுத்து 50 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் புழல் புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. Y.F. போஸ்கோ அவர்களுக்கும், 52 சந்தாக்களைப் பெற்றிட உதவிய செங்கல்பட்டு மறைமாவட்டம் சேலையூர், புனித சூசையப்பர் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் பிரேம்குமார் அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                                  

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
கிறிஸ்து பிறப்பு விழா - யூபிலி 2025 நல்வாழ்த்துகளும் ஆசிரும்!

ஆதவன் உதிக்க, காரிருள் மறைவது போன்று... நம்மைச் சூழ்ந்திருக்கும் காரிருளின் பல்வேறு தன்மைகளை முற்றிலுமாகப் போக்கிட பேரொளி தந்திடஉலகின் ஒளியாய்பிறந்துள்ள பாலன் இயேசுவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பிறந்துள்ள பாலன் இயேசுவின் வருகையானது நமக்கும், நம் குடும்பங்களுக்கும் பங்குத்தளங்களுக்கும் துறவற இல்லங்களுக்கும் அவருடைய வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் புது வாழ்வையும் புது விடியலையும் நிறைவாகத் தருவதாக!

கிறிஸ்து பிறப்பு அன்பின் காலம். மகிழ்வை, அமைதியை, இறைவனின் நிறை ஆசிரைப் பகிரும் காலம். கடந்த காலத்தின் நிறைவையும், நிகழ்காலத்தின் மகிழ்வையும், எதிர்காலத்தின் எதிர்நோக்கையும் குறித்துக் காட்டி நன்றியுணர்வுடன் வாழ வழிகாட்டும் காலம்.

கிறிஸ்து பிறப்பின்-2025 யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறைகூவலுக்கேற்ப புதிய எதிர்நோக்குடன் ஒருங்கியக்கப் பாதையில்எதிர்நோக்கின் திருப்பயணிகளாகநாம் பயணிப்போம். அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை எனும் இறையாட்சியின் மதிப்பீடுகளில் வாழ்ந்து இவ்விழுமியங்கள் கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.

பிறக்கும் பாலன் இயேசு நம் அனைவருக்கும் விண்ணக மகிழ்வையும், அமைதியையும், ஆசியையும் நிறைவாக அருள்வாராக!

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
முதல்வர் கணினித் தமிழ் விருது! நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழியாகத் தமிழ்மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக முதல்வர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ. 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த 2024-ஆம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023 -ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின்www.tamilvalarchithurai.in.gov.inஎன்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச.31 - க்குள் அனுப்பி வைக்கவும் கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 - 28190412, 044 - 28190413 ஆகிய தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

                                                                          - தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
விருதுபெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பலர் ஆற்றிவரும் அரிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும்டாக்டர் அம்பேத்கர் விருதுவழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கானடாக்டர் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ. 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘www.tn.gov.in/ta/forms/Deptname/I’ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

- தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
வேலூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து

தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராக, செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 9 சனிக்கிழமை, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா அன்று நியமனம் செய்துள்ளார். அருள்தந்தை அவர்கள், 1966, மே 3-ஆம் நாள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் உள்ள செய்யூரில் பிறந்தார். 1993, மார்ச் 25 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட தந்தை அவர்கள் சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தொடர்ந்து செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாகச் சிறப்புடன் பணியாற்றினார்.   

பெல்ஜியத்தில் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப் பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். செங்கல்பட்டு மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்கப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (Jeevan Jyothi Indian Administrative Service - JJIAS), பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். ஏழு ஆண்டுகள் செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய இவர், தற்போது திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அருள்பொழிவு வருகின்ற டிசம்பர் 09 -ஆம் நாள் வேலூர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயர்

தமிழகத்தில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தைக் கொடுத்த இராஜராஜ சோழனைத்தான்பெருமன்னன்என அழைக்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர் இராஜராஜ சோழன். அவரின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட இராஜராஜன் என்ற பெருமன்னனின் சதய விழாவைத் தமிழக அரசு நடத்துவதுடன், தமிழுக்குத் தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது பெருமன்னன் இராஜராஜ சோழனுக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும்.”

- திரு. ஆர். சுரேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி