news
தமிழக செய்திகள்
கரூர் துயரம்: “ஆழ்ந்த துயருறுகிறோம்!” – தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி!

தமிழ்நாட்டில் கடந்த  27-09-2025 அன்று, கரூரில் நடைபெற்ற  ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி நம் இதயங்களுக்குத் துயரத்தை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் அதிக அளவில் உயிரிழந்த பரிதாபம் மிகுந்த வேதனையைத் தருகிறது.

உறவுகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவை இறைவேண்டல் கலந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் சகோதர-சகோதரிகள் விரைவில் நலம்பெறவும் கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறோம். இந்த எதிர்பாராத பெருந்துயர் நிகழ்வு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. இறைவேண்டல்கள் மூலம் உங்கள் குடும்பங்களுக்கு எங்கள் நெருக்கத்தை உறுதியளிக்கிறோம். ஆறுதல் அருளும் இறைவன், இறந்தவர்களுக்கு நிலைவாழ்வை வழங்குவாராக!

துயரமான தருணத்தை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் வேளையில், உறவினர்களின் இழப்பினால் துயருறும் குடும்பங்கள் அமைதியும் ஆறுதலும் வலிமையும் நம்பிக்கையும் பெற்றுக்கொள்ள இறைவனை இறைஞ்சுகிறோம். காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல்நலம் மற்றும் ஆன்ம நலம் பெற்றிட எங்கள் இறைவேண்டல்களில் அவர்களை நினைவுகூருகிறோம். மீண்டுமாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் அனைவருக்கும் தமிழக ஆயர் பேரவை மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர்

news
தமிழக செய்திகள்
சிறப்பான நன்றி!

நம் வாழ்வின்பொன்விழா ஆண்டில்நம் வாழ்வுஇதழின் தனித்துவம், முக்கியத்துவம், இதழின் சிரமங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்கூறி, பல மக்களைநம் வாழ்வுசந்தாதாரராக மாற்றியுள்ளார் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. அருள் ஜேசுதாஸ் அவர்கள்.  குறிப்பாக, குழந்தைகளை வாசிக்க ஊக்குவிக்கும் பொருட்டு, 65 மாணவர்களுக்கு, ‘கல்விச் சுரங்கம்எனும் மாணவர் மாத இதழை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அண்மையில் வெளியிட்டவானவில் வரிசை நூல்கள் (மாணவர்களின் பன்முக ஆளுமை வளர்ச்சிக்கான 7 நூல்கள்) 65 மாணவர்கள் வாங்கிப் பயன்பெற ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட அருள்தந்தை அருள் ஜேசுதாஸ் அவர்களுக்கும், அனைத்து மறைக்கல்வி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கும் சிறப்பான நன்றி!             

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
நல்லாசிரியர் விருது பெற்ற அருள்பணியாளரைப் பாராட்டி மகிழ்கிறோம்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் - பள்ளிவிடை புனித உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்முனைவர் சாந்தகுமார். கடந்த செப்டம்பர் 5 அன்று, கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது முன்னிலையில் துணை முதலமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் இவர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். தற்போது புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற அருள்தந்தை அனைத்துச் செயல்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஓர் எடுத்துக்காட்டான ஆசிரியராகத் திகழ்கின்றார். மாணவர் சேர்க்கை, மாணவர் தேர்ச்சி, பசுமை வளாகம், சிறுவர் பூங்கா, கணினி அறைகள், இசைக்கருவிகளுடன் கூடிய கலைக்கூடம், மழைநீர் தேங்காத வண்ணம் சாலைகள், எழில்மிகு வண்ணங்களில் பள்ளிக் கட்டடங்கள், பேண்ட் வாத்திய இசைக் குழு, .பி.ஜே. அப்துல் கலாம் இலவச மாலைப் பள்ளி, விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம், ஆங்கில இலக்கண வகுப்புகள், இலவச விளையாட்டுச் சீருடை, இலவசப் புத்தகப் பைகள் என மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்து வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் இவர் மேற்கொண்ட முயற்சிகளும் உழைப்பும் எண்ணிலடங்காதவை. இவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமேநல்லாசிரியர் விருது. தந்தை அவர்கள் தொடர்ந்து கல்விப் பணியில் பல சாதனைகள் படைக்கநம் வாழ்வுஅன்போடு வாழ்த்துகிறது.                                    

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
16-வது பொது அவையின் இறுதி ஆவணம் வெளியீடு!

சென்னை-நசரேத்பேட்டையில், 16-வது பொது அவையின் இறுதி ஆவணத்தின் தமிழாக்கம், தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் வெளியிடப்பட்டது. பேராயர் அவர்களின் 20-ஆம்  ஆண்டு ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வில் இந்நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  கத்தோலிக்கத் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கணித்து, தன்னைத்தானே புதுப்பிக்கும் பணியில் கூட்டொருங்கியக்கத் திரு அவையாகத் தன்னை அடையாளப்படுத்துவதற்காக, கருத்துச் செறிவுமிக்க கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தமர்வுகளை உள்ளடக்கிய உலகளாவிய 16-வது ஆயர் மாமன்றமானது, 2023 அக்டோபர் மற்றும் 2024 அக்டோபர் ஆகிய இரண்டு வெவ்வேறு தருணங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பதற்காக, தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஒப்புதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இக்கருத்துச் செறிவுமிக்க ஆவணத்தை, கோவை-நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மொழிபெயர்ப்பு செய்தனர். தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழானநம் வாழ்வுபதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. விலை : ரூ.150/-

தொடர்புக்கு: ‘நம் வாழ்வுபதிப்பகம், 62, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004.

செல்: 94980 32244

news
தமிழக செய்திகள்
பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தையின் உரை

கோவை மறைமாவட்டத்தில் உள்ள புனித செபமாலை அன்னை பசிலிக்கா தமிழ்நாட்டின் 7-வது பசிலிக்காவாகும். இந்தப் பசிலிக்காவின் வரலாறு 385 ஆண்டுகள் கொண்டதாகும். இங்கு வரும் மக்கள் ஏராளமானோர் அன்னையைத் தரிசித்து இறையேசுவின் வழியாக அருள் வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

அன்னையின் அளவிட முடியாத அன்பும் அரவணைப்பும் வழிநடத்துதலும் பரிந்துரையும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நம்பிக்கை கீதங்களாக ஒளிர்கின்றன.

நம் அன்னையின் பெருவிழா வருகின்ற அக்டோபர் முதல் ஞாயிறு 5-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இறைமக்கள் அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு அன்னையின் வழியாக இறைமகன் இயேசுவின் அருளைப் பெற்றுச் செல்ல எம் மறைமாவட்ட அருள்தந்தையர்கள், இருபால் துறவியர்கள் மற்றும் எம் பங்கு மக்களோடு இணைந்து இறைவனின் ஆசிர்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றேன். அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்!


news
தமிழக செய்திகள்
முதன்மைக் குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை பசிலிக்கா, மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது. இந்த அழகுமிக்க பசிலிக்கா மறைமாவட்டத்திற்குப் பெரும் புகழைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றார்கள். பசிலிக்கா நம்மையும் இறைவனையும் மிக நெருக்கமாகச் சந்தித்து உரையாட வைத்து இறைவனின் அர்ச்சிப்பைப் பெற்றுக்கொண்டு நம்மைப் பிறருக்கு நல்ல மனிதர்களாக மாற்றுகின்ற ஓர் உன்னதமான இடம்.

இங்கு வரும் அனைத்து மக்களும் ஏராளமான வரங்களை மகிழ்ச்சியோடு பெற்றுச்செல்ல இந்த இறைவேண்டலின் வீடு துணைபுரிவதாக! இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். பசிலிக்கா அதிபர், அருள்தந்தையர்கள், பங்கு இறைமக்கள், வருகின்ற திருப்பயணிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.