news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.06.2025)

அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல; மாறாக, மனித மனங்களின் தாழ்ச்சியிலும், உரையாடலில் கவனமும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுத்தலும் ஆகும்.”

- மே 16, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஆயுதங்கள் அமைதியாகட்டும்என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் திரு அவை ஒருபோதும் சோர்வடையாது.”

- மே 14, கீழை வழிபாட்டுமுறை திரு அவையினரோடு சந்திப்பு

நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

உரையாடல் செய்பவர்களாக, உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் வாழ வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

ஒற்றுமையான திரு அவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.”

- மே 18, திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தையின் திருவாக்கு - திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (25.05.2025)

கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்.”

- மே 8, திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி  (Urbi et Orbi) செய்தி

கடவுள் அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்; அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள்.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உறவின் பாலங்களைக் கட்டுவது என்பது தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது மற்றும் கதவுகளை மூடாமல் இருப்பது.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உண்மையான, நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை. போர் இனி ஒருபோதும் வேண்டாம்.”

- மே 11, ஞாயிறு மூவேளைச் செபவுரை

அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை

மனிதகுல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.”

- மே 12, உலகச் சமூகத் தொடர்புத் துறையினருக்கு ஆற்றிய உரை

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04-05-2025)

அன்பு என்பது எப்போதும் ஓர் அர்ப்பணிப்பு, அன்புடன் மற்றவரை நாம் சந்திக்கச் செல்லும்போது ஏதாவது ஒன்றினைக் கண்டிப்பாக நாம் இழக்க வேண்டியிருக்கும்.”

- ஏப்ரல் 16, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளி நிறைந்த தளிர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமாகப் பாதுகாத்து வளரச்செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா  திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

இந்த உலகம் வன்முறை மற்றும் தீமைகளால் மிகக்கொடியதாக மாறினாலும், கடவுள் நமது வாழ்க்கைப் பாதையில் நம்மோடு உடன் பயணிக்கின்றார் என்னும் மகிழ்வின் நற்செய்தியை எடுத்துரைப்பதே இயேசுவின் உயிர்ப்பு.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

தீமை என்பது நமது வாழ்விலிருந்து மறைந்து விடவில்லை, அது நம் வாழ்வின் இறுதிவரை இருக்கும். ஆனால், கடவுளின் அருளை வரவேற்று ஏற்பவர்களின் வாழ்வில் அது ஒருபோதும் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தாது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

உயிர்ப்பு என்பது வாழ்க்கையின் விழா. கடவுள் நம்மை வாழ்வதற்காகப் படைத்தார், மனிதகுலம் மீண்டும் உயர வேண்டும் என்று விரும்புகிறார். அவரது பார்வையில் ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (27.04.2025)

ஒன்றாகத் துன்பத்தை எதிர்கொள்வது நம்மை மனிதர்களாக ஆக்குகிறது; வலியைப் பகிர்ந்துகொள்வது புனித வாழ்வுப் பயணத்தின் ஒரு முக்கியமான படி.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் அதிகமாகும்போது, கடவுளின் அருளும் அன்பும் நம்மை இன்னும் நெருக்கமாகப் பிடித்து வாழ்வில் உயர்த்துகின்றன.”

- ஏப்ரல் 6, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

இயேசு நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் பார்க்கின்றார். நாம் இருப்பது போலவே நம்மை அன்பு செய்கின்றார்.”

- ஏப்ரல் 9, புதன் மறைக்கல்வி உரை

ஆறுதல் மற்றும் மீட்பின் தோற்றுவாயாக விளங்கும் திருச்சிலுவையில், ஆண்டவராகிய இயேசுவைத் தியானித்து, இந்தச் சோதனைக் காலத்தை வெல்வோம்.”

- ஏப்ரல் 9, திருப்பயணிகளான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய செய்தி

வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற, மாட்சிமைக்கு வழிவகுக்கின்ற, அன்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட, ஏமாறாத நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாக இளையோர் இருக்க வேண்டும்.”

- ஏப்ரல் 12, UNIV பன்னாட்டு இளையோர் மாநாட்டுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (20.04.2025)

கிறித்தவ மகிழ்ச்சி என்பது ஒருபோதும் ஒருசிலருக்கு மட்டும் உரியது அல்ல; ஆனால், அது எப்போதும் எல்லாருக்கும் உரியது.”

- ஏப்ரல் 01, இத்தாலியத் திரு அவைக்கு அனுப்பியச் செய்தி

தொலைந்து போனவர்களைத் தேடிக் கண்டடையாமல் கடவுள் ஒருபோதும் கடந்துபோக மாட்டார்.”

- ஏப்ரல் 02, புதன் மறைக்கல்வி உரை

உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார் ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்று வாயாக இருக்கிறார்.”

- ஏப்ரல் 03, யூபிலி பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியச் செய்தி

புனிதக் கதவு வழியாக உள்நுழைவதும், திருத்தூதர்கள் மற்றும் மறைச்சாட்சிகளின் கல்லறைகளைத் தரிசிப்பதும் நாம் நமது வாழ்நாளில் எப்போதும் திருப்பயணிகளாக நடைபோடுகின்றோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.”

- ஏப்ரல் 04, ஸ்லோவாக்கியத் திருப்பயணிகளுக்கு அனுப்பியச் செய்தி

நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல; அவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.”

- ஏப்ரல் 06, மூவேளைச் செப உரை

எதிர்காலத்திற்கான நம்பிக்கையற்றவர்களாக நாம் இருக்கும் தருணத்தில் கூட, கடவுள் நம்மைத் தனியாக விடுவதில்லை; தோல்வியடையும் சூழலிலும் கடவுளின் உடனிருப்பை நாம் அனுபவிக்க முடியும்.”

- ஏப்ரல் 06, உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலி மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.04.2025)

தம் அருளால் நம்மை இரக்கத்தின் பணியாளர்களாக நியமித்துள்ள இறைவனிடமிருந்து மன்னிப்பின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், அதே கொடையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவோம்.”

- மார்ச் 25, இளையோர் கூட்டத்திற்கான செய்தி

இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், இனி நமக்கு எதிர்நோக்கு இல்லை என்று நாம் நினைக்கும் நேரத்தில் அவர் நம் கண்முன் காணப்படுகிறார்.”       

- மார்ச் 26, மறைக்கல்வி உரை

கடவுளின் இரக்கத்திலிருந்து பிறக்கும் உண்மையான அமைதி, நம்மை ஒருபோதும் ஏமாற்றாத எதிர்நோக்கைக் கொணர்கிறது.”

- மார்ச் 27, அருள்பணியாளருக்கான செய்தி

இறைவன் எப்போதும் நம்முடன் நடக்கின்றார், நமது சோதனை நேரங்களில் நம்மைத் தாங்குகின்றார், அவரது அமைதி மற்றும் அன்பின் சான்றுகளாக இருக்க நம்மை அழைக்கின்றார்.”

- மார்ச் 29, செக். குடியரசு நாட்டின் ஆயர் பேரவையினருக்கு வழங்கிய செய்தி

உயிருள்ள சுடரைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்குக் கடவுளின் அன்பு பலம் அளிக்கின்றது என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்நோக்கின் சான்றுகளாக வாழ வேண்டும்.”                      

- மார்ச் 29, திருப்பயணிகளுக்கான செய்தி