news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (22.06.2025)

மன்னிப்பை வழங்கவும், மனமாற்றம் பெறவும், கடவுள் நம்மை இந்தத் துன்ப இருளில் அனுப்பியுள்ளார்.”

- ஜூன் 2, அருளாளர் கர்தினால் யூலியு ஹோசு (1885-1970) நினைவு நாள்

உன்னை அழைப்பவனை நீ ஏன் தள்ளி வைக்கிறாய்?”

- ஜூன் 4, இரண்டாம் புதன் மறைக்கல்வி உரை

இறைநம்பிக்கைதான் கடினமான தருணங்களில் நம்மைத் தாங்கிப் பிடிக்கிறது.”

- ஜூன் 4, தேசிய இத்தாலிய-அமெரிக்க நிறுவன இயக்குநர்கள் சந்திப்பு

பாலியல் முறைகேடுகள்  திரு அவைக்கு எதிரானது, அருவருப்பானது.”

- ஜூன் 5, பாலியல் முறைகேடுகளுக்கு எதிரான பாப்பிறை அமைப்பு

இறைப்பணியாளர்கள் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள்.”

- ஜூன் 6, துறவு சபை பொதுப்பேரவையில்...

நம்மிடையே முழுமையான ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டும்.”

- ஜூன் 7, நிசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு விழா

கடவுளின்மூச்சுநம் இதயங்களை ஒன்றிணைக்கிறது.”

- ஜூன் 8, தூய ஆவியார் பெருவிழா மறையுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (15.06.2025)

வெற்றிபெற்ற வீரர்கள் என்று சொல்வதைவிட, ஒன்றிணைந்து விளையாடி வெற்றியைப் பெற்ற அணி என்று கூறுவதே சிறந்தது.”

- மே 27, நாப்போலி கால்பந்து விளையாட்டு சங்கத்தாரைச் சந்தித்தபோது

நன்மை செய்வதில், நமது கரங்கள் அழுக்காக நாம் அனுமதிக்க வேண்டும்.”

- மே 28, புதன் மறைக்கல்வி உரை

காயம்பட்டவர்  ஒப்படைக்க வேண்டிய பொருள் அல்ல; மாறாக, கவனிப்புத் தேவைப்படக்கூடிய மனிதர்.”

- மே 28, புதன் மறைக்கல்வி உரை

மரியன்னை செபமானது மரியியல் அளவமைப்பையும் கிறிஸ்தியல் இதயத்தையும் கொண்டுள்ளது.”

-மே 31, அன்னை மரியின் வணக்கமாத நிறைவுரை

கடவுளின் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதில்லை; அது உண்மையிலேயே வரலாற்றை மாற்றுகிறது.”

- மே 31, குருத்துவ அருள்பொழிவு திருப்பலி

குடும்பம் என்பது உலகைப் படைத்த இறைவன் தமது முழுமையான அன்பினால் படைப்பை அரவணைக்கும் இடமாக உள்ளது.”

- ஜூன் 1, பாஸ்கா கால மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (08.06.2025)

 இதயம் மட்டுமல்லாது உலகம், சமூகம், திரு அவை என எல்லா இடங்களிலும் கடவுளின் வார்த்தை பலனளிக்கிறது.”

- மே 21, முதல் புதன் மறைக்கல்வி உரை

மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும்.”

- மே 21, காசா மக்களுக்காக விண்ணப்பித்த திருத்தந்தை

அனைத்து மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக இருக்கவேண்டும்.”

- மே 22, திருப்பீட மறைப்பணிச் சங்கத்தின் பன்னாட்டு உறுப்பினர்கள் சந்திப்பு

நம்பிக்கையும் செபமும் நாம் உண்ணும் உணவுக்குச் சுவையைத் தரும் உப்பு போன்றது.”

- மே 24, வத்திக்கான், உரோமன் கூரியா பணியாளர்கள் சந்திப்பு

இறைத்தந்தையால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் நாம் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.”

- மே 24, ‘வலைதளத்தின் முதல் குறுஞ்செய்தி

கடவுளின் அன்பை எல்லா இடங்களிலும் கொண்டு செல்வதற்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வோம்.”

- மே 25, பாஸ்கா கால மூவேளைச் செபவுரை

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (01.06.2025)

அமைதி என்பது போர் அற்ற நிலை என்பதல்ல; மாறாக, மனித மனங்களின் தாழ்ச்சியிலும், உரையாடலில் கவனமும், தற்பெருமை மற்றும் பழிவாங்கலை மறுத்தலும் ஆகும்.”

- மே 16, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு

ஆயுதங்கள் அமைதியாகட்டும்என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் திரு அவை ஒருபோதும் சோர்வடையாது.”

- மே 14, கீழை வழிபாட்டுமுறை திரு அவையினரோடு சந்திப்பு

நாம் கிறிஸ்துவுக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

உரையாடல் செய்பவர்களாக, உறவின் பாலங்களைக் கட்டியெழுப்புபவர்களாக நாம் வாழ வேண்டும்.”

- மே 19, பிற தலத்திரு அவைகளின் பிரதிநிதிகளோடு சந்திப்பு

ஒற்றுமையான திரு அவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.”

- மே 18, திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்புத் திருப்பலி

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தையின் திருவாக்கு - திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (25.05.2025)

கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்.”

- மே 8, திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி  (Urbi et Orbi) செய்தி

கடவுள் அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்; அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள்.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உறவின் பாலங்களைக் கட்டுவது என்பது தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது மற்றும் கதவுகளை மூடாமல் இருப்பது.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உண்மையான, நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை. போர் இனி ஒருபோதும் வேண்டாம்.”

- மே 11, ஞாயிறு மூவேளைச் செபவுரை

அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை

மனிதகுல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.”

- மே 12, உலகச் சமூகத் தொடர்புத் துறையினருக்கு ஆற்றிய உரை

 

news
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04-05-2025)

அன்பு என்பது எப்போதும் ஓர் அர்ப்பணிப்பு, அன்புடன் மற்றவரை நாம் சந்திக்கச் செல்லும்போது ஏதாவது ஒன்றினைக் கண்டிப்பாக நாம் இழக்க வேண்டியிருக்கும்.”

- ஏப்ரல் 16, புதன் மறைக்கல்வி உரை

இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளி நிறைந்த தளிர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமாகப் பாதுகாத்து வளரச்செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா  திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

இந்த உலகம் வன்முறை மற்றும் தீமைகளால் மிகக்கொடியதாக மாறினாலும், கடவுள் நமது வாழ்க்கைப் பாதையில் நம்மோடு உடன் பயணிக்கின்றார் என்னும் மகிழ்வின் நற்செய்தியை எடுத்துரைப்பதே இயேசுவின் உயிர்ப்பு.”

- ஏப்ரல் 19, உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி மறையுரை

தீமை என்பது நமது வாழ்விலிருந்து மறைந்து விடவில்லை, அது நம் வாழ்வின் இறுதிவரை இருக்கும். ஆனால், கடவுளின் அருளை வரவேற்று ஏற்பவர்களின் வாழ்வில் அது ஒருபோதும் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தாது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி

உயிர்ப்பு என்பது வாழ்க்கையின் விழா. கடவுள் நம்மை வாழ்வதற்காகப் படைத்தார், மனிதகுலம் மீண்டும் உயர வேண்டும் என்று விரும்புகிறார். அவரது பார்வையில் ஒவ்வோர் உயிரும் விலைமதிப்பற்றது.”

- ஏப்ரல் 20, ‘ஊருக்கும் உலகிற்கும்  என்ற சிறப்புச் செய்தி