news
சிறுகதை
இடைவிடாத மருத்துவப் பணி - காவல் அன்னை (தொடர் கதை – 06)

டாக்டர், அந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி கொடுக்கணும்னு எழுதிவெச்சேன். நம்ம சகாதேவன் டாக்டர் வந்துஅது வேண்டாம், அடையாறுக்கு ரெகமண்ட் பண்ணி அனுப்பிச்சிருங்கன்னு சொல்றார். என்ன செய்யலாம்?” என்று கேட்டாள் யாழினி.

ஏன், நீங்கதானே இங்கே கேன்சர் டாக்டர். அதிலே ஏன் அவர் தலையிடுறார்னு தெரியலையே யாழினிஎன்று கேட்டார் சேவியர்.

அதுதான் எனக்கும் புரியலே! கேன்சர் கட்டி ஆப்பரேஷன் பண்ணி எடுத்தாச்சு. நம்ம இப்ப ஹீமோதெரபி போட்டால்தானே அது சரியாகும். இப்படியே எப்படி அனுப்புறது?” என்று கேட்டாள் யாழினி.

நீங்க டாக்டர் இஸ்மாயில்ட்டே சொல்ல வேண்டியதுதானே யாழினிஎன்றார் சேவியர்.

அது கம்ப்ளெயிண்ட் மாதிரி ஆயிரும். அதுக்குத்தான் நான் யோசிக்கிறேன் டாக்டர்என்றாள் யாழினி.

நீங்க போங்க, நான் சகாதேவனிடம் பேசி விவரம் கேட்டுச் சொல்றேன்என்றார் சேவியர்.

நர்சை அழைத்து, “டாக்டர் சகாதேவனை என் அறைக்கு வரச்சொல்என்றார் சேவியர்.

சிறிது நேரத்தில் சகாதேவன் வந்தார்.

வாங்க டாக்டர், இந்தச் செல்வமரிக்கு ஹீமோதெரபி வேண்டாம்னு சொன்னீங்களாமே, அது எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார் சேவியர்.

சேவியர், என் படிப்பும் அனுபவமும் உங்களை விட நீண்டது. அதைவிட இங்கே நான் ஆரம்பத்திலிருந்து இருக்கேன். இதிலே என்னை நீங்க கிராஸ் பண்றது முறையற்ற செயல். பேசண்டுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்என்றார் டாக்டர் சகாதேவன்.

அப்படிச் சொல்றீங்களா! கேன்சர் டாக்டர் யாழினிதான் சொல்லிருக்காங்க, அதிலே நீங்க எப்படி கிராஸ் செக் பண்ண முடியும்?” என்றார் சேவியர்.

நான் எல்லாவற்றையும் கவனிப்பவன். அதனால் இந்த வியாதிக்கு ரேடியேஷன் வைக்க அடையாறு அனுப்பச் சொன்னேன். இது ஒண்ணும் கிராஸ் பண்ற காரியமில்ல, நீங்க இதைப் புரிஞ்சுக்கங்கஎன்று கோபத்துடன் போய்விட்டார் சகாதேவன்.

மீண்டும் நர்சை அழைத்து யாழினியை அழைத்து வரச்சொன்னார் டாக்டர் சேவியர்.

யாழினி நுழைந்ததும், “யாழினி அவர் அந்தம்மாவுக்கு ரேடியேஷன் இப்ப வைக்கணும்னு சொல்றார். அப்படியே விட்டுருங்கஎன்றார் சேவியர்.

பேஷண்டுக்கு இப்ப ரேடியேஷன் தேவையில்லை டாக்டர். தொடர்ந்து இருபத்தோரு நாளைக்கு ஒரு தடவை இந்த ஹீமோதெரபி குடுத்துதான் அந்தப் பேஷண்டுக்கு எல்லாச் செல்களோடும் கேன்சர் செல்லையும் அழிக்கணும். இதுதான் ட்ரீட்மெண்ட் முறைஎன்றாள் யாழினி.

நீங்க இதற்குச் சரியான ரிசல்ட் கிடைக்க பேசாமல் டாக்டர் இஸ்மாயிலிடம் பேசுங்க. அவர் பார்த்துக்குவார்என்றார் சேவியர்.

அவர் இசபெல்லா ஆஸ்பிட்டலில் நடக்கும் டாக்டர்ஸ் கான்பரென்ஸ்க்குப் போயிருக்கார் டாக்டர். வந்ததும் பார்த்துச் சொல்றேன். இப்ப பேஷண்டை அனுப்பாமல் நிறுத்திவைக்கிறேன்என்றாள் யாழினி.

இதுதான் சரியான முடிவு. அவர் வந்ததும் அவர்ட்டே பேசிட்டுப் பிறகு முடிவெடுங்க. அவருடைய டிசிசன்தான் இறுதி முடிவுஎன்றார் சேவியர் சிரித்தபடி.

இப்படி வேலை செய்றதுக்கு உங்க கிளினிக்கிலே கூட நான் டாக்டராக வேலை செய்யலாம்என்று சிரித்தபடி வெளியேறினாள் டாக்டர் யாழினி.  

(தொடரும்)

news
சிறுகதை
சென்னை வந்த சேவியர் (காவல் அன்னை – 05)

தனது அன்பு மனைவி ரோஸ்லின் மறைந்த பிறகு நியூயார்க்கில் இருப்பது நல்லதில்லை என்று டாக்டர் சேவியர் முடிவெடுத்தான். நீண்ட யோசனைக்குப் பிறகு, தன்னுடன் ஒரே அறையில் தங்கிப் படித்து டாக்டரான இஸ்மாயிலுடன் பேசினான் சேவியர்.

ஏன் சேவியர் இப்படி தனியா கிடந்து கஷ்டப்பட்றே? பேசாமல் குழந்தையுடன் சென்னை வா. எனது தொழிலதிபரான மாமனார் எனக்கு நுங்கம்பாக்கத்தில் ஆஸ்பத்திரியை எல்லா வசதிகளுடனும் கட்டித் தந்துள்ளார். அதில் வந்து நீ வேலை பார்என்றான் இஸ்மாயில்.

புதிதாய் வந்து உன்னுடன் வேலை பார்ப்பதில் எனக்குச் சந்தோசம் இஸ்மாயில். அதற்கேற்ற சூழ்நிலை எப்படி அமையும் என்றே யோசிக்கிறேன்என்றான் சேவியர்.

சூழ்நிலையை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் சேவியர். நமக்கேற்ற சூழ்நிலை எது என்று யோசித்து முடிவெடுத்தால் வாழ்வில் நிம்மதியும் சமாதானமும் கிடைக்கும்என்றான் இஸ்மாயில்.

நீ சொல்றது சரிதான்என்றான் சேவியர்.

நாம் வாழும் சமுதாயத்தில் நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தாலே சமூகத்தில் நமக்கு நல்ல சூழ்நிலை அமைந்துவிடும். பிறருக்காகப் பாடுபடும் டாக்டர்களான நமக்கு எப்போதும் நல்ல சூழ்நிலை அமையும் சேவியர். இதைத்தான் திருவிவிலியம், குரான் போன்ற வழிகாட்டும் நூல்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றனஎன்றான் இஸ்மாயில்.

எனது அம்மா, தங்கையை முதலில் சென்னைக்கு வரவழைக்கணும். புதிதாக வீடு பிடித்துக் குடியேற வேண்டும்என்றான் சேவியர்.

அதைப் பற்றி நீ யோசிக்காதே! என் மனைவியும் என்னுடன்தான் இங்கே டாக்டராகப் பணியாற்றுகிறாள். அவளிடம் சொல்லிவிட்டால் எல்லாம் சிறப்பாக முடிந்துவிடும். பக்கத்தில் கோடம்பாக்கத்திலேயே உன் தம்பி, தங்கச்சி போய் வரக்கூடிய ஒரு பெரிய வீட்டைப் பிடிக்கச் சொல்லி விடுகிறேன். அருகில் உங்க சர்ச் இருக்கும்படி பார்க்கச் சொல்கிறேன்; கவலைப்படாமல் வந்து சேருஎன்றான் இஸ்மாயில்.

இஸ்மாயில் அறிவுரைப்படி தனது அம்மா, தங்கச்சியைச் சென்னைக்கு வரவழைத்தான் சேவியர். அவனும் சென்னை வந்து சேர்ந்தான். கோடம்பாக்கம் இரஜினியுடைய இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை அடுத்த வீதியிலே பெரிய பங்களா கிடைத்தது. கீழே கிளினிக்கையும், மேலே குடியிருக்கும் இல்லமாகவும் அமைத்துக் கொண்டார்கள்.

அருகிலே தினமும் அருளம்மா, அமலி சென்று வர கோடம்பாக்கம் பாத்திமா ஆலயம் நல்லதொரு துணையாக இவர்களுக்கு அமைந்தது.

சேவியரின் அம்மாவும் தங்கையும் குழந்தையை வளர்த்து வந்தார்கள். சேவியர் முற்பகல் 8 முதல் 10 வரை கீழே கிளினிக்கில் தேடி வரும் நோயாளிகளைப் பார்த்து விட்டு, நுங்கம்பாக்கம் செல்வான். மாலை 6 முதல் 9 வரை திரும்பவும் கிளினிக்கில் இருப்பான். தினமும் பாத்திமா ஆலயம் சென்று காலைத் திருப்பலியில் சேவியர் விசுவாசமுடன் கலந்துகொள்வான்.

அமெரிக்காவில் வாழ்ந்த வாழ்க்கையில் மறைந்த நாள்களையும் மனைவி ரோஸ்லினையும் எண்ணி சேவியர் வருந்துவதுண்டு. ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு நமக்குத் திறந்து வழிகாட்டும் என்பதுபோல் இப்போது இஸ்மாயில் மூலம் சேவியருக்கு வாழ்வும் வளமும் வந்து சேர்ந்துள்ளது.

news
சிறுகதை
புதிய வாழ்வு (காவல் அன்னை (தொடர் கதை) - 04 )

தூத்துக்குடி தோமையார்புரத்தைச் சேர்ந்த குடும்பம் செபஸ்தியான் குடும்பம். இவர் தலைமையாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார். தனது மகன் சேவியர், மகள் அமலியை நன்கு படிக்க வைத்தார். எதிர்பாராமல் செபஸ்தியான் ஹார்ட் அட்டாக்கில் மறைந்துவிட்டார்.

கணவர் மறைந்தபின் ஆசிரியையாய் இருந்து ஓய்வு பெற்ற மனைவி அருளம்மா பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

மகன் சேவியர் மதுரையில் படித்து டாக்டரானான். மகள் அமலி பி.. படிப்போடு நிறுத்திக்கொண்டாள்.

தனது மகன் டாக்டர் சேவியருக்குப் பெண் பார்த்தாள் அருளம்மா. தனது உறவினர் வீட்டுப்பெண் ரோஸ்லின் அமெரிக்காவில் சாஃப்ட்வேரில் பணிபுரிவதை அறிந்து, அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டாள் அருளம்மா.

உங்க பையன் இந்தியாவில் டாக்டராக இருக்கிறார். எங்க மகள் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள். இந்தச் சம்பந்தம் ஒத்து வருமாங்க?” என்றார்கள் ரோஸ்லின் பெற்றோர்கள்.

சேவியர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த விசுவாசம் மிக்க பெண்ணைத்தான் விரும்புறான். மேலும் அவன் அமெரிக்காவுக்கு வேலைக்குச் சென்றுவிடுவான்என்றாள் தாய் அருளம்மா.

உங்க பையன் அமெரிக்காவுக்குப் போறதுன்னாக்க நாங்க பெண் தாரோம். ஆனால், எங்க மகள் இங்கே வர விரும்பமாட்டாள். அதைப் பார்த்துக்கங்கஎன்றார் ரோஸ்லின் தந்தை.

கட்டாயம் என் பையன் சேவியர் அமெரிக்காவுக்குப் போய்விடுவான். அவனுக்கு உங்க பெண்ணைக் கட்டாயம் பிடிக்கும். நான் படத்தைப் பார்த்திட்டேன்லஎன்றாள் அருளம்மா.

அப்படின்னா முடிச்சிருவோம். அடுத்த மாதம் எங்க மகளை வரச்சொல்றோம். நிச்சயம் பண்ணிட்டு உடனேயே கல்யாணத்தைச் சிறப்பாய் முடிச்சிருவோம்என்றார் ரோஸ்லின் தந்தை.

தூத்துக்குடி கடற்கரையில் அமைந்த பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பாகத் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே சேவியர், ரோஸ்லின் இருவரும் அமெரிக்கா கிளம்பிவிட்டனர். அமெரிக்கா சென்றதும் நியூயார்க்கில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டான் சேவியர். அங்கே இந்திய டாக்டர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்பதால், அவனது முயற்சி நிறைவேறிற்று.

திருமணம் முடிந்த தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ரோஸ்லின் நியூயார்க்கிலிருந்து நியூ ஜெர்சிக்கு இடையே உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். எனவே, தினமும் காரில் வேலைக்குப் போய் திரும்பிவந்து விடுவாள். அடுத்த ஆண்டே ரோஸ்லினுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது.

பிறந்த குழந்தையுடன் தூத்துக்குடி வந்தார்கள் தம்பதியினர். பனிமய மாதா கோவிலில் வைத்து குழந்தைக்குவிமலாஎன்று ஞானஸ்நானப் பெயர் வைத்தார்கள்.

உறவினர்களைச் சந்தித்து விட்டு மீண்டும் அமெரிக்கா சென்றனர் சேவியர்-ரோஸ்லின் தம்பதியினர். மிகவும் மகிழ்ச்சியாக நாள்கள் கடந்தபோது, ஒருநாள் சேவியரின் செல் அலறியது.

சார், உங்க மனைவி கார் ஓட்டிச் சென்றபோது ஆக்சிடெண்டாகி ஸ்பாட்லேயே இறந்துட்டாங்க. அவங்க பின்னாடி காரில் போன ஒருவர் எங்களுக்குத் தெரிவித்தார். அதை உங்களுக்குச் சொல்கிறோம்என்று ஒரு சாஃப்ட்வேர்க்கார தமிழர் செய்தியைச் சொன்னார். டாக்டர் சேவியருக்கு இடி விழுந்தது போல் ஆகி விட்டது.

வேலைக்குப் போக வேண்டாம், வீட்டிலேயே இருந்து பிள்ளையைப் பார்ன்னு சொன்னேனே, கேட்கமாட்டேன்னுட்டாளே, எல்லாம் பணத்தாசைஎன்று அழுதான் சேவியர். தாயில்லாத சிறு குழந்தையும் அழுதது. விதியை யாரால் மாற்ற முடியும்? இறைவனின் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

(தொடரும்)

news
சிறுகதை
நவீனத்து(த)வம்! (சிறுகதை)

நாளை ஜெபமணி அம்மாவுக்கு ஐம்பத்து ஐந்தாவது பிறந்த நாள். எவ்வளவு வேலையாக இருந்தாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டுத் தன் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பெங்களூருவிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் மகனும் மருமகளும்.

அன்றும் அப்படித்தான்! அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருந்த மருமகள் ஷர்மிளா, “அத்தை! எப்படி இருக்கீங்க? வயது ஏற ஏறஉங்களுக்கு இளமை திரும்புதே!… உங்கள் இளமையின் இரகசியம் என்னவோ?” என்று கேட்டுக்கொண்டேஉணவு மேசையில் தயாராக இருந்த காபியைத் தன் கணவரிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் ஃப்ளாஸ்கில் இருந்த சூடான வெந்நீரை ஒரு குவளையில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள்.

இதைக் கவனித்த ஜெபமணி அம்மாள், “ஏம்மா ஷர்மிகாபி குடிக்கலையா?” என்றாள்.

எனக்கு வேண்டாம் அத்தைஎன்று கூறிய படியேமேசையில் இருந்த மற்றப் பாத்திரங்களின் மூடியை ஒவ்வொன்றாகத் திறந்தாள் ஷர்மி.

அத்தை, காலை டிபனுக்குத் தோசை, சட்னி, கேசரியா?” என்றாள்.

ஆமாண்டிமா! கேசரி உங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இனிப்பாச்சேன்னுதான்...”

சாரி அத்தை, நான் உங்ககிட்ட முதல்லயே சொல்லியிருக்கணும், மறந்துட்டேன்”… என்று சொன்ன ஷர்மி மேலும் தொடர்ந்தாள்...

அத்தை,… சென்ற மாதம் என்னைச் சிக்கன்குன்யா கடுமையாகத் தாக்கியது அல்லவா? அதன் பின்விளைவாக எனக்கு ஏற்பட்ட கை, கால், மூட்டு வலி மற்றும் ஜாயின்ட் பெயினுக்கு மருத்துவர் தொடர்ந்து சில மாதங்கள் கறி, மீன், முட்டை, கோழி போன்ற புரதச் சத்துமிக்க உணவுகளைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிட்டார். அதனால இது தவக்காலமாக இருந்தாலும், நான் இத்தகைய உணவுகளை ஒதுக்க முடியாமப் போயிடுச்சு! அதனால அதுக்குப் பதிலா நான் ரொம்ப விரும்பிக் குடிக்கிற காபியை நாற்பது நாள்களுக்குக் குடிக்கக்கூடாது என்றும், இனிப்பு வகைகளைத் தொடவே கூடாதுன்னும் முடிவெடுத்தேன். பிடித்ததைச் சாப்பிடாமல் ஒதுக்குவது மட்டுமல்ல தவம்! பிடிக்காததைச் சாப்பிடுவதும் தவ ஒறுத்தல்தான். அது மட்டுமல்ல அத்தை, தவக்காலச் சிலுவைப்பாதையையும் நான் முழுக்க முழந்தாள்படியிட்டே செய்து முடிப்பேன். ஆனால், இப்போது கால்மூட்டு வலியால் அமர்ந்துகொண்டே செபிக்க மனம் ஒப்பவில்லை; அதனால வெள்ளிக்கிழமை மட்டுமே செய்யுற சிலுவைப்பாதையைத் தினமும் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

அப்புறம் பொதுவா தவக்காலம் முழுவதும் நான் தவறாம காலைத் திருப்பலியில் கலந்து கொள்வது என்னோட வழக்கம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.… என்னோட உடம்பு பலவீனத்தால அதுவும் முடியல.…சுத்தபோசனம்,… ஒருசந்தி முழுக்க முழுக்க அனுசரிக்க முடியலை. எனவே, இதுக்கெல்லாம் பரிகாரமாதொலைக்காட்சி, சீரியல், சினிமா, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் கொஞ்ச நாள் ஒதுக்கி வைக்க முடிவு செஞ்சிருக்கிற காலம்தான் என்னோட தவக்காலம்.

என்னால காலைத் திருப்பலிக்குப் போக முடியலையே தவிர, தினமும் மாலைத் திருப்பலிகளில் கலந்துகொள்கிறேன். உண்ணாநோன்பு இருக்க முடிவதில்லை; அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசியைக் கருணை இல்லத்திற்குக் கொடுத்துவிட்டேன்.

அப்புறம் மணிக்கணக்காநண்பர்களோட  அலைப்பேசியில் அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும்;… இப்ப தேவையில்லா அரட்டைகளுக்குநோசொல்லியாச்சு!

எல்லாத்துக்கும் மேல குடும்பப் பிரச்சினையால ஐந்து வருடமா பேசாம இருந்த என் தம்பிகிட்ட நானே முன்வந்து பேசி சமாதானம் பண்ணி உறவைப் புதுப்பிச்சுகிட்டேன்என்றெல்லாம் அவள் சொல்லச் சொல்ல, எப்பொழுதுமேதன் மருமகள் ஷர்மிளாவின் நடை, உடை, பாவனைகளில் இருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு இரசிக்கும் ஜெபமணி அம்மாள்இப்போது அவள் ஆன்மிகத்திலிருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனாள்!

news
சிறுகதை
விருந்தினர் வருகை - காவல் அன்னை 03 (தொடர் கதை)

டாக்டர் சேவியர் வீட்டிற்குப் பத்து பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.

அனைவரும் வந்தபின், தங்கை அமலி பிஸ்கட்டும், தேநீரும் வழங்கினாள். வந்தவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

டாக்டர் கீழே உள்ள அவரது வீட்டுக் கிளினிக்கில், வந்திருந்த பேஷண்டுகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யாழினியின் பெற்றோர் சிரித்தபடி சேவியரின் மகள் விமலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்ன பாப்பா, ஸ்கூல் போறியா?” என்று கேட்டாள் இந்திரா தேவி.

இல்ல பாட்டி, இனிமேல் தான் போகணும்என்றாள் குழந்தை.

இங்கே உன்னை யார் பார்த்துக்கிறாங்க?” என்றாள் யாழினி.

அப்பா ஆஸ்பத்திரிக்கு போயிருவார். பாட்டியும் அத்தையும் நல்லாப் பார்த்துக்குவாங்கஎன்றாள் விமலா.

வெரிகுட், என்ன விளையாடுவே?” என்று கேட்டாள் இந்திரா தேவி.

பக்கத்திலே இருக்கிற பசங்களோட ஓடி பிடிச்சு விளையாடுவேன். இப்பப் போய் விளையாடலாமா?” என்று சிரித்தாள் குழந்தை.

இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள் விமலா. அதுக்கு நாங்க வந்திருக்கோம். இப்பப் போய் விளையாட முடியுமா?” என்று சிரித்தாள் யாழினி.

சேவியர் இப்ப வந்திருவான். டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தோட வர்றாராம். அவங்க வந்ததும் இந்த பங்க்ஷனை நடத்திறலாம்என்றாள் அருளம்மா.

இந்தப் படத்திலே இருக்கிறதுதான் டாக்டரோட சம்சாரமாங்க. அவங்க ரொம்ப அழகாய் இருக்காங்களே...” என்று கேட்டாள் வந்திருந்த ஒரு பெண்மணி.

அவங்க எப்படிங்க இறந்தாங்க?” என்று ஆர்வமுடன் கேட்டார் கருணாகரன்.

அருளம்மா கவலையுடன்அதை இப்பப் பேச வேணாம், விமலா ஒரேயடியாய் அழத் தொடங்கி விடுவாள்என்றபோது டாக்டர் சேவியர் வந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் டாக்டர் இஸ்மாயில், மனைவி பாத்திமா, மகன் இப்ராகிமுடன் வந்துவிட்டார்.

உங்க அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் விமலாவோட பெர்த் டேக்கு வந்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. இப்ப நிகழ்ச்சியைத் தொடங்கிடலாம்என்றார் சேவியர்.

வீட்டில் அலங்காரமாய் தோரணம் தொங்கியது. பூக்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மேஜை மேல் இருந்த கேக்கை சேவியர் விமலாவை வைத்து வெட்டினார்.

பிறந்த நாள் பாடல் போடப்பட்டது. அனைவரும்ஹேப்பி பெர்த் டே விமலாஎன்று கோரசாய் வாழ்த்தினர்கேக் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் மேல் மாடியில் மதிய விருந்து இப்ப தயாராய் உள்ளது. அங்கே போகலாம்என்றார் சேவியர்.

வாங்க, வாங்கஎன்று அம்மா அருளம்மாவும் தங்கை அமலியும் மேலே கூட்டிப் போனார்கள்.

டாக்டர் இஸ்மாயிலும் டாக்டர் யாழினி குடும்பத்தாரும் கீழே பேசிக் கொண்டிருந்தார்கள். டாக்டர் சேவியர் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுத்தபடி உள்ளே இருந்தார்.

ஆமா டாக்டர், இந்த சேவியரோட சம்சாரம் எப்படி இறந்தாங்க? எவ்வளவு அழகாய் இருக்காங்க. பாவம், இந்தக் குழந்தையை விட்டுட்டு அந்தம்மா போயிருச்சே, பாவம் டாக்டருக்குப் பெரிய சிரமம்தான்என்றார் கருணாகரன்.

அதை சேவியர் அம்மா வந்ததும் கேட்டுக்கங்க. நாங்க கிளம்புறோம்என்று புறப்பட்டார் டாக்டர் இஸ்மாயில்.

news
சிறுகதை
பெற்றோருடன் வாதம் (காவல் அன்னை - தொடர் கதை)

ஏம்மா யாழினி, நீ எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கே?” என்றாள் தாய் இந்திரா.

ஏம்மா, இப்ப நான் அவசரமாய் கல்யாணம் பண்ணியாகணுமா?” என்றாள் யாழினி.

ஏய், கல்யாணத்தைக் காலாகாலத்தில் முடிக்கணும்; பிள்ளைகளையும் காலாகாலத்தில் பெத்துக்கணும்மாஎன்றாள் தாய்.

நீங்க அந்தக் காலத்தில் பதினைஞ்சு வயசில் கல்யாணம் முடிச்சு, அஞ்சு பிள்ளைகளைப் பெத்திட்டீங்க; அதுமாதிரி இப்ப முடியாது. என்னோட டாக்டர் வேலை அப்படி...” என்றாள் மகள்.

இந்தா உங்கப்பா வந்திட்டார். அவர்ட்டேயே நீ பேசிக்க, நான் சொல்றது உன் காதில் ஏறாது யாழினிஎன்றாள் எரிச்சலுடன் தாய் இந்திரா.

தந்தை கருணாகரன்உஷ்என்றபடி சோபாவில் வந்து உட்கார்ந்தார். “ஏங்க உங்க மகள் சொல்றதைக் கேளுங்கஎன்றாள் இந்திரா.

ஏய், நான் வெயில்லே போய் மாத்திரை, மருந்தெல்லாம் வாங்கிட்டு வர்றேன்; உனக்கும் சேர்த்துதான் சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வர்றேன். கொஞ்சம் பேசாமல் இருஎன்றார் கருணாகரன்.

வெயில்லே போறது நல்லதுதான்ப்பாஎன்று சிரித்தாள் யாழினி.

அது சரிதான். எனக்கு என்ன வயசு? இந்த வய சிலே போய் வர்றது எவ்வளவு சிரமம்னு உனக்கெங்கே தெரியப் போகுது?” என்றார் தந்தை.

சரிங்க, உங்களோட உதவிக்கு ஒரு காபியைப் போட்டுத் தர்றேன். மகள்ட்ட கல்யாணம் பத்திப் பேசுங்கஎன்றாள் இந்திரா.

அதைத்தான் நீ பேசியிருப்பியே... பிறகு நான் என்ன பேசுறது? பொம்பளப் பிள்ளையப் பெத்தவள் நீதானே? பையன்னா நான் சண்டை போடலாம்என்றார் கருணாகரன்.

யாழினி இல்லாதப்ப  என்னோட கட புடான்னு கத்துறீங்க. இப்ப யாழினிட்ட நேர்லே பேச வேண்டியதுதானே?” என்று கேட்டாள் தாய்.

சரி, நீ சொன்னதுக்கு ஒத்திக்கிட்டு இப்ப நான் யாழினிட்டே கேட்கிறேன். ஏம்மா யாழினி, நீ எப்ப கல்யாணம் பண்றதாய் நினைச்சிருக்கே? அதை இப்ப நீ என்கிட்டே சொல்லியாகணும்என்றார் கருணாகரன்.

கரெக்ட், இப்படிக் கேளுங்க. உங்க தங்கச்சி மதுரையிலிருந்து பேசினதையும் சொல்லுங்க. இந்தா காபி கொண்டாரேன்என்று உள்ளே போனாள் தாய்.

யாழினி சிரித்தபடிநான் கல்யாணம் பண்ண நாளாகும்பா. இப்ப அந்தப் பேச்சே பேசாதீங்க?” என்றாள் மகள்.

உன்னோட அத்தை போன் பண்ணிக்கிட்டே இருக்காள். மகன் முத்து கனடாவில் எஞ்சினியராய் இருந்து மாதம் ரெண்டு இலட்சம் வாங்குறானாம். அவனுக்கு உன்னை முடிக்கணும்னு அடிக்கடி அவளும் பேசுறாள், மாப்பிள்ளை இராமசாமியும் பேசுறார்என்றார் தந்தை.

அந்த ஆளை நான் கட்ட முடியாது. அது எப்பவும் தண்ணி போடுற பார்ட்டி. அதோட நான் மாரடிக்க முடியாது. நான் ஒரு டாக்டரைத்தான் கட்டணும்என்றாள் யாழினி சிரித்தபடி.

அப்படியா யாழினி, அவன் தண்ணி போடுறது உனக்கும் தெரிஞ்சு போச்சா?” என்று பலமாய் சிரித்தார் தந்தை.

அதெல்லாம் பார்த்துக்கலாம். நாளைக்கு நாம் டாக்டர் சேவியர் வீட்டுக்குப் போறோம். அவரோட மூணு வயது மகளுக்குப் பிறந்த நாள் விழா. நீங்க ரெடியாய் இருங்க. நாம் போயிட்டு வரலாம்என்று பேச்சை முடித்தாள் யாழினி

(தொடரும்)