news
இந்திய செய்திகள்
கிறித்தவத்தை இழிவுபடுத்தும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு!

இந்தியில் வெளியிடப்பட்டசனாதனி - கர்மா ஹி தர்மாபடம் கிறித்தவ மதத்தையும் நம்பிக்கையையும் இழிவாகச் சித்தரிக்கிறது. மதமாற்றத்தைத் தவறாகச் சித்தரிப்பதுடன், மதச்சுதந்திரத்தை மதிக்காது, கிறித்தவக் கோட்பாட்டின் முக்கியக் கூறுகளை இழிவுபடுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடிக் கிராமங்களைப் பின்புலமாகக் கொண்ட இப்படம், மத அடிப்படையில் பழங்குடிச் சமூகங்களைப் பிளவுபடுத்தும். இது சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று இந்திய ஆயர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் மாந்திரீகம் மற்றும் கிறித்தவ மதமாற்றம் மையமாக உள்ளது. 2008-இல் கந்தமால் மாவட்ட வன்முறையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தைத் தடை செய்யக் கோரும் இந்த மனுவை பிப்ரவரி 5 அன்று ஒரிசா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

news
இந்திய செய்திகள்
புதிய பேராயர் மற்றும் துணை ஆயர்களை வரவேற்போம்!

திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி புதிய பேராயர் மற்றும் மூன்று துணை ஆயர்களை நியமித்துள்ளார். ஆயர் உடுமாலா பாலா ஷோரெட்டி அவர்களை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் பேராயராக நியமித்துள்ளார். அருள்பணி. . செல்வராஜன் அவர்களை கேரளாவின் நெய்யாற்றின்கரா வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் 2019 முதல் திருப்புரம் புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர். அருள்பணி. பினர்டு லாலோ அவர்களை ஷில்லாங் பேராயத்தின் வாரிசுப் பேராயராக நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 30, 2006 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியின் மறைமாவட்ட ஆயராக அருள்பணி. ஃபேபியன் டோப்போ நியமிக்கப்பட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கல்வி உள்ளிட்ட அனைத்திலும் செவித்திறன், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றம் அடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை. மாற்றுத் திறனாளிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களின் செயல்பாட்டை மேம்படுத்த .. உள்ளிட்ட இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூகத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்.”

- மாண்புமிகு. ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர்

ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு (..) ஆதிக்கம் செலுத்தி வருகிறது; அதில் நாம் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டியுள்ளது. மருத்துவத்துறையிலும் .. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர், இது நோய்களைக் கண்டறிந்து சிறப்பான சிகிச்சை வழங்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், இதை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்தத் தொழில்நுட்பங்களை அரசுகளால் மட்டுமே வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது; பெருநிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு அவசியமானது.”

- உயர்திரு. பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு 

வரலாற்றைப் பதிவு செய்வது அவசியம்; இன்றைக்கு நடக்கும் நிகழ்வைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டால் பத்து ஆண்டுகளுக்குத் தவறாகப் பதிவு செய்வர். இந்தியர்களும் தமிழர்களும் வரலாறு படைத்தனர்; ஆனால், அவற்றை முறையாகப் பதிவு செய்யத் தவறிவிட்டனர்.”

திரு. வே. இராமசுப்பிரமணியன், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்

மதநெறி தேவை; ஆனால், மதவெறி கூடாது. பழைய மூடப்பழக்கவழக் கங்களையும் நம்பிக்கைகளையும் தகர்க்க வேண்டும். சாதி என்பது ஒரு சதி; சாதியும் மதவெறியும் சமூகத்திற்கு அழிவையே உண்டாக்கும்.”

திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பெண்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது; பெண்கள் சமூகத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகின்றனர்.” 

- டாக்டர் சுதா சேஷய்யன், செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
மீண்டும் தலைவராகக் கர்தினால் ஃபிலிப் நேரி!

36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) தலைவராக மீண்டும் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ஆயர் பீட்டர் மச்சாடோ துணைத் தலைவராகவும், ராஞ்சி ஆயர் வின்சென்ட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல்கள், புவனேஸ்வரில் உள்ள XIM பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கர்தினால் ஃபெரோ 2019-ஆம் ஆண்டில் சென்னை நகரில் நடந்த 31-வது பிளீன பேரவையில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 2023 -இல் நடந்த 34 -வது பேரவையில் இரண்டாவது முறையாகவும், தற்பொழுது மூன்றாவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது; முந்தைய ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி மேலும் இரண்டு சதவிகிதம் சரிய வாய்ப்புள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை; வேலை வாய்ப்பு இல்லாத இளையோர்களின் விகிதம் 40 சதவிகிதத்தை நெருங்கி உள்ளது. இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி அவ்வப்போது வழங்கும் பணி நியமனக் கடிதங்கள் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறதே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வருமானத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது; உணவு, கல்வி, சுகாதாரப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.”

- உயர்திரு. சிதம்பரம், மேனாள் மத்திய நிதி அமைச்சர்

ஒவ்வொரு சமுதாயமும் தமக்கான வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம். ஐரோப்பிய நாடுகள் பல நூறு ஆண்டுகளாகத் தமக்கான சிறந்த வரலாற்று ஆவணங்களைப் பதிவு செய்துள்ளன. ஆயினும், தமிழ்ச் சமுதாயம் இலக்கியத்தில் சிறந்து விளங்கினாலும், வரலாற்று ஆவணங்களைக் குறைவாகவே கொண்டுள்ளது. இலக்கியங்களைத் தமிழ் மொழியின் 4000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வரலாற்றை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிவதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.”

- உயர்திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதால்தான் திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. திருவள்ளுவரின் சமகாலத்தவர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றோர் பல தத்துவங்களைக் கூறினார்களே தவிர, தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தவில்லை. அதனால்தான் காலத்தை வென்று வள்ளுவம் நிலைத்து நிற்கிறது.”

- திருமதி. டாக்டர் சுதா சேசய்யன், செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சத்தீஸ்கரில் இறந்த கிறிஸ்தவரைப் புதைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

உச்ச நீதிமன்றம், சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள சிந்தவாடா கிராமத்தில் கிறித்தவ இளைஞர் சுபாஷ் பாகேல் தன் தந்தையின் உடலை அவரது மூதாதையர் நிலத்தில் அடக்கம் செய்ய மனு தாக்கல் செய்ததை மறுத்து, அதற்குப் பதிலாக 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிறித்தவக் கல்லறைக்கு உடலை எடுத்துச் செல்ல உத்தரவிட்டது.

65 வயதான சுபாஷ் பாகேலின் தந்தை, ஜனவரி 7-ஆம் தேதி நீண்டகால நோயால் இறந்தார். அவரது உடல் ஜக்தல்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டிருந்தது. பாகேல், தந்தையின் உடலைத் தனது மூதாதையர் கிராமத்தில் அடக்கம் செய்ய விரும்பினாலும், அவர் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டதை முன்னிட்டு கிராம மக்கள் அதனை எதிர்த்தனர். கிராமத்தில் உள்ள இடுகாட்டைஇந்து பழங்குடி மக்களுக்கே உரியதுஎன்று கூறி, அவருக்கு அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், கிராமத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, உடலை 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிறித்தவக் கல்லறைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் ஜனவரி 27-ஆம் தேதி இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு சமூகப் புறக்கணிப்புக்கும் ஊரடங்குக்கும் எதிரான கேள்விகளை எழுப்புகிறது.