news
இந்திய செய்திகள்
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவில் முதல் பெண் இணைச் செயலர்!

கர்நாடகப் பிராந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (KRCBC) தலைவரும், பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான பீட்டர் மச்சாடோ, டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் அவர்களை ஏப்ரல் 7 அன்று பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC\\ST\\BC) பணிக்குழுவின் புதிய இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.

டாக்டர் இசபெல்லா பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக் குழுவில் இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்பதால், இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் செயலராக இருந்த அருள்பணி. யாகப்பா அவர்களுக்குப் பதிலாக இணைச் செயலாளரான திரு. ஆல்பன்ஸ் ஜி. கென்னடி தற்போது இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இப்பணியில் அமர்த்தப்படும் முதல் பொதுநிலையினர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புபவர். தார்வாடில் (Dharwad) இவர் நிறுவியுள்ளசாதனாமகளிர் மற்றும் குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் மனித உரிமைகள் மையம் 2001-ஆம் ஆண்டிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கடத்தல், குழந்தைத் திருமணம், சுரண்டல் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. திறமைமிக்கக் கல்வியாளரான இவர் உளவியல், இந்தி, சமூகவியல் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டங்களும், வாஷிங்டன், D.C.-இல் ஆன்மிகம் மற்றும் தலைமைப் பணி குறித்து முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர்.

2005-ஆம் ஆண்டு முதல் சமூகச் சேவைக்காக இவர் 11 விருதுகளைப் பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு இவர் இந்திய ஆயர் பேரவையின் கீழ் (CBCI) இயங்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் ஒரு பகுதியான தலித் கிறித்தவப் பெண்களின் மாற்றத்திற்கான (Dalit christian women for change) இயக்கத்தின் தேசியத் தலைவராகப் பணியாற்றியவர்
news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

லெமூரியா கண்டம் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக வரலாறு கூறுகிறது. உலகின் முதல் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டது தமிழ்மொழி. உலகின் முக்கியப் படைப்புகளைக் கொடுத்த மனிதர்களைத் தந்ததும் தமிழ் மொழியே. தமிழ்நாட்டு மக்கள் சமத்துவத்தையே எப்போதும் விரும்புகிறார்கள்.”

- உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மற்ற நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பை மேற்கொண்டுள்ளார். இந்தியாவும் தனது சந்தை மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, சீனா உள்ளிட்ட பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை மிகப்பெரிய சவாலாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அரசு தரப்பில் பொய்யான விவரங்களே வெளியிடப்படுகின்றன.”

- உயர்திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

கடந்த 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021-இல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டு தொடங்கியும் இதுவரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. தற்போது மத்திய அரசிடம் இதரப் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த எந்த விவரமும் இல்லை. எனவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு சாதிவாரிக் கணக்கெடுப்பையும்  ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும்.”

- உயர்திரு. முகமது சலீம், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவ விரோத வன்முறைகள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புனித சிலுவை நர்சிங் கல்லூரியில் மாணவியைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக அக்கல்லூரி முதல்வர் அருள்சகோதரி பின்சி ஜோசப்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த கல்லூரியின் முதல்வர், மாணவியின் குற்றச்சாட்டுகள் கல்விக் குறைபாடுகளை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் மாநிலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் கிறித்தவ விரோத நிகழ்வுகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிரான 165 வன்முறை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இது உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கல்வி என்பது தங்களுக்குத் தெரியாத செய்திகளைக் கற்றுக் கொடுப்பதாகும். விளையாட்டு என்பதும் கல்வியின் ஒரு பகுதிதான். தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை விளையாட்டு கற்றுத் தருகிறது. தோல்விகள் இல்லையேல், முன்னேற்றம் இல்லை. மாணவர்கள் எண்ணிய இலக்கை அடைய முடியும் என்ற உறுதியுடன் கடின உழைப்பை மேற்கொண்டால், உறுதியாக விரும்பியதை அடையலாம். ஆகவே, அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”

- உயர்திரு. எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி

இந்தியாவில் உயர் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கு உள்நாட்டு உற்பத்தி வருவாயில் 6 விழுக்காடு செலவழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கூட 2.5 விழுக்காடு மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாடு தனி நபர் வருமானத்தில் 155-வது இடத்தில் உள்ளது. வளர்ந்த நாடாக இந்தியா மாறவேண்டும் என்றால் ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.”

 - உயர்திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

ஒன்றிய பா... அரசு ஏழை மக்கள்மீது ஏராளமான வரிகளைச் சுமத்தி வருகிறது. மற்றொருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்குச் சலுகைகள் வழங்கி, அவர்களுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அரசாக உள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ‘வக்புவாரியச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஒன்றிய பா... அரசு பிளவுவாத அரசியலை உருவாக்கி ஒருபகுதி மக்களைத் தனிமைப்படுத்தி, தாக்குதல் நடத்தி வருகிறது. சிறுபான்மைச் சமூகங்களைத் தனிமைப்படுத்தும் வகுப்புவாத அரசியலிலும் பொய்ப் பிரச்சாரத்திலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.”

- மாண்புமிகு. பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்

news
இந்திய செய்திகள்
போரில் நாசமாகும் குழந்தைகள்!

காசா பகுதியில் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்கள் குழந்தைகளைப் பெருமளவில் பாதிப்படையச் செய்துள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியதிலிருந்து 15,613 குழந்தைகள் கொல்லப்பட்டனர், 33,900 குழந்தைகள் காயமடைந்தனர். 20,000 குழந்தைகள் அனாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புனித பூமி பொறுப்பாளர் அருள்பணி. பால்த்தாஸ், குழந்தைகளின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். காசா பகுதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள குழந்தைகளுக்கு உதவிகள் வழங்க திரு அவை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. “குழந்தைகள் கொல்லப்படும் குற்றம் மனிதகுல வரலாற்றில் அழிக்க முடியாத பாவமாக இருக்கும்என அருள்பணி. பால்த்தாஸ் கூறியுள்ளார். இத்தாலி நாடு, காசா குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கி உதவி செய்து வருகின்றது.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது மிகவும் அலட்சியம் கொண்ட ஓர் அரசின் உண்மை முகத்தை மறைப்பதாகவே உள்ளது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு என்பது கடந்த பத்து ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாடுகளின் அடையாளமாக மாறி உள்ளது. அதிகாரக் குவிப்பின் தீங்கு நிறைந்த விளைவுகள், கல்வித்துறையில் முக்கியமாக எதிரொலித்துள்ளன.”

- திருமதி. சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர்

அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்... என்று ஒன்றிய அரசு கூறியது. பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்துடிஜிட்டல் இந்தியாஎன்றார்கள். அடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள்; குறைவான இருப்புத்தொகை என்று கூறி அபராதம் விதித்தார்கள். தற்போது அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி .டி.எம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏழைகளுக்கு வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்து வருகிறது. இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல; இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் .டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப் படுகிறது. ஆனால், எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கற்பிக்க தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிச் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தமிழாசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணம். அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாகத் தமிழ் ஆசிரியர் பணி இடங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.”

- உயர்திரு. மருத்துவர் இராமதாஸ், பா... நிறுவுநர்