news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பூமி கிரகத்தைக் காக்கவும், வளங்களைப் பாதுகாக்கக் கூட்டாக உழைக்கவும் மக்கள் மீண்டும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமைப் பூமியை உருவாக்க வழி வகுக்கும்.”

- மாண்புமிகு திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறு வரையறையும் தற்செயலானவை இல்லை. தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படிவரை வந்துவிட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. நமது மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்திற்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ் அல்லாத ஒரு மொழி, திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் 73 மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும், பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தாம். இந்த நான்கு மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்களைத் தமிழ் கொண்டுள்ளது.”

திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தைக்கான நன்றிப் பெருவிழா!

2025, ஜூன் 1 அன்று புதுதில்லி உயர் மறைமாவட்டம், கடவுளின் கொடையாம் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்காக நன்றிப் பெருவிழா திருப்பலி ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் திருத்தூதர் லியோ போல்டோ ஜெரல்லி திருப்பலிக்குத் தலைமையேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மேலும், பேராயர் அனில்குட்டோ, ஆயர் தீபக், அருள்தந்தையர்கள்,  அருள்சகோதரிகள்  மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.

news
இந்திய செய்திகள்
சீரோ-மலங்கரா தலத் திரு அவைக்குப் புதிய ஆயர்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலம் சீரோ- மலங்கரா மாவேலிக்கரா மறைமாவட்டத்திற்கு, மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். ஆயர் மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்கள் 1955-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மணக்காரகாவில் பிறந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2022, மே 15 அன்று ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர் திருவனந்தபுரம் துணை ஆயராகவும்  பணியாற்றியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.”

- உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் சாத்தியக்கூறு உள்ளது. நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அது உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் தீர்க்கமான, விரைவான, வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். மேலும், நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றவுடன் அரசின் மற்றொரு நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதி பதவியை இராஜினாமா செய்வது நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவிகித நிறுவனங்கள்தாம் 50 சதவிகிதப் பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படிப் பணக்கார நிறுவனங்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. இங்குக் கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் மூன்று வேளை சாப்பாடு, அவர்களது குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.”

- மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ்

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தை இந்திய நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு

வத்திக்கானில் நடந்த ஒரு கூட்டத்தில் CBCI தலைவரான திருச்சூர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் திருத்தந்தையை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய மக்கள் அனைத்துச் சடங்குகள் மற்றும் சமயங்களைக் கடந்து  திருத்தந்தை லியோ அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறிய பேராயர், “திருத்தந்தையின் வருகை நம்பிக்கையாளர்களுக்கு ஓர் ஆழமான ஆசிராகவும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒற்றுமையின் வலுவான அடையாளமாகவும் இருக்கும்என்றும் தெரிவித்தார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பல குடும்பங்கள் தங்கள் சொத்துகளை விற்றுப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது இங்கே சாதாரண நிகழ்வாகிவிட்டது. பணம் கொடுத்துக் கல்லூரியில் சேர்ப்பதால்நான் எப்போது விழுந்தாலும் பணம் கொடுத்துத் தூக்கி விடுவார்கள்என்கிற தவறான எதிர்பார்ப்பைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறோம். எனவே, பணம் கொடுத்துச் சேரவேண்டிய நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, எங்கெல்லாம் தகுதியின் அடிப்படையில் சேர முடியுமோ, அங்குப் போட்டியிட்டுச் சேருவதற்கு அரசுக் கல்வி நிறுவனங்கள்தான் ஒரே இடம்.”

- கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்

ஒரு நாட்டில் வறுமை ஒழிய, வேலையில்லாத் திண்டாட்டம் குறைய உயர்கல்வி மிக மிக அவசியம். ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்கல்வி பெற்றாலே, அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக நிச்சயம் வலுப்பெறும் என்பதுதான் உண்மை. ஒரு குடும்பத்துக்கான அதே அளவுகோல்தான் இந்த நாட்டுக்கும் சரி, மாநிலங்களுக்கும் சரி. எனவே, நாம் எந்த அளவுக்கு உயர்கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதைப் பொறுத்துதான் நமது வளர்ச்சி, இலக்கு எல்லாமே.”

- முனைவர் கோ. விசுவநாதன், வேந்தர், வி..டி. பல்கலைக்கழகம், வேலூர்

சிறிய குடும்பங்களில் பெண்களுக்குப் பெரும் சொத்தாகவும், உடனடியாகப் பணம் பெற அரிய வழியாகவும் இருப்பது தங்க நகைக் கடன்தான். திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள், அவசர நெருக்கடியான காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. வசதியானவர்கள் வங்கி லாக்கர்களைப் பயன்படுத்தி வந்தாலும், எளியவர்கள் அடமானத்தையே தங்கள் இறுதித் தீர்வாகப் பார்க்கிறார்கள். நகைக்கான  அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் அதிக வட்டியும், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.”

- முனைவர் வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர்