news
இந்திய செய்திகள்
இளைஞர்கள் எதிர்காலத் திரு அவையின் தூண்கள்!

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நசரேன் சூசை, மாணாக்கர்கள் அனைவரும் இயக்கமாகச் சேர்ந்து தங்களைச் சுற்றியுள்ள சமூக அவலங்களை உற்றுப்பார்த்து, ‘அது ஏன் நிகழ்கிறது?’ என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும், அதற்குத் தங்களால் இயன்ற செயல்பாடுகளை இளம் கத்தோலிக்க இளைஞர்கள் இயக்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.

news
இந்திய செய்திகள்
கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் புதிய வாரிசு பேராயர் எலியாஸ் பிராங்க்

1962, ஆகஸ்டு 15 கர்நாடகாவின் பந்த்வாலில் பிறந்த எலியாஸ் பிராங்க் மங்களூரு மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். 1993, ஏப்ரல் 23 அன்று கொல்கத்தா மறைமாவட்டத்திற்குக் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். இவரைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, ஜூலை 3 அன்று அசன்சோலின் ஆயராக நியமித்தார். 2023, ஆகஸ்டு 24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்த அவர் தற்போதைய கொல்கத்தாவின் பேராயர் தாமஸ் டிசோசாவுக்கு உதவியாகவும், அவருடைய பணிக்காலத்திற்குப் பின் பேராயராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

மருத்துவச் சிகிச்சை என்பது பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதற்கான வழி மட்டுமே அல்ல; அது நாட்டுக்கே சேவையாற்றுவதற்கான வழியாகும். மருத்துவர்கள் நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை; அவர்கள் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடித்தளம் இடுகின்றனர். அதேவேளையில், மருத்துவர்கள்-நோயாளிகளுக்கு இடையே சீரான தகவல்தொடர்பு இருப்பதற்கான பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்களின் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே நோயாளிகளின் வலியை உணர்ந்து குணப்படுத்துவதன் முக்கியத்துவம் மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.”

- மாண்புமிகு, திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

ஒரு குற்றச் சம்பவம் நிகழ்ந்தால் அது குறித்து விசாரிக்க உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விசாரணையின்போது உடல் ரீதியாக யாரையும் துன்புறுத்தக்கூடாது. முறையாக அழைப்பாணை கொடுக்காமல் யாரையும் அழைத்து விசாரிக்கக்கூடாது. இரவு 7 மணிக்கு மேல் விசாரணைக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது. விசாரணைக்காக யாரையாவது காவல் நிலையத்தில் வைத்திருந்தால், அப்போது காவல் நிலையத்தில் கண்டிப்பாக ஆய்வாளர் இருக்கவேண்டும். பெண்கள், குழந்தைகளிடம் பகல் நேரத்தில் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை இரவு 7 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்.”

- திரு. சங்கர் ஜிவால் டி.ஜி.பி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்

சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், உரோம நாகரிகம், சீன நாகரிகம், சுமேரிய நாகரிகம் ஆகியவை நகரங்களில் பழமையானவை. வரலாறுகள் அறியப்பட்டவரை சிந்து சமவெளி எகிப்திய, மயன் நாகரிகங்களுக்கு மத்தியில் கிடைத்திருக்கிற சுமேரிய நாகரிகம்தான் நீண்டது, மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது. சிந்து சமவெளிப் பகுதிகளிலும் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பது உறுதியாகிறது.”

- முனைவர் திரு. வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர்

news
இந்திய செய்திகள்
ஒடிசாவில் கிறித்தவ மக்கள்மீது தாக்குதல்!

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில், மல்கின்கிரி மாவட்டம் கோடமடேரு கிராமத்தில் வாழும் கிறித்தவ  மக்களை 2000 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியதில், ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் எனவும், 20-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கிறித்தவச் சமூகங்களின் பாதுகாப்பு என்பது மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஆங்கில மொழி என்பது அணை கிடையாது; அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானம் அல்ல; அது அதிகாரம் அளிப்பது. ஆங்கிலம் சங்கிலி அல்ல; சங்கிலியை உடைக்கும் கருவி. இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்றவேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கவேண்டும். உலகத்துடன் போட்டியிடுவதற்கான பாதை அதுதான்.”

- உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே உயர்வானது. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட சனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுபவை மட்டுமே. மேலும், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மட்டுமே நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. மாறாக, அதன் அடிப்படைக் கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் மாற்ற இயலாது. நீதித்துறைக்கு அதிகாரம் மட்டுமல்ல பொதுமக்களின் உரிமைகள், அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் கடமையும் உள்ளது.”

- மாண்புமிகு பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

தமிழர்களின் தொன்மை வெளி உலகுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வு பற்றிய உண்மைகள் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன. நல்ல வேளையாகக் கீழடியில் நடைபெற்ற அகழாய்வைத் தொடர்ந்து அங்குக் கிடைத்த பொருள்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை நிலைநாட்டியுள்ளது. இந்த ஆய்வு இன்னமும் தொடரவேண்டும். தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்ற உண்மை நிலை நிறுத்தப்படும்.”

- உயர்திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம் இன்றைய குழந்தைகளைச் சார்ந்துள்ளது. அவர்கள்தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து, அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெண்களை மதிக்கவும், அவர்களுக்குச் சம உரிமை வழங்கவும், வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும், சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால் தமிழ்ச் சமுதாயம் முன்னேறும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.”

- மாண்புமிகு அமைச்சர் பி. கீதா ஜீவன்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான் அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். சமூக ஊடகங்கள் மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும். அதனால் நேர மேலாண்மை மிக முக்கியம். எனவே, சமூக  ஊடகங்களுக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது. மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது போதைப்பொருள் பழக்கம். போதைப்பொருள்களுக்கு இங்கே ஒரு தேவை இருக்கிறது. அதனால்தான் பிற மாநிலங்களில் இருந்து அது கடத்தி வரப்படுகிறது. அந்தத் தேவையை இல்லாமல் செய்வதில் மாணவர்களின் பங்கு முக்கியமானது.”

- திரு. சங்கர், ஆவடி காவல் ஆணையர்