news
இந்திய செய்திகள்
கேரளாவில் மறைந்த மேனாள் முதல்வருக்கு தலத்திரு அவை அஞ்சலி!

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேனாள் மாநில முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் தனது 101 வயதில் மரணித்தார். அவரது மறைவுக்குக் கேரளக் கத்தோலிக்க ஆயர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள், சமூக நீதி, ஊழலை எதிர்த்துப் போராடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும், தனது 80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும், பொதுமக்களின் தலைவராகவும், அரசியல் பிளவுகளைத் தாண்டி, அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் உருவெடுத்தார் என்றும் சீரோ-மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திரு அவையின் தலைவர் ஆயர் இரபேல் தட்டில் அவரைப் பாராட்டியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்கள் அறம் சார்ந்து வாழவேண்டும். திருக்குறள் ஓர் உன்னதமான செல்வம்! வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் உங்கள் மேஜைமீது கண்டிப்பாக திருக்குறள் புத்தகம் வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு குறளாவது படிக்கவேண்டும். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறிய இந்த மண்ணில், தத்துவத்தை அறிந்து சட்டம் பயிலும் மாணவர்கள் அனைத்து நுணுக்கங்களையும் கற்க வேண்டும்

- மாண்புமிகு அரங்க. மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சனநாயகத்தின் தூணாக நீதித்துறை விளங்குகிறது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதித்தேரில் இரண்டு சக்கரங்களைப் போன்றவர்கள். வழக்குகளில் ஆஜராகும்போது வழக்கறிஞர்கள் முழு தயாரிப்போடு இருக்கவேண்டும். வழக்குத் தொடரும் கட்சிக்காரர்கள் தங்களது மனைவியைவிட தனது வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களைதான் பெரிதாக நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.”

- மாண்புமிகு ஆர். சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளுக்கும் உண்டு. நீதிபதி ஒரு சொல்லை நீதிமன்றத்தில் தவறாகப் பயன்படுத்தினால், அதுவும் நீதிமன்ற அவமதிப்புதான் இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. இதை இன்று மக்கள் முன்னால் சொல்லவேண்டிய நிலைக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. அதனால், இன்று நீதிமன்றத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.”

- திருமதி. . அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாம் மருத்துவராகலாம், பொறியாளராகலாம், வழக்கறிஞராகலாம், விஞ்ஞானியாகலாம், ஏன் நாட்டின் உயர்ந்த பீடத்தில் இருக்கலாம், ஆனால், முதலில் மனிதர்களாக மாறவேண்டும். மனிதர்களாக நம்மை மாற்றுவதுதான் கல்வியின் நோக்கம்; கற்றலின் நோக்கம். எல்லாத் தாய்மார்களும் பத்து மாதம் சுமந்து ஒரு உயிரை வெளி உலகத்திற்கு அனுப்பும்போது, அந்த உயிரினத்தை எது மனிதனாக மாற்றிக்காட்டுகிறதோ, அதற்குப் பெயர்தான் கல்வி; அதற்குப் பெயர்தான் கற்றல். அந்த நிலையை நோக்கி மானுடம் பயணிக்கவேண்டும்.”

- குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார்

எந்தத் தேசத்தின் வளர்ச்சியையும் மக்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதிலும் மக்களை ஒன்றுபடுத்தாமல் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த முடியாது. இதற்கு ஒற்றுமைதான் அவசியம் என்றால், அதற்கான முன்நிபந்தனை சமூகநீதியாக மட்டுமே இருக்கமுடியும். நீதியற்ற சமூகத்தில் எவ்வாறு மனப்பூர்வமாக மக்கள் ஒருங்கிணைவார்கள்? மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமை இல்லாமல் ஒற்றுமையும் சாத்தியம் இல்லை; வளர்ச்சியும் சாத்தியமில்லை.”

- திரு. சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில், அறிவுரைகளை திருவள்ளுவரால் வழங்க முடிந்திருக்கிறது என்றால், அது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். திருக்குறளில் கடவுள் குறித்தோ, தலைவர்கள் குறித்தோ, அரசர்கள் குறித்தோ, எந்தவிதக் குறிப்புகளும் இடம்பெறவில்லை. அதனால்தான் அதைபுதுமறைஎன்கிறோம். 5400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கீழடி ஆராய்ச்சிகள் கூறினாலும்கூட, இன்றைக்கும் இளமை ததும்பும் மொழியாகத் தமிழ் திகழ்கிறது. எனவே, மாணவர்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ளவேண்டும்.”

- திரு. ஒளவை . அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்

தற்போதைய தலைமுறையினரிடம் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் இல்லை. அவ்வாறு இல்லாமல் நம்முடைய வேர்களைத் தேடிப்போகவேண்டும். திராவிட இயக்கத்திற்கும் தமிழ் இயக்கத்திற்கும் நட்பு முரண்பாடு உண்டு; பகை இல்லை. ஆனால், அதற்கு எதிர்மறையான கருத்துகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. தமிழ் மற்றும் தமிழர்களின் உரிமைகளைக் காக்க இரு இயக்கங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டும்.”

- திரு. ஆளூர் ஷாநவாஸ், சட்டப்பேரவை உறுப்பினர்

news
இந்திய செய்திகள்
இந்தியாவில் கிறித்தவர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டைத் தடுக்க ஒரு சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடுமையான மதமாற்றத் தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து அம்மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன் குலே மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், கிறித்தவத் தலைவர்களிடமிருந்து எதிர்வினைகள் எழும்பிய நிலையில், நாக்பூர் பேராயர் எலியாஸ் கொன்சால்ஸ், “நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச்சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையே தவிர, மதச்சுதந்திரத்தை அடக்குவதற்குப் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது அல்லஎன்று கூறியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

காமராசருக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு மாணவர்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக 12,000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார். காமராசர் அமைத்த அடித்தளத்தால்தான் தற்போது தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் திகழ்கிறது.  பட்டியலின மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும் என்பதற்காகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சராக்கினார். அரசியலில் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் காமராசர்.”

- உயர்திரு. முனைவர் கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

மாணவர்கள் நலம் சார்ந்த பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்துவது அரசின் கடமை. இந்திய அளவில் நடத்தப்படும் பல போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். கல்வித் தரம் உயர்ந்தால்தான் அது சாத்தியமாகும். அறிவார்ந்தவர்கள் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள். ஆனால், அவர்களை நல்ல வகையில் வழிநடத்தவேண்டும். மாணவர்களின் திறமைகளையும் ஆளுமையையும் வளர்ப்பதுதான் கல்வித்திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். உண்மையான தீர்வுக்கு நாம் கல்வியை எவ்வாறு பார்க்கிறோம், அதிலிருந்து நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதில் சமூக விழிப்புணர்வு தேவை.”

- உயர்திரு. ஆர். நடராஜ், மேனாள் காவல்துறை தலைவர்

கல்வி நிலையங்களை அமைக்க அரசியல் கட்சிகள் முன்வந்தால் நாம் வரவேற்க வேண்டும். வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களைப் போதிக்க தேர்தல் ஆணையம் உள்பட யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. அதேநேரம், எந்த ஓர் அரசியல் கட்சியும் தீண்டாமையை ஊக்குவித்தால், அது கண்டிப்பாகக் குற்றமே! மஜ்லிஸ் கட்சியின் விதிமுறைகளின்படி சிறுபான்மையினர் உள்பட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்காகப் பணியாற்றுவதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்குச் சில குறிப்பிட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ‘வகுப்புவாதத்தைத் தூண்ட மாட்டோம்என்ற உறுதிமொழியை ஒரு கட்சியோ அல்லது அதன் வேட்பாளரோ மீறும் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆகவே, வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே சாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்குச் சமமான அளவில் ஆபத்தானவை.”

- உச்ச நீதிமன்றம், புதுடெல்லி

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல; அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கானது, வெறுப்பின்பாற்பட்டது அல்ல; இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர் இனியாவது திருந்தவேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.”

- மாண்புமிகு திரு. மு.. ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று நான் ஏற்றுள்ள மிகப்பெரும் பொறுப்புக்கு என் பள்ளியும் ஆசிரியர்களுமே காரணம். பள்ளியில் கற்ற கல்வியும் ஒழுக்கமும் வாழ்வுக்கு வழிகாட்டியாக உள்ளன. பொதுமேடைகளில் பேசும் துணிச்சல், பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்புகள் என் நம்பிக்கையை அதிகரித்தன. நான் தாய்மொழியில் கல்வி கற்றேன், தாய்மொழிக் கல்வி, கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்.”

- மாண்புமிகு திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடு உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவானதைத் தவிர்ப்பதும், நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும் மிகவும் இன்றியமையாததுவகுப்பறையில் மாணவர்களை 15 நாள்களுக்கு ஒருமுறை வரிசைமாற்றி அமர வைக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விவரங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதியைக் குறிப்பிட்டு ஆசிரியர்கள் அழைப்பதோ, கருத்துத் தெரிவிக்கவோ கூடாது. மேலும், மாணவர்களின் உதவித்தொகை குறித்த விவரங்களை வகுப்பறைகளில் அறிவிக்கக்கூடாது. அதேபோல, மாணவர்கள் தங்கள் கைகளில் வேறுபாடுகளை அடையாளப்படுத்தக்கூடிய வண்ணக்கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்குத் தடை விதிப்பதுடன், போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க அவர்களின் பெற்றோர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதனுடன் மாணவர்களுக்குப் பள்ளி அளவில் வழிகாட்டி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.”

- உயர்திரு . கண்ணப்பன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்