news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஒரு படைப்பானது அது தன்னை என்றும் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும்; இதுதான் படைப்பு என அறியப்படக்கூடிய அந்த ஒரு கணத்திலேயே அது தன் முகத்தை வேறு விதத்தில் காட்டித் தரும். அதுதான் படைப்பின் சிறப்பு. எளிய மனிதர்களின் சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய படைப்புகளுக்கு என்றும் அழிவில்லை. அவை காலம் கடந்தும் நிலைக்கும். படைப்பு எனும் ஆகிருதியை உணர்ந்து பார்க்க வேண்டும்; தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற காதலினால் எழுந்து நிற்கக்கூடியவர்கள்தான் படைப்பாளர்கள்.”

- திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

அண்மைக்காலமாகஆன்லைன்முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதிநிறுவனங்களின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் அதிக இலாபம் கொடுப்பதாகக் கூறும்ஆன்லைன்முதலீடு விளம்பரங்களை நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் வங்கிக்கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். பொதுமக்கள் ஏதேனும் பணமோசடியில் சிக்கினால் உடனடியாகச் சைபர் குற்றப்பிரிவு ‘1930’ என்ற இலவசத் தொலைப்பேசி எண் மூலமாகவோ அல்லது http://cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.”

திரு. அருண், காவல் ஆணையர்

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில், ஆட்டோ உதிரிப் பாகங்கள் உற்பத்தி, கடல்சார் பொருள்கள், காலணி உற்பத்தி ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்து வருகின்றது. அமெரிக்காவின் வரிவிதிப்பு முறை, அது சார்ந்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். இதனால், பொருளாதாரத்தில் நிலையற்றத்தன்மை இருக்கவே செய்கிறது. சாதகமான முயற்சிகளை மேற்கொண்டால் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று தெரிகிறது.”

- திரு. . உதயச்சந்திரன், நீதித்துறை முதன்மைச் செயலர்

news
இந்திய செய்திகள்
கிறித்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்குக் கண்டனம்!

காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் வி.டி. பால்ராம், “கேரளத்தில் கிறிஸ்தவச் சமூக மாணவர்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் முறையற்று உதவி பெற்றுள்ளனர்; இதன் காரணமாக, முஸ்லிம் சமூக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்என்று குற்றம் சாட்டியிருந்தார். “சர்ச்சைக்குரிய இக்குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது; சமூக விரிசல்களை ஏற்படுத்தக்கூடியதுஎன்று சீரோ-மலபார் திரு அவை வன்மையாகக் கண்டித்துள்ளது. இக்குற்றச்சாட்டுகள் சமூக அமைதிக்குப்  பாதிப்பை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளதுடன், அரசியல் நன்மைக்காக மத அடிப்படையிலான பிரிவினை வாதங்களைத் தூண்டுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

news
இந்திய செய்திகள்
கிறித்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக ஆயர்கள் தலைமையில் பெரும் போராட்டம்!

ஒடிசா மாநிலத்தில் கிறித்துவச் சமூகத்தினர் மீதான தொடர்ச்சியான வன்முறைக்கு எதிராக ஆயர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். ரூர்கேலா உள்பட பல நகரங்களில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கத்தோலிக்க, புரோட்டஸ்டண்ட் மற்றும் பிற சபைகளின் தேவாலயங்கள் என 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்தனர். ரூர்கேலா ஆயர் கிஷோர்குமார் குஜூர், “ஒன்றுபட்ட கிறித்தவர் மன்றத்தின் (United Christian Forum) தகவலின்படி, இந்தியாவில் தினமும் சராசரியாக இரண்டு கிறித்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காகவே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலை மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கேள்விக்குட்படுத்துகிறதுஎன்றார்.    

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் அபாயகரமானது. அதன் முகவராகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மக்களின் வாக்குரிமைக்கும் நாட்டின் சனநாயகத்திற்கும் அச்சுறுத்தலாக பா... உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சியிலிருக்கும் வரை மக்களின் உரிமைகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை.”

- திரு. மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தேசியத் தலைவர்

மக்கள் பிரதிநிதிகள் எல்லாருமே அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை கொண்டவர்கள். எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் நலன் சார்ந்து விவாதித்துத் தீர்வு காணும் கூட்டத்தொடராக அமைய வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பு. இதை நிறைவு செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புகளுக்குமே உண்டு. ஒவ்வொரு விநாடியும் மக்கள் வரிப்பணம்! அதை நாம் விரயம் செய்தால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற பொறுப்பும் கடமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டும்.”

- முனைவர் கோ. விசுவநாதன் வேந்தர், வி..டி. பல்கலைக்கழகம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. மாதிரிப் பள்ளிகளில் உள்ளதைப் போன்ற நவீன வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்டு - உறைவிட வசதிகள் மட்டும் இடம்பெறாது. அந்தப் பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். நீட், ஜே... போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து +2 மாணவர்களும் தங்கள் சுய விருப்பத்தின்படி இணைந்து பயன்பெறலாம். இந்த வெற்றிப் பள்ளிகள் மூலமாக, சுமார் 50,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.”

- திரு. பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்

news
இந்திய செய்திகள்
பஞ்சாப் சிறுபான்மையினர் ஆணையத்திற்குப் புதிய தலைவர்!

போதகர் அங்கூர் நருளாவின் நண்பரான ஜட்டிந்தர் மசிஹ் கௌரவ் அவர்களை பஞ்சாப் மாநிலச் சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக அம்மாநில அரசு நியமித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் கலனூர், குர்தாச்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பால்மிகி-புரொட்டஸ்டேண்ட் குடும்பத்தில் பிறந்த இவர், பிரிந்த சபை அமைப்புகளில் நன்கு அறியப்பட்ட முகமாக இருப்பவர். கத்தோலிக்கர் மற்றும் பழங்காலப் புரொட்டஸ்டேண்ட் மதப்பிரிவினர் பொறுப்பு வகித்த பின்னணியில், பெந்தகோஸ்து திரு அவையைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பு வகிப்பது இதுவே முதல் முறை.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

வாக்குத் திருட்டு குறித்த தகவலை நான் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டேன். அதை ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், போலி வாக்காளர்கள் குறித்து பா... தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களுக்குத் தேர்தல் ஆணையம் எவ்வித ஆதாரத்தையும் கேட்கவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே அவர் அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசால் உண்மையான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முடியாது; இடஒதுக்கீட்டிற்கான 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்கவும் முடியாது.”

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பிரதமர் புகழ்ந்து பேசியது அந்த நாளையே அவமதித்த செயலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்ந்து பேசியதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திர தின அழைப்பிதழில் இந்துத்துவக் கொள்கைத் தலைவர் சாவர்க்கரின் புகைப்படத்தை மகாத்மா காந்தியின் படத்திற்கு மேல் அச்சிட்டதும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதி என்பதைக் காட்டியுள்ளது. வெறுப்புணர்வு, வகுப்புவாதம், கலவரம் என்ற மோசமான வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுமந்து கொண்டுள்ளது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவு என்ற நமது வரலாற்றைப் புதைத்து வெறுப்புணர்வு பரப்பும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.”

- திரு. பினராயி விஜயன், கேரள முதல்வர்

ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம்; தொடர்ந்து நிற்போம். மதச்சார்புள்ளக் கூட்டணி, மதச்சார்பற்றக் கூட்டணி என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான அரசியல். ‘மதச்சார்பின்மை காப்போம்என்ற கருத்தியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலமாகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை நாம் மேலும் உறுதிப்படுத்த முடியும்.”

- திரு. தொல். திருமாவளவன், வி.சி.. கட்சித் தலைவர்