news
இந்திய செய்திகள்
நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கான தொடர் போராட்டம்

 “நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருப்பினும், பெண்களுக்கான பாதுகாப்பின்மை சூழல் தொடர்வது துரதிருஷ்டவசமானது. பெண்களின் தொடர்ச்சியான போராட்டம், அவர்களைப் பலவீனமாகக் கருதும் குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகம் மற்றும் பழமைவாதத்திற்கு எதிரானது. சமுதாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஆழமாக வேரூன்றிய சில பழமைவாதம், பெண்களின் சமத்துவத்திற்குத் தடையாக இருக்கிறது. எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும் முக்கியமானதாகும். நமது நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.”

- இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

news
இந்திய செய்திகள்
மிஷன் 2033
செப்டம்பர் 11-ஆம் தேதி புனித ஜான் சுகாதார அறிவியல் நிறுவனத்தில்  ‘Journeying towards a Synodal Church: Mission 2033’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தின்போது CCBI-இன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ அவர்கள் மிஷன் 2033 என்னும் தேசிய மேய்ப்புப்பணித் திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திரு அவையின் 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய, ஒரு வருட உழைப்பின் பலனாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ‘இத்திட்டம் ஒரு கூட்டுத் திட்டம். இது தூய ஆவியாருடன் எழும் உரையாடல்களின் பலன்’ என்று கர்தினால் ஃபெரோ கூறினார். இதனை நனவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
news
இந்திய செய்திகள்
CCBI வழிபாட்டு ஆணையத்தின் புதிய செயலர்
பெங்களூரில் செப்டம்பர் 10-11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற CCBI-யின் செயற்குழுக் கூட்டத்தில், வழிபாட்டு முறைக்கான CCBI ஆணையத்தின் புதிய செயலாளராக அருள்பணி. ருடால்ப் ராஜ் பின்டோ, O.C.D.  நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1, 1976 அன்று மங்களூரின் குர்பூரில் பிறந்த இவர் தத்துவ ஆய்வுகளை மைசூரிலுள்ள புஷ்பாஷ்ரமாவிலும், மங்களூரின் ஜேப்புவில் உள்ள புனித ஜோசப் இன்டர் டையோசீசன் குருமடத்தில் இறையியலும் பயின்றவர். 2003-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை உளவியலில் எம்.எஸ்.சி. பட்டமும்,  உரோம் புனித அன்செல்மோவின் போண்டிஃபிகல் அதீனியத்தில் இருந்து வழிபாட்டில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இவை வெகுவாகப் பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம்தான். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடகப் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்கச் செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளைக் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.”

- திரு. நா. முருகானந்தம், தலைமைச் செயலர்

நாட்டில் கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். சீனாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதால் அங்கு கல்வி நல்ல வளர்ச்சி அடைந்து, பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இந்தியாவிலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் கல்வி வளர்ச்சி அடையும். கல்வி வளர்ச்சி அடைந்தால்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் குறைந்தபட்சம் பெண்களுக்குப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும்.”

- திரு. விசுவநாதன், வி..டி. பல்கலைக்கழக வேந்தர்

மாணவர்கள் வாழ்க்கையில் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் கடும் உழைப்பின் மூலம் வெற்றிபெற வேண்டும். முழு மன உறுதி மற்றும் ஈடுபாட்டுடன், தேர்ந்தெடுத்த செயலைத் தொடர்ந்து முயன்றால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.”

- திரு. பி. வீரமுத்துவேல், சந்திரயான்-3, திட்ட இயக்குநர்

news
இந்திய செய்திகள்
நிவாரணப் பணியில் மறைமாவட்டம்!

தெற்கு ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்டு 28 முதல் 31 வரை பெய்த கன மழையால் சுமார் 6.44 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர மாநிலத்தின் நந்தமுரி தாரக ராமராவ், குண்டூர், கிருஷ்ணா, ஏலூரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள 193 நிவாரண முகாம்களில் சுமார் 42,707 பேர் தங்கியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டமும் இணைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தன்னார்வலர்களாகச் சேவையாற்றி வரும் வலுவான மகளிர் குழுக்களைக் கொண்ட மறைமாவட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

news
இந்திய செய்திகள்
நிவாரணப் பணியில் மறைமாவட்டம்!

தெற்கு ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்டு 28 முதல் 31 வரை பெய்த கன மழையால் சுமார் 6.44 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலோர மாநிலத்தின் நந்தமுரி தாரக ராமராவ், குண்டூர், கிருஷ்ணா, ஏலூரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள 193 நிவாரண முகாம்களில் சுமார் 42,707 பேர் தங்கியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டமும் இணைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகத் தன்னார்வலர்களாகச் சேவையாற்றி வரும் வலுவான மகளிர் குழுக்களைக் கொண்ட மறைமாவட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணப் பொருள்கள் அளிக்கப்பட்டன.