news
இந்திய செய்திகள்
ஆரோக்கியத்தைத் தரும் உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டும்

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியைச் சுற்றி அதிகரிக்கும் சுற்றுச்சூழல் ஆபத்துகளும் அதன் அத்தியாவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. பூமியையும், சுற்றுச்சூழலையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உயிர் சக்தி வேளாண்மை இன்றியமையாதது. இயற்கை வேளாண்மை, உயிர் சக்தி விவசாய முறைகள் சிறு விவசாயிகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் நன்மை தரும். இதில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்கின்றன. நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய இரண்டையும் சமநிலையுடன் நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க வேண்டும்.”

- திரு. ஹெச்.கே. பாட்டீல், கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க வேண்டும்

இந்திய மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 14 வயதுக்கு உள்பட்டவர்களாகவும், 50 சதவிகிதம் 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் முற்போக்குச் சிந்தனை உள்ள இளைஞர்களால் மட்டுமே முற்போக்குச் சிந்தனைகொண்ட நாட்டை உருவாக்க முடியும். காலத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த கட்டடம் மற்றும் தொழில்நுட்ப வசதியால் மட்டுமே சிறந்த மாணவர்களை ஒரு பள்ளியால் உருவாக்க முடியாது. திறன்மிக்க ஆசிரியர்களால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.”

- திரு. ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
சட்டம் படித்தவர்கள் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

மாணவர்களின் கல்வி சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கற்றல் என்பது சட்டத்துறையில் மிகவும் அவசியம். சட்ட மேதை அம்பேத்கர் தனது வாழ்க்கையைச் சமூகநீதி, சமத்துவத்துக்காக அர்ப்பணித்தார். குறிப்பாக, சட்ட உதவியை நாட இயலாதவர்களுக்கு நீதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அதைப் பின்பற்றி, மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, சமூகப் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்களைக் காத்தல், பாலின வேறுபாடுகளைக் களைதல் என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”

- திரு. கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி

news
இந்திய செய்திகள்
இந்தியாவிலிருந்து புதிய கர்தினால்!

கேரளாவின் சங்கனாச் சேரி சீரோ-மலபார் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பேரருள்தந்தை ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் (51) அவர்கள் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கிறார். இவர் ஆகஸ்டு 11, 1973 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். ஜூலை 24, 2004 அன்று  குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். தென் கொரியா (2009-2012), ஈரான் (2012-2014) ஆகிய நாடுகளில் தூதரகத்தின் செயலாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கோஸ்டாரிகா (2014-2018), வெனிசுலா (2018-2020) ஆகிய நாடுகளில் துறவிகளின் ஆலோசகரானார். 2020-ஆம் ஆண்டில் உலகெங்கிலும் திருத்தந்தையின் பயணங்களை ஒருங்கிணைப்பதிலும் நிர்வகிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
அருள்செல்வர் மொழிபெயர்ப்பு விருது - 2024
‘அருள்செல்வர்’ பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், ‘கதவுகள் திறக்கப்படும் போதினில்’ (When the Doors open… by Anungla Zoe Longkumar) என்ற மொழிபெயர்ப்பு நூலைப் பாராட்டி பேரா. முனைவர் ச. வின்சென்ட் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.  விருது பெற்றுள்ள ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. வின்சென்ட் அவர்களுக்கு, ‘நம் வாழ்வு’ தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறது.
news
இந்திய செய்திகள்
ICPA – Fr. Louis Careno Award 2024 For Excellence in Journalism

அருள்பணி. அந்தோணி பங்குராசு, ஆசிரியர், நியூ லீடர்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட நிர்வாகத்தில் மலர்ந்து, தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில் வலம் வந்து, உலகெங்கும் பயணித்து, 137 ஆண்டுகால வரலாற்றுச் சாதனை படைத்து வரும் ‘நியூ லீடர்’ இதழுக்கு, சிறந்த இதழுக்கான ‘ICPA-2024’ விருது வழங்கப்பட்டுள்ளது.  சீரிய சிந்தனை கொண்ட தலையங்கத்தாலும், மானுட மதிப்பீடுகளைச் சுமந்து வரும் கட்டுரைகளாலும், ஆழமான இறையியல், விவிலியம், ஆன்மிக, உளவியல் கட்டுரைகளாலும் சமூக மாற்றத்திற்கான ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ‘நியூ லீடர்’ இதழின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தந்தை பங்குராசு அவர்களையும், ‘நியூ லீடர்’ இதழின் நிர்வாகத்தினரையும் ‘நம் வாழ்வு’ வாழ்த்துகிறது.