news
இந்திய செய்திகள்
பழங்குடியினரின் பங்கேற்பின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை

பழங்குடி இனத்தவர் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சிந்தனை மற்றும் வாழும் விதத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். நமது பழங்குடியினச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் தீவிரமான பங்கேற்பு இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.”

- திருமதி. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 1 -ஆம் தேதி பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெறும்  என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இனி குமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக  200 கிராமங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள். 

news
இந்திய செய்திகள்
மணல் ஆலை திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலைக்காகக் குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்க அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் அக்டோபர் 1 -ஆம் தேதி பத்மநாபபுரம் ஆர்.டி.. அலுவலகத்தில் நடைபெறும்  என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இனி குமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக  200 கிராமங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.  

news
இந்திய செய்திகள்
புலம்பெயர்ந்தோரின் தாய் கிரேசி SCN
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குக் குடியேறும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை செய்வதை, அருள்சகோதரி கிரேசி SCN (Sisters of Charity of Nazareth) தனது பணியாக மாற்றியுள்ளார். 1990களின் பிற்பகுதியில், வேலைக்காக, பொருளாதாரத்தைத் தேடி வட மாநிலங்களிலிருந்து, கேரளாவுக்குக் குடியேறியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அவர்கள் பெரும்பாலும் உள்ளூர் மக்களிடமிருந்து பாகுபாட்டை எதிர்கொண்டனர். பலர் தங்கள் முதலாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விலையுயர்ந்த கட்டணங்களில் குறைந்தபட்ச வசதிகளுடன் சிறிய, நெரிசலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். புலம்பெயர்ந்தோர் சிறிய தவறுகளுக்குப் பெரிய தண்டனை, ஓய்வு நாள் இல்லாமல் தண்டிக்கும் மனநிலை, ஓய்வெடுக்க இடமில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவது, தங்கள் ஊதியங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை, பணிநீக்கம் போன்றவற்றால் தங்கள் குடும்பங்கள் உயிர் வாழ்வதற்காக ஒடுக்குமுறையைச் சகித்துக்கொள்வது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் இத்தகைய புலம்பெயர்ந்தோருக்குத் தாயாக சகோதரி கிரேசி செயல்படுகின்றார்; அவர் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருந்து வருகிறார்.
news
இந்திய செய்திகள்
உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்

தற்போது நாட்டில் உள்ள 45 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் 1,200 பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுக்கு 4.3 கோடி பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 6 லட்சம் பேர் கணினி அறிவியல் கல்வி பயில்கின்றனர். அகில இந்திய அளவில் தற்போது 28.3 சதவிகிதமாக இருக்கும் உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கையை, அடுத்த 11 ஆண்டுகளில் 50 சதவிகிதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில், திறமை மிகுந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, வேலைவாய்ப்பைப் பெறவும், கிடைத்த வேலைவாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவாற்றலுடன், இதரத் திறமைகளையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.”

- திரு. டி.ஜி. சீதாராம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர்

news
இந்திய செய்திகள்
மழலைக் கல்வி தொடங்கும்போதே குழந்தைகளுக்குத் தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்

எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும்போதே, அவர்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்.”

- திருமதி. இரா. மனோன்மணி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர்