news
இந்திய செய்திகள்
குழந்தைகள் மீதான இந்திய அரசின் புதிய உத்தரவிற்குக் கிறித்தவர்கள் எதிர்ப்பு!

மத்தியப்பிரதேசத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், மத்தியப்பிரதேச குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்க குழந்தைகளுக்குப் பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெறக் கோரியுள்ள உத்தரவு கிறித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுபவர்களை நேரடியாகக் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஜபல்பூரின் மறைமாவட்டக் கல்வியாளர் அருள்பணியாளர் தங்கச்சன் ஜோஸ், இந்த உத்தரவு நேரடியாகக் கல்வி மையங்களைத் தாக்கும் முயற்சியெனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த உத்தரவு 2023 -ஆம் ஆண்டிலும் பிறப்பிக்கப்பட்டது, அதன்படி கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்க அனுமதிக்க பெற்றோரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.

news
இந்திய செய்திகள்
ஒடிசா கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை!

டிசம்பர் 27 அன்று ஒடிசா மாநிலத்தில் கோபிந்த சிங் என்பவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, சில நபர்கள் வந்துமதமாற்றம் நடைபெறுகின்றதுஎன்று தவறாகச் குற்றஞ்சாட்டி அங்கிருந்தோரைத் தாக்கியுள்ளனர். கிறித்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த இந்த வன்முறை நிகழ்வு பலரையும் கவலை அடையச் செய்துள்ளது, இது நாட்டின் அரசியலமைப்பின்படி உறுதி செய்யப்பட்ட மதச் சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கிறித்தவர்களின் பாதுகாப்பு மற்றும் மதச் சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்து, உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

news
இந்திய செய்திகள்
கிறிஸ்துமஸ் கொண்டாடத் தடை

சத்தீஸ்கரின் பழங்குடிக் கிறித்தவர்கள் இந்து மதத்திற்குத் திரும்ப வேண்டுமென இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்ததுடன், கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடக் கூடாது என்று எச்சரித்துள்ளன. டிசம்பர் 24 அன்று அங்கு கிறித்தவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து, கிறித்தவர்களுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் சத்தீஸ்கரில் கிறித்தவர்களுக்கு எதிராக 127 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

news
இந்திய செய்திகள்
வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசியம்

மரக்கன்றுகள் வளர்த்தல், பறவைகளுக்கு இரை வைத்தல் உள்ளிட்ட கல்விக்கு அப்பாற்பட்ட அறம் சார்ந்த செயல்களில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவக்கூட மனமில்லாமல் அதைக் கடந்து போகிறோம். நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் குறைந்துகொண்டே வருகின்றன. ஒருவர் வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக, நற்சிந்தனை மிகவும் அவசியமாகும். நற்சிந்தனை கொண்ட மாணவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும்.”

- திருமதி. கி. சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்

news
இந்திய செய்திகள்
மனநலப் பாதிப்பு தனி மனிதப் பிரச்சினையா?

வளரிளம் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத்திறன், உணர்வு ரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான். ஆரோக்கியமான தூக்கம், சீரான உடற்பயிற்சி, சக மனிதர்களை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் போன்ற ஆரோக்கியமான மனநலப் பழக்கங்கள் இந்தப் பருவத்தில்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன.”

- டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்

news
இந்திய செய்திகள்
எப்படி மொழிபெயர்ப்பது

ஒவ்வொரு சொல்லிலும் ஒரு வரலாறு வாழ்கிறது; ஒரு பண்பாடு வாழ்கிறது; ஒரு கனவு வாழ்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் அந்தச் சொல் தோன்றிய நிலத்தின் மண் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த மண்ணின் ஒரு துளியைக்கூடச் சிந்தாமல் சிதறாமல், அப்படியே அள்ளி மற்றொரு நிலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு மனத்தில் இருந்து மற்றொரு மனத்துக்கு, ஒரு பண்பாட்டில் இருந்து மற்றொரு பண்பாட்டுக்கு, ஒரு வரலாற்றில் இருந்து மற்றொரு வரலாற்றுக்கு, ஓர் உலகில் இருந்து மற்றோர் உலகுக்கு. அதே அழகு, அதே கனம், அதே வாசம், அதே உணர்வு, அதே மகிழ்ச்சி, அதே துக்கம், அதே ஏக்கம், அதே வலி ஓர் இதயத்திலிருந்து மற்றோர் இதயத்துக்குச் சென்றாக வேண்டும். நேர்மையாகவும் அழகாகவும் பார்க்க மிக எளிதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு சொல்லும் கனமானது. அந்தக் கனத்தைச் சுமந்துசெல்லும் வலுவை ஒரு மொழிபெயர்ப்பாளர் பெற வேண்டும்.”

- திரு. .கே. இராமானுஜன், மொழியியல் அறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்