news
இந்திய செய்திகள்
வரிவிலக்குக் கிடையாது!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளம் வருமான வரி விதிகளின் கீழ் வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 93 மறைமாவட்டங்கள் மற்றும் சபைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளிகளில் பணிசெய்யும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்கள் வருமானத்தை முழுவதுமாகத் தங்கள் மறைமாவட்டத்திற்கும், சபைகளுக்கும் கொடுத்து விடுகின்றார்கள். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்யப்படுகின்றது. அதனால், வருமான வரிவிலக்குத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நவம்பர் 7 அன்று வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

news
இந்திய செய்திகள்
இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியாவின் நான்கு மறைமாவட்டங்களான தமிழ்நாட்டின் வேலூர், மும்பையின் வசை, கொல்கத்தாவின் பாக்டோக்ரா ஆகியவற்றுக்குப் புதிய ஆயர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயரையும் நவம்பர் 9 அன்று திருத்தந்தை  பிரான்சிஸ் நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டற்குப் புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களையும், மும்பையின் வசை மறைமாவட்டப் புதிய ஆயராக அருள்தந்தை தாமஸ் டிசோசா அவர்களையும், கொல்கத்தாவின் பாக்டோக்ரா மறைமாவட்ட ஆயராக ஆயர் பால் அவர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்குத் துணை உதவி ஆயராக அருள்தந்தை அந்தோணி தாஸ் பிள்ளை அவர்களையும் நியமித்துள்ளார்.

news
இந்திய செய்திகள்
ஒவ்வொருவரும் நேர்மையுடன் இருந்தால் நம் தேசம் வலிமை பெறும்

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் நேர்மையோடும் உண்மையோடும் இருந்திட வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் சின்னச் சின்ன ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் நம்மையும் வாழ்வில் உயர்த்தும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும். நாம் பணியாற்றும் அலுவலகத்தில் நேர மேலாண்மையை நாம் சரியாகப் பின்பற்றினால், நம்மைப் பார்த்து சக ஊழியர்களும் பின்பற்றுவார்கள். யாராவது நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாமல், நம் மனமறிந்து உண்மையாகவும் விதிகளை மீறாமலும் செயல்பட்டால் நமக்கான இலக்கினை நம்மால் விரைந்து அடைய முடியும்.”

- திரு. வி. நந்தகுமார், .ஆர்.எஸ்., வருமான வரித்துறை ஆணையர்

news
இந்திய செய்திகள்
‘அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதே கடமை’

அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை நீதித்துறை பாதுகாக்கும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நம்பிக்கை. அத்துடன் நீதி பரிபாலன சேவையையும் நீதித்துறை பூர்த்தி செய்யும் என்றும் அரசமைப்புச் சட்டம் நம்புகிறது. அனைவருக்கும் எளிதாக நீதி கிடைப்பதும், அனைத்துக் குடிமக்களையும் அவர்களின் அந்தஸ்தைப் பார்க்காமல் சமமாக நடத்துவதும் அரசமைப்புச் சட்டப்படி நீதித்துறையின் கடமை.”

- திரு. சஞ்சீவ் கன்னா, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

news
இந்திய செய்திகள்
மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்கள் விரைவாக மாற வேண்டும்

ஆசிரியர்கள் இளையதலைமுறையினருக்குப் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின், கலாச்சாரத்தின் முக்கிய விழுமியங்களையும், நெறிகளையும் கற்பிக்க வேண்டும். ‘எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவைஎன்றும், ‘ஆழமான அறிவைப் பெறுதல் ஞானத்தை வளர்க்க உதவும்என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆழமான அறிவு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பொறுப்பு பற்றிய புரிதலையும், கற்கும் ஆர்வத்தையும் தூண்டும். இளைஞர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றைத் தேடவும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக மாறவும், இடர்களைக் குறைத்து வாய்ப்புகளைப் பெறவும் முயற்சிக்க வேண்டும்.”

- திரு. பவன்குமார் சிங், திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர்

news
இந்திய செய்திகள்
பணியிடத்தில் நேர்மை அவசியம்

பணியிடத்தில் நேர்மையாகப் பணியாற்றுவது அவசியம். அரசு நிர்வாகத்தில் மனிதாபிமான அணுகுமுறை இருக்க வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒற்றைச்சாளர முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் நேர்மையின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டும். திருவள்ளுவரின் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்எனும் குறளுக்கேற்ப அறத்துடன் பணியாற்ற வேண்டும்.”

- திரு. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்