news
இந்திய செய்திகள்
நீதித்துறை மீதான நம்பிக்கையை காக்க ஊழலை ஊக்குவிக்காதீர்கள்

நீதித்துறை மீது மக்கள் அலாதியான நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள். நீதித்துறையின் மாண்பு, மரியாதைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டுவிடாமல் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் திறம்படச் செயலாற்றுங்கள். உலக நடப்புகளை அலசி ஆராய நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்பதை வாழ்நாள் இலட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள கடமைகளையும், உரிமைகளையும் நிலைநாட்ட ஏழை, எளிய மக்களுக்காகச் சேவையாற்றுங்கள்.”

- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி

news
இந்திய செய்திகள்
பழங்குடியினர் வீடு கட்ட கூடுதல் நிதி

நாடு முழுவதும் பழங்குடியினத்தவருக்கு நிலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பல தலைமுறைகளாகக் காடுகளிலேயே வசித்து வரும் இந்த மக்களுக்கு காடுதான் வீடாக உள்ளது. இந்த உலகமும், காடும் இறைவன் தங்களுக்கு அளித்தவை என்று நம்பி வரும் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் வாழும் இடத்தைத் தங்களின் பெயரில் பதிவு செய்து பட்டா பெறுவதற்குத் தவறிவிட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை.”

- திருமதி. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
தொடரும் மணிப்பூர் கலவரம்!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி கிறித்துவர்களுக்கும் பெரும்பான்மை இந்துகளுக்கும் இடையே நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகளுக்கு மத்தியில், மூன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட கடத்தப்பட்ட ஆறு நபர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. நவம்பர் 12 அன்று 11  இந்துகள் கடத்தப்பட்டதற்குப் பழங்குடி கிறித்துவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்களில் 5 நபர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஆயுதக் குழுக்களின் பிடியிலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்..க்கள் வீடுகளுக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள் முதல்வரின் வீடு, அரசு சொத்துகள்மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையைக் கட்டுப்படுத்த இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

news
இந்திய செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு

மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நோட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடிய ஸ்டேஷனரிக் கடைகளைத் தவிர வேறு எந்தப் பெட்டிக் கடைகளையும் அமைக்க அனுமதிக்கக்கூடாது. இதை முழுமையாகக் காவல்துறை கட்டுப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். இதற்காகப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சி.பி.. அதிகாரி அடங்கிய சிறப்புக் குழுவை மத்திய-மாநில அரசுகள் நியமித்துக் கண்காணிக்க வேண்டும்.”                                                

- சென்னை உயர் நீதிமன்றம்

news
இந்திய செய்திகள்
‘வாழ்நாள் முழுவதும் கற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்’

வாழ்வில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் இளைஞர்கள் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் சமாளித்து, தொடர்ந்து கற்பதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளாமல், நேர்மையுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும்.”

- பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) முன்னாள் இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சாலை விபத்துகளால் இரத்ததான சேவை அதிகரிப்பு

சாலை விபத்துகளால் இரத்தத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இரத்ததானம் செய்ய பல இளைஞர்கள் இன்றைக்கு முன்வருகின்றனர். ஆனால், இயந்திரமயமான உலகம், வேகமான வாழ்க்கையில் அவசரத் தேவைக்காக அவர்களைத் தொடர்புகொள்வது எதிர்காலத்தில் கடினமாக இருக்கலாம். எனவே, தொடர்ந்து இரத்ததான முகாம்களை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

- திருமதி. சுதா சேஷய்யன், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்