news
கவிதை
அருள்வாழ்வில் அக அமைதி!

தன்னை மறந்த வாழ்வு வாழ்ந்தாள்!

தியாகத்தின் சின்னமாக ஒளிர்ந்தாள்

மலராய்ப் பூத்து மணம் வீசினாள்!

மனித வாழ்வுக்கு அழகு சேர்த்தாள்!

 

அன்பு என்றால் அவளின் நினைவு!

அமைதி என்றால் அவளின் குரல்!

அருள் என்றால் அவளின் முகம்!

கருணை  என்றால் அவளின் கொடை!

 

கடவுளை மட்டும் நேசித்தாள்

ஊமை  ஆயினும் உள்ளத்தில் பேசுவாள்!

அமைதியின் அவதாரம் அவளே!

உலகின் துன்பத்தை உற்றுநோக்கி!

உலகுக்குத் தன்னை அர்ப்பணித்தாள்!

 

அகவை இருபத்தி நான்கில் உலகைப்  பிரிந்தாள்!

வானில் சென்று  புனிதம் பெற்றாள்!

லிஸ்யூ  நகரின் தேவதை அவளே!

அவளின் நூற்றாண்டைக் கொண்டாடுவோம்

நம் மண்ணிலே!

மனிதம் காப்போம் என்றென்றுமே!…

news
கவிதை
கவிதைச் சாரல்கள்

அப்போதும்

இப்போதும்

ஏன் எப்போதுமே

தெய்வ தரிசனம்

எல்லாம்

தெய்வங்கள் இல்லாக்

கோவில்களில்

மட்டுமே!

தெய்வங்களோ

வீதிகள்தோறும்

சாமானியர்களோடு

சரிசமமாய்

வீதி உலாவில்!

 

விதி விலக்குகள்

விளங்காததுதான்

விவரங்கள்

தெரியும் வரை!

 

புன்னகை

நேர்மறை உணர்வின்

ஆயுதம்!

கோபம்

எதிர்மறை உணர்வின்

ஆரம்பம்!

உணர்வுகளின்

கூட்டுப் பலனே

ஆரோக்கியமான

உள்ளத்தின்

மொத்த எடை!

 

பொறாமைப்பட்டால்

பொலிவிழந்து

போவாய்!

ஆணவம் கொண்டால்

அழகு இழப்பாய்!

சீறிப்பாய்ந்தால்

சீர்மை இழப்பாய்!

புறங்கூறித் திரிந்தால் 

அகம் இழப்பாய்!

திமிறினால்

திறன் இழப்பாய்!

அன்பு பொலிவாக்கும்!

தாழ்ச்சி

அழகு சேர்க்கும்!

சாந்தம் சாந்தி தரும்!

பணிவு உயர்வு தரும்!

 

நேரங்கள் எல்லாம்

எதிர்காலத்தையும்

நினைவுகள்

எல்லாம்

கடந்த

காலத்தையுமே

சுற்றிக்

கொண்டிருக்க

நிகழ்காலத்தைப்

பற்றி

நினைக்க

நேரத்திற்கே நேரமில்லை!

 

பலவீனம்

பழி வாங்கும்!

வலிமை

மன்னிக்கும்!

அறிவு

பொருட்படுத்தாது!

பிறரது

குறைகளையும்

உதாசீனங்களையும்!

 

தெய்வங்கள்கூட

அவ்வப்போது

தவறிவிடுகின்றன!

பக்தர்களின்

தீவிர அன்புக்குப்

பதில் தரத் தெரியாமல்

திணறி

விடுகின்றன!

 

விமர்சனங்களைக் கல்லாக்கி

மனத்தைக் கடலாக்கும்

நுட்பம் அறிந்தோர்

வாழ்க்கைப் பெருங்கடலின் 

சுனாமியிலும்

பெருஞ்சூழலிலும்

சிக்கிச்  சுழல்வதில்லை!

 

நீண்ட நாள்

புறக்கணிப்பும்

நெடுநாள்

உதாசீனங்களும்

மன்னிக்கப்

படுவதில்லை!

வாழ்நாள் மன்னிப்பும்

நெடுநாள்

ஏற்புடைமையும்

என்றுமே

மறக்கப்

படுவதில்லை!

news
கவிதை
காமநாயக்கன்பட்டி புதுமையின் தாய்!

கோவில்பட்டி கடந்து துறையூர் வந்ததும்

தூரத்தில் அழகிய இரு கோபுரங்கள்;

இயேசுவைக் காணச் சென்ற அரசர்களுக்கு

வழிகாட்டிய வால்நட்சத்திரம்போல் விலாசங்கள்!

 

ஆலயத்தில் நுழைந்தபோது உயரத்தில்

பரலோக அன்னை அரசியாக அரியணையில்;

செபமாலைத் தோட்டத்தின் வாயிலில்

விண்ணக மண்ணக அரசியே வாழ்க!

 

ஆழ்ந்து செபம் செய்கையில் என்னை

ஈன்றவள் சொல்லிய வார்த்தை ஞாபகம்

உன் கையில் உள்ள இரத்தம் வழியும்

மருக்கள் சரியாகக் கும்பிடு;

சேவை செய்துவிட்டு வா!”

 

வற்றாத தீர்த்தக்கிணற்றில் தீர்த்தமெடுத்து

மூன்று முறை ஊற்றிக்கொண்டேன் தலையில்;

இருகைகூப்பி முகம் குப்புற விழுந்தேன் தரையில்!

 

வேண்டுதல் நிறைவேற்றிய சில நாள்களில்

கைகளில் மாற்றம்;

இரத்தம் வழிந்த மருக்களின் சீற்றம் 

சில்லாக உடைந்து காணாமல்போனது!

 

நலமடைந்த கைகளால் பரலோக அன்னைக்கு

என்ன காணிக்கைக் கொடுத்தால் தகும்?

அன்னையின் தேரினை தரையில் படாமல்

என் கைகளின் மேல் உருட்டி வந்தாலும் தகாதே!

 

தயங்கிக் கேட்ட வேண்டுதல்கள்

இப்போதெல்லாம் எனை

ஈன்றவளிடம் கேட்பதுபோல தயங்காமல் கேட்கிறேன்;

கேட்ட வரங்கள் எல்லாம் கிடைக்குது

கோடி மலர்கள் அவள் பாதம் தேடுது!

       

news
கவிதை
சுற்றுச்சூழல் காப்போம்! போதை ஒழிப்போம்!

புகையும் குப்பையும் இல்லாமல்

                புவியைக் காப்போம் தோழர்களே!

பகையாம் என்றும் காற்றுமாசு,

                புரிந்து வாழ்வோம் தோழர்களே!

சுத்த மான குடிநீரைக்

                சூடு படுத்திக் குடிப்போமே!

சுற்றுப் புறத்தைத் தூய்மையாய்

                சுறுசுறுப் புடனே வைப்போமே

கண்ட கண்ட இடங்களிலே

                குவியும் குப்பை வேண்டாமே!

அண்டி டாமல் கொசுக்களையும்

                அன்றா டம்நாம் ஒழிப்போமே!

தெரிவின் சுத்தம் மிகத்தேவை!

                தெளிந்த நீர்நிலை வேண்டாமோ?

அருகிச் செல்லும் நோய்நொடிகள்

                அழுகிற வீட்டை வைத்தாலே!

சத்தும் சுத்தமும் நிறைந்துள்ள

                சரிவிக தந்து உணவுகளை

முத்தாய் உண்டு முழுநலத்தை

                முறையாய் உயர்த்தி வாழ்வீரே!

சேறும் சகதியும் சேராமல்

                சிறக்கும் சுற்றுச் சூழல்கள்

மாறும் போதே நல்வாழ்வு

                மலரும் என்பதை மறவமே!

போதை இல்லா உலகத்தைப்

                புகலிடம் ஆக்கி மகிழ்வீரே!

பாதை மாறும் போக்கெல்லாம்

                படர வேண்டாம் நண்பர்களே!

உடலைக் கெடுக்கும் குடிப்பழக்கம்

                உறவைக் கெடுக்கும் போதைவழி!

விடமாய் மாறி உயிரழிக்கும்

                விட்டிடு கொடிய இப்பழக்கம்!

மனத்தின் அமைதி தனையிழந்து

                மாண்பைக் கெடுக்கும்

                போதைவழி

மனிதன் என்ற நிலைமாற்றி

                மழுங்க டிக்கும் குடிப்பழக்கம்!

போதை மருந்து ஊசிகளும்

                பொசுக்கிப் போடும்

                உடல்நலத்தை!

வேதனை தந்திடும் போதையினை

                வெறுத்து ஒழிக்க நீமுயலு!

இயற்கைப் பேணி இன்புறுவீர்

                இனிய உடல்நலம் காத்திடுவீர்!

அயர்வில் லாத நல்வாழ்வை     

                அளிக்கும் போதே விட்டிடுவீர்!

இறைவன் தந்தை இவ்வுலகை

                இனிமேல் சேர வைப்போமே!

நிறைவாய் வாழ எந்நாளும்

                நல்ல சூழல் காப்போமே!

news
கவிதை
சிந்தி ‘ய்யா’

ஒவ்வொரு

சுதந்திர தினத்தின்போதும்

கொடி மட்டுமே

கம்பத்தின் உச்சியில்

சுதந்திரம் என்னவோ

பாதி கம்பத்தில்தான்...!

 

அன்று

சுதந்திர தாகம் கொண்டோரின்

தொண்டைக் குழிகள்

இன்னமும்

அடிமை இந்தியர்களின்

இரத்தத்தால்தான்

நனைகின்றன...!

 

அன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபத்தானவைகள்

என்றுணர்ந்து

வெட்டி வீசினோம்...

இன்றைய

அடிமைச் சங்கிலிகளை

ஆபரணம்போல்

அணிந்துகொண்டால்

எப்படி அறுத்தெறிய...?

 

சுதந்திரம் கிடைத்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்

பாரத மாதா எழுபத்தொன்பது ஆண்டுகளாகவே

தனது கண்ணீரைத்

துடைக்கும்படியான

ஒரு குழந்தையை

ஏன் பெற்றெடுக்கவில்லை

என்பது கேள்விக்குறிதான்...!

 

இன்னமும்

துப்பாக்கிச் சத்தத்தில்

பதறி எழும்

குழந்தைகளிடம்

எப்படிச் சொல்ல

நாம் சுதந்திர நாட்டில்தான்

வாழ்கிறோம் என்பதை....?

 

இந்தியாவின்

நீர்நிலைகள் கூட

சில இந்தியர்களின்

தாகம் தீர்க்காமலே

கடலுக்குள்

சங்கமிக்கும் சோகத்தை

யாரிடம் சொல்லி அழ....?

 

தீபகற்ப நாட்டில்

தனித்தனித் தீவுகளாக வாழும்

சுதந்திர இந்தியர்களை

மூழ்காமல் காக்க

மீண்டுமோர்

அந்நியப் படையெடுப்பு

வேண்டும் என்பதே

நிதர்சனமான உண்மை...!

 

பழைய

காலடித் தடங்களையும்

அழிக்காத

புதிய இந்தியாவின்

பாதையில்தான்

காந்தியின் கைத்தடியும்

பாதுகாப்பைத் தரும்....!

 

பெருந்தலைவர்கள்

கண்ட கனவெல்லாம்

பலிக்கும்படி

இனியாவது

விழித்துக்கொள்ளட்டும்

என் இந்தியா....!

 

ஒரே குடையின்

கீழே இருக்கட்டும்

என் பாரதம்....!

அதற்காகத்

துருபிடித்த

கைப்பிடிக் கம்பிகளை

மாற்றக்கூடாது

என யார் சொன்னது...?

சிந்திப்போம்!

news
கவிதை
மதுரைப் பேராயர் வருகவே! ‘சாமி முத்தே!’

குற்றாலச் சாரல்மழை குளுமைப் பேச்சில்,

    நெல்லைத்தமிழ் மணப்பா(ங்)கு ஆளுமை வீச்சில்,

(கீ) வண்டானம் சுற்றிநீதிமான்போல் பனைசெழிக்கும்

    சிற்றாலைகள் கிணற்றுநீரால் பாசனம் கொழிக்கும்

நெய்தல்தவிர்த்து நாலுவகை ஒருங்கமை பூமி!

    அத்தைஅருள் சகோசெசிலியின் குரு! வா! ஊக்கம்!

அந்நாள்பணி ஆரோக்கிய சாமியின் ஈர்ப்பு

    இந்நாள்நீயீர் மதுரைப்பேர் ஆயர்காப்பு!

பாளை(யின்)பாது காவலரின் வழிப்பா தையில்நீர்!

    மநாயக் கன்பட்டி அன்னையில் மடியும்

பாளைமடல் விரிந்தேற்கும்புளியைப் புனிதரும்

    ‘தமிழ்வையையில் தலைமையேற்க வைத்தார் இனிதே!

காளை போலத் துடிப்பு! ‘இருத யராஜ்வின் பாங்கு (பான்மை)

    ஏழ்மை இனிமை! ஆன்மிக வளர்ச்சி! மேன்மை

கோல்வழுவா (நெடு) செழியன்நகர் உம்செங் கோண்மை!

    கைகுவிக்கும்! வைகையே!இனி எழுந்து கூடலில்!

கொன்சால் வாஸ்திரு அவையைநட்டபூமி!

    தமிழ்சந்நியா சிபோல்வாழ்ந்த தத்துவர் பூமி!

நம்பிக்கையால் வேதியர்கள் மறைப்பணி செய்தார்

    மன்னர்களும் உவந்துபோற்றிய ஆன்மிகப் பூமி

பன்னாட்டார் வணிகநோக்கில் மறைப்பணி வளர்த்தார்!

    ஒருத்திக் கொருத்த தமிழ்பண்பைச் சொன்னஆனந்தர்

 பனுவல் நூல் பலகண்டபெஸ்கிமுனிவர்

    பல் பணியால் தடைகடந்து உயர்ந்தார்! அன்றே!

அறுபதாண்டுகள்பதுரவதோவிசுவாச ஆணையம்

    அருமாந்த திரு அவையில் தீயவை குழப்பம்

புதுமறைதிரு அவைபிறக்கவே மதுரைச் சீமை

    மறைமாவட்டம் மறைமாநிலம் பிறந்தது கேளீர்!

அருமை மிகு அலக்ஸ் காளோஜ் அதிபர்! வித்து!

    பின்னாளிலும்திருச்சி, மதுரைமுதலாயர் சொத்து

சிறப்புடையஜான்பார்த்தேஅகஸ்டீன் பெசாந்த்

    ‘லியோர்னாடுவழிமுறைஆயர்இறைப்பணி முகிழ்ந்து!

சாதீயத் துதடுப்புச் சுவர்ஒழித்தலியோர்னாடு

     ‘செம்மறிப்பார் வைசிங்கத் துணிவில்திரவியம்

காட்சிக்கெளியர், அறிவியலாளர், ‘ஞானா திக்கம்

    ஐக்கியசிறு பான்மை குரல்மரியானுஸ் ஆரோ

தூரநோக்கு, தொடர் முயற்சி, உளவியல்பெர்னாண்டோ

    விவிலியத்து சுவடிபொருள் கை ‘(கோ) பாப்பு சாமி

ஈரம் நிறை, ஏழ்மைஇனிமைகிறித்துவின் மதிப்பில்

    சங்கம்வளர் மதுரைப்பேராயர்! வருகசாமி முத்தே!!’